தெளிவு, அறிவு, உணர்ச்சி ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையிலே ஏற்படும் ஓர் உந்துசக்தியே செயலாகப் பயன்படும். இந்த நிலை ஏற்படுவதற்கு மனதிற்குத் தெளிவைக் கொடுக்க வேண்டும்.அறிவை கூர்மைப்படுத்தி உணர்வுகளைக் கொழுந்துவிட்டு எரியச் செய்ய வேண்டும். முயற்சிக்கு இம்மூன்றும் உறுதுணையாக இருக்கும். முயற்சி தான் நம்மை முழுமனிதனாக ஆக்கும்.
வாழ்வின் மகத்துவம் முயற்சி செய்வதில் தான் இருக்கிறது. அறிவை வளரச் செய்வதிலும் துடிப்புடன் நின்றால்தான் நிமிர்ந்து நின்று வளம் பெற முடியும்.‘கிரேக்க சமுதாயத்தின் ஏற்றம் மிகுந்த இளைஞர்களே, வருங்கால கனவான்களே, நீங்கள் வீரர்களாக இருந்தால் மட்டும் போதாது; அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த அறிவு இப்பூவுலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. அதைப் பெறுவதற்குத்தான் உங்களை எல்லாம் அழைக்கிறேன்’ இந்தக் குரல் வேறு யாரிடமிருந்தும் வரவில்லை.
சிந்தித்துச் சிந்தித்துச் தெளிவடைந்த சீர்திருத்தச் செம்மல், ஏதன்ஸ் நகரமாந்தர் அனைவர் உள்ளங்களிலும் உற்சாகத்தையும், ஏதென்ஸ் நகர வீதிகளில் கலகலப்பையும் உண்டாக்கிய சிம்மக்குரலோன் சாக்ரடிஸிடமிருந்துதான் வெளிவந்தது.
அறிவு எங்கு சிதறிக்கிடந்தாலும், அடி வானத்திற்கு அப்பாலிருந்தாலும், அதைப் பெறுவதற்கு முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏன் முயற்சி செய்ய வேண்டும் என்ற வினா எழுவது இயல்பு. இதற்கு விடை காண்பது முக்கியம்.
முயற்சிதான் வாழ்வதின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தன்னைத் தானே உணர்ந்து கொள்வதற்கு வழி செய்கிறது. நாம் செய்யும் எல்லா முயற்சிகளிலும் நம்மை நாமே புரிந்து கொள்வது மகத்தானது.
நம்மை நாம் புரிந்து கொள்ளாதவரையில் நமக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்திகளினால் பயன் எதுவும் ஏற்படாது. பிறப்பு இயற்கையானது போலவே, முயற்சியும் நம்முடனேயே இருந்து கொண்டிருக்கிறது.
வாழ்வதற்கு ஒன்றுமே இல்லை என்று நினைக்கும்போது, வாழ்க்கையிலும் எதுவும் இல்லாமல் போய் விடுகிறது. அப்பொழுது முயற்சிக்கே இடமில்லை.முயற்சி சமுதாய மறுமலர்ச்சிக்கு சக்தி வாய்ந்த சாதனமாக இருக்கிறது. சமுதாயத்தைச் சீர்படுத்துவதே முயற்சிதான். முயற்சி முதலில் அறியாமையை விரட்டுகிறது.
அறியாமை விரட்டப்பட்டால் புது எழுச்சி தோன்றுகிறது. முயற்சி நம்முடைய கடமையைச் சுட்டிக்காட்டி பொறுப்புணர்ச்சியையும் கடமையைச் சுட்டிக்காட்டி பொறுப்புணர்ச்சியையும், விசுவாசத்தையும் ஏற்படுத்தித் தருகிறது.
விரிவாகப் பார்க்கும்போது முயற்சி நம்மைச் செம்மைப்படுத்துவதற்கு மாபெரும் கருவியாக இருந்துவருகிறது.
வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதற்கு இது ஒரு ஊன்றுகோலாக இருக்கிறது.
வாழ்வின் மகத்துவத்தை எடுத்துக்கூறுவதற்கும், உணர்வதற்கும் ஒரு சக்தி வாய்ந்த சாதனமாக இருப்பது முயற்சிதான்.
முயற்சி செய்தால்தான் வாழ்வதன் மகத்துவம் தெரியும். வாழ்க்கையில் எப்போது நாம் வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்குப் போராட வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறோமோ -
எப்பொழுது உலகில் நாம் முயன்று சாதிப்பதற்கு ஒன்றுமில்லை எண்ணுகிறோமோ அப்பொழுதுதே நம்முடைய வீழ்ச்சி ஆரம்பமாகிவிடும்.
எந்த நாடு முன்னேற்றத்தின் விளிம்பை தொட்டுவிட்டோம் என்று இறுமாந்தி நிற்கிறதோ, அதனுடைய அர்த்தம் அந்த நாடு அழிவை நோக்கிச் செல்லும் வழியாக இறங்க ஆரம்பித்துவிட்டது என்பதாகும்.
எந்த நாடு எனக்கு எதிரிகளே இல்லை எனவும், தன்னை எதிர்க்கும் சக்தி யாருக்கும் இல்லை என்னும் முனைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறதோ அது அடிமையாகும் நாட்களை நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.
இதனுடைய விரிவான விளக்கம் என்னவென்றால் -வாழ்க்கை முழுவதும் முயற்சி செய்ய வேண்டும் என்னும் தனிமனித தத்துவத்தை ஒரு நாட்டை அடிப்படையாக வைத்து விரிவான கோணத்தில் பார்ப்பதாகும்.நாட்டின் வளர்ச்சி எந்த விதத்திலும் எல்லையைத் தொட்டுவிடக்கூடாது. முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கும் எல்லையே இல்லை.
இது மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஸ்தம்பித்து நின்று விடக்கூடாது ஏன் என்றால் -
முன்னேற்றம் ஏற்படாத இழப்பு ஒரு புறமிருக்க, அந்த தேக்க நிலையில் ஏற்படும் இழப்பு இரட்டிப்புச் சரிவை ஏற்படுத்திவிடும். இதற்கு உதாரணமாக ரோமப் பேரரசையும் அதன் நாகரிகத்தையும் கூற முடியும். ரோமானியர்கள், உலகமே ரோம் நகரம் என்ற அச்சில் தான் சுழன்று கொண்டிருக்கிறது என்று எண்ணினார்கள். உலக நாகரிகத்தின் எல்லையே ரோம் தான் என்று கருதினார்கள்.
அதன்பயனாக அவர்கள் உண்பதிலும் உல்லாசம் அனுபவிப்பதிலும் உறங்குவதிலும் தீவிரம் காட்டிய அளவு -உழைப்பதில் காட்டவில்லை. இதன் காரணமாக ரோமப் பேரரசும் அதன் நாகரிகமும் காலப்போக்கில் முகவரி தெரியமலே போய்விட்டது.
நாம் மேற்கொள்ளும் முயற்சி வாழ்க்கை முழுவதும் பரந்து விரிந்து இருக்க வேண்டும். நமது அதிகபட்சத் திறமையினால் முயற்சியின் பலன் விரைவிலே கிடைத்து விட்டாலும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
முயற்சி முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது வாழ்க்கையின் எல்லையும் குறுகிவிடும் என்பதனை என்றும் நினைவில் வைக்க வேண்டும்.
வாழ்வின் மகத்துவம் முயற்சி செய்வதில் தான் இருக்கிறது. அறிவை வளரச் செய்வதிலும் துடிப்புடன் நின்றால்தான் நிமிர்ந்து நின்று வளம் பெற முடியும்.‘கிரேக்க சமுதாயத்தின் ஏற்றம் மிகுந்த இளைஞர்களே, வருங்கால கனவான்களே, நீங்கள் வீரர்களாக இருந்தால் மட்டும் போதாது; அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த அறிவு இப்பூவுலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. அதைப் பெறுவதற்குத்தான் உங்களை எல்லாம் அழைக்கிறேன்’ இந்தக் குரல் வேறு யாரிடமிருந்தும் வரவில்லை.
சிந்தித்துச் சிந்தித்துச் தெளிவடைந்த சீர்திருத்தச் செம்மல், ஏதன்ஸ் நகரமாந்தர் அனைவர் உள்ளங்களிலும் உற்சாகத்தையும், ஏதென்ஸ் நகர வீதிகளில் கலகலப்பையும் உண்டாக்கிய சிம்மக்குரலோன் சாக்ரடிஸிடமிருந்துதான் வெளிவந்தது.
அறிவு எங்கு சிதறிக்கிடந்தாலும், அடி வானத்திற்கு அப்பாலிருந்தாலும், அதைப் பெறுவதற்கு முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏன் முயற்சி செய்ய வேண்டும் என்ற வினா எழுவது இயல்பு. இதற்கு விடை காண்பது முக்கியம்.
முயற்சிதான் வாழ்வதின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தன்னைத் தானே உணர்ந்து கொள்வதற்கு வழி செய்கிறது. நாம் செய்யும் எல்லா முயற்சிகளிலும் நம்மை நாமே புரிந்து கொள்வது மகத்தானது.
நம்மை நாம் புரிந்து கொள்ளாதவரையில் நமக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்திகளினால் பயன் எதுவும் ஏற்படாது. பிறப்பு இயற்கையானது போலவே, முயற்சியும் நம்முடனேயே இருந்து கொண்டிருக்கிறது.
வாழ்வதற்கு ஒன்றுமே இல்லை என்று நினைக்கும்போது, வாழ்க்கையிலும் எதுவும் இல்லாமல் போய் விடுகிறது. அப்பொழுது முயற்சிக்கே இடமில்லை.முயற்சி சமுதாய மறுமலர்ச்சிக்கு சக்தி வாய்ந்த சாதனமாக இருக்கிறது. சமுதாயத்தைச் சீர்படுத்துவதே முயற்சிதான். முயற்சி முதலில் அறியாமையை விரட்டுகிறது.
அறியாமை விரட்டப்பட்டால் புது எழுச்சி தோன்றுகிறது. முயற்சி நம்முடைய கடமையைச் சுட்டிக்காட்டி பொறுப்புணர்ச்சியையும் கடமையைச் சுட்டிக்காட்டி பொறுப்புணர்ச்சியையும், விசுவாசத்தையும் ஏற்படுத்தித் தருகிறது.
விரிவாகப் பார்க்கும்போது முயற்சி நம்மைச் செம்மைப்படுத்துவதற்கு மாபெரும் கருவியாக இருந்துவருகிறது.
வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதற்கு இது ஒரு ஊன்றுகோலாக இருக்கிறது.
வாழ்வின் மகத்துவத்தை எடுத்துக்கூறுவதற்கும், உணர்வதற்கும் ஒரு சக்தி வாய்ந்த சாதனமாக இருப்பது முயற்சிதான்.
முயற்சி செய்தால்தான் வாழ்வதன் மகத்துவம் தெரியும். வாழ்க்கையில் எப்போது நாம் வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்குப் போராட வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறோமோ -
எப்பொழுது உலகில் நாம் முயன்று சாதிப்பதற்கு ஒன்றுமில்லை எண்ணுகிறோமோ அப்பொழுதுதே நம்முடைய வீழ்ச்சி ஆரம்பமாகிவிடும்.
எந்த நாடு முன்னேற்றத்தின் விளிம்பை தொட்டுவிட்டோம் என்று இறுமாந்தி நிற்கிறதோ, அதனுடைய அர்த்தம் அந்த நாடு அழிவை நோக்கிச் செல்லும் வழியாக இறங்க ஆரம்பித்துவிட்டது என்பதாகும்.
எந்த நாடு எனக்கு எதிரிகளே இல்லை எனவும், தன்னை எதிர்க்கும் சக்தி யாருக்கும் இல்லை என்னும் முனைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறதோ அது அடிமையாகும் நாட்களை நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.
இதனுடைய விரிவான விளக்கம் என்னவென்றால் -வாழ்க்கை முழுவதும் முயற்சி செய்ய வேண்டும் என்னும் தனிமனித தத்துவத்தை ஒரு நாட்டை அடிப்படையாக வைத்து விரிவான கோணத்தில் பார்ப்பதாகும்.நாட்டின் வளர்ச்சி எந்த விதத்திலும் எல்லையைத் தொட்டுவிடக்கூடாது. முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கும் எல்லையே இல்லை.
இது மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஸ்தம்பித்து நின்று விடக்கூடாது ஏன் என்றால் -
முன்னேற்றம் ஏற்படாத இழப்பு ஒரு புறமிருக்க, அந்த தேக்க நிலையில் ஏற்படும் இழப்பு இரட்டிப்புச் சரிவை ஏற்படுத்திவிடும். இதற்கு உதாரணமாக ரோமப் பேரரசையும் அதன் நாகரிகத்தையும் கூற முடியும். ரோமானியர்கள், உலகமே ரோம் நகரம் என்ற அச்சில் தான் சுழன்று கொண்டிருக்கிறது என்று எண்ணினார்கள். உலக நாகரிகத்தின் எல்லையே ரோம் தான் என்று கருதினார்கள்.
அதன்பயனாக அவர்கள் உண்பதிலும் உல்லாசம் அனுபவிப்பதிலும் உறங்குவதிலும் தீவிரம் காட்டிய அளவு -உழைப்பதில் காட்டவில்லை. இதன் காரணமாக ரோமப் பேரரசும் அதன் நாகரிகமும் காலப்போக்கில் முகவரி தெரியமலே போய்விட்டது.
நாம் மேற்கொள்ளும் முயற்சி வாழ்க்கை முழுவதும் பரந்து விரிந்து இருக்க வேண்டும். நமது அதிகபட்சத் திறமையினால் முயற்சியின் பலன் விரைவிலே கிடைத்து விட்டாலும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
முயற்சி முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது வாழ்க்கையின் எல்லையும் குறுகிவிடும் என்பதனை என்றும் நினைவில் வைக்க வேண்டும்.