எண்ணித்துணிக கருமம் - ஒரு செயலைச் செய்வதற்கு முன் நன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள். முடிவெடுத்த பின் அதுபற்றி யோசித்துப் பயன் இல்லை என்பதை விளக்குவதாக இந்த முதுமொழி அமைந்துள்ளது.
சிலருக்கு ஒருசில முடிவுகளை எடுப்பதில் மிகுந்த குழப்பம் காணப்படும். இப்படிச் செய்யலாமா? அல்லது வேறு எப்படி இதனைக் கையாளலாம்? என்பன போன்ற பல ஆயிரம் கேள்விகள் மனதில் எழும்.
இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுவது மனித இயல்புதான். இதனால் ஒன்றும் யாரும் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டியதில்லை.
மனித வாழ்க்கையில் உறுதியான முடிவெடுக்க முடியாத மனோநிலைக்கு மிக முக்கிய காரணம் மனத்தில் ஏற்படும் சலனங்கள் அல்லது சஞ்சலங்கள் என்று கூறலாம். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி, அமைதியான சலனமற்ற நிலையைப் பெறுவதற்குத் தேவை தியானம். தியானம் மேற்கொள்ளத் தகுந்த நேரம், எளிய முறையிலான தியானத்தை கடைபிடிப்பது எப்படி? என்று பார்ப்போம்.
எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் தாங்கள் சார்ந்த அல்லது அதிகம் வழிபடக்கூடிய கடவுளிடத்தில் பக்தி கொண்டவர்களாக இருப்பார்களேயானால், கடவுளை நினைத்து தினந்தோறும் குறைந்தது 15 நிமிட நேரமாவது தியானம் மேற்கொள்ளலாம்.
பெருகிவிட்ட அறிவியல் சாதனங்களுக்கு இடையேயும், போக்குவரத்து இரைச்சல்களுக்கு இடையேயும் அன்றாடம் பயணித்து, பல்வேறு புதிய நபர்களை சந்தித்து அன்றாட வேலைகளை நிறைவேற்றி வருபவர்களுக்கு குழப்பங்கள் ஏற்படுவதில் புதிர் ஒன்றுமில்லை. குறிப்பிட்ட ஒரு பிரச்சினையை எப்படி எதிர்கொண்டு, அவற்றிலிருந்து சுமூகமாக மீள்வதுடன் சரியான ஒரு தீர்வை கொடுப்பவர்களே சாதித்து வெற்றி பெறுகிறார்கள்.
தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கத் தேவை மனோதிடம். இந்த மனோதிடத்தைப் பெறுவதற்கு மிகச்சிறந்த வழிகளில் முக்கியமானது தியானம் என்றால் மிகையில்லை.
தியானத்தை எப்படிச் செய்வது? அதற்கென்று விதிமுறைகள் ஏதுமுண்டா? என்று கேட்டால் பலர் பல்வேறுபட்ட கருத்துகளை தெரிவிப்பார்கள்.
அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் எளிமையான முறையில் தங்களின் குடும்பச் சூழ்நிலைக்கேற்றவாறு அமைதி ஒன்றை மட்டுமே கடைபிடித்து தியானித்தாலே போதும். வாழ்வில் பல்வேறு பலன்களை அடையலாம்.
பொதுவாக தியானம் செய்வதற்கு ஏற்ற நேரமாக அதிகாலை 4.00 முதல் 5.00 மணி வரையிலான நேரத்தைத் தேர்வு செய்யலாம். இந்த வேளையைத் தான் பிரம்ம முகூர்த்தம் என்கிறார்கள்.
சிறியதாக ஒரு வெள்ளை நிறத்திலான தரைவிரிப்பை விரித்து அதன் மீது அமர்ந்து கொள்தல் வேண்டும். எதிரே ஒரு சிறிய விளக்கையோ அல்லது சிறு மெழுகுவர்த்தியையோ ஏற்றினால் உசிதம். வெண்மை நிறம் பொதுவாகவே தூய்மை, சமாதானம் என்பதைக் குறிப்பதால் பெரியோர்களான நம் முன்னோர் வெண்ணிற விரிப்பை பயன்படுத்தி வந்துள்ளனர். இல்லாவிட்டாலும் வெளிர் நிறங்களுடன் எந்த வண்ணத்திலான விரிப்பையும் அவரவர் வசதிக்கேற்ப உபயோகிக்கலாம்.
யோகிகள், முனிவர்கள் போன்றோர் வனங்களில் இறைவனை நோக்கி தவம் இருக்கும் போது புலித்தோல், மான்தோல் போன்ற மிருகங்களின் தோல் மீது அமர்ந்து தியானித்தனர் என்பதை புராணங்கள் வாயிலாக அறிகிறோம். ஒவ்வொரு மிருகங்களின் தோல் மீதும் அமர்ந்து தியானிப்பதால் வெவ்வேறு விதமான தியான பலன்களை அடைவதாக பரவலான கருத்து நிலவுகிறது.
வீடுகளில் தியானம் செய்வதற்கு மிருகங்களின் தோல் தேவையில்லை. சாதாரணமாக அமர்ந்து உங்களுக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள அகல் விளக்கை நோக்கி ஒரு 5 நிமிடம் வேறு எந்த புற தடங்கல்களையும் சிந்திக்காமல் இருக்கவும். இஷ்ட தெய்வங்களையோ அல்லது ஒருநிலைப்படுத்த தேவையான சிந்தனையையோ நோக்கி கண்களை மெதுவாக மூட வேண்டும். அதிகாலை நேரம் என்பதால் பெரிய அளவில் மற்ற ஒலிகள் உங்கள் சிந்தனையை பாதிக்க வாய்ப்பில்லை. ஒரு சில நிமிடங்களில் உங்களுக்குள்ளாகவே இருக்கும் ஞானத்தை, மனோரீதியிலான தத்துவத்தை உணரத் தொடங்குவீர்கள்.
தொடக்கத்தில் ஒரு சில தினங்களுக்கு சிந்தனை ஒருநிலைப்படத் தவறினாலும் கவலை வேண்டாம். அடுத்தடுத்த நாட்களில் இதேபான்ற நிலையைக் கடைபிடித்தால், காலப்போக்கில் சிந்தனை உங்கள் கட்டுப்பாட்டில் வரும். உங்களின் மனோதிடம் தானாகவே அதிகரிக்கத் தொடங்கும். மனத்தில் ஏற்படும் குழப்பங்களை எதிர்கொள்ளும் துணிவு பிறக்கும். 99 சதவீத பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு கூடுமானவரை சாதகமான தீர்வுகளை நீங்கள் காண்பீர்கள் என்பது திண்ணம்.
இயந்திரகதியான இவ்வுலகில் இறைநம்பிக்கையுடன் கூடிய தியானத்திற்கும் சற்றே நேரம் ஒதுக்கி இன்புறுவீர்களாக!
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்"
March 20, 2010
உணவிற்கும் குணத்திற்கும் தொடர்புண்டு.
எல்லோரும் தான் சாப்பிடுகின்றார்கள். ஆனால் ஆரோக்கியமாக சாப்பிடுபவர்கள் குறைந்தளவானவர்களே. என்ன சாப்பிடுகிறோம் என்பது போலவே அதை எப்படிச் சாப்பிடுகின்றோம்.... சாப்பிடும் போது நம் உடலின் தன்மை என்ன போன்றவற்றையும் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள்.
ஏனெனில் நாம் சாப்பிடும் பொருட்கள் வெறுமனே உடலுக்கு ஊட்டம் தருவதோடு நின்று விடுவதில்லை. நம் குணத்தை தீர்மானிப்பதிலும் அவை கணிசமான அளவு பங்கு வகிக்கின்றன. உதாரணமாக ஒருவர் பால், நெய், காய்கள், பழங்கள், கீரைகள், தானியங்கள், பருப்பவகைகள் என சாத்வீக உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் அவர் அமைதியான குணம் கொண்டவராக இருப்பார். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பதட்டம் அடையாமல் தெளிவாக கிரகித்து முடிவுகள் எடுக்கும் பக்குவம் கொண்டவராக இருப்பார்.
உறைப்பு, உப்பு, புளிப்பு என அழுத்தமான உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டு, மாமிசங்கள், எண்ணையில் பொரித்த உணவுகளை விரும்பி உண்பவர்கள் எப்போதும் பதட்டம் உள்ளவர்களாக காணப்படுவார்கள். உணர்ச்சிவசப்பட்டு தப்பான முடிவுகளை எடுத்தவிட்டு பின்பு வருத்தப்பட்டு விட்டு, மீண்டும் அதே தவறைச் செய்வார்கள்.
அசுத்தமான உணவு, புளித்துப்போனது, குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குளிர்ந்திருக்கும் உணவுகள், பழைய உணவு, டிகட்டுப்போன உணவு போன்றவற்றை உண்பவர்கள் மந்தமாக இருப்பார்கள். நல்லது, கெட்டது தெரியாமல் எதையும் நம்புவார்கள்.
ஏனெனில் நாம் சாப்பிடும் பொருட்கள் வெறுமனே உடலுக்கு ஊட்டம் தருவதோடு நின்று விடுவதில்லை. நம் குணத்தை தீர்மானிப்பதிலும் அவை கணிசமான அளவு பங்கு வகிக்கின்றன. உதாரணமாக ஒருவர் பால், நெய், காய்கள், பழங்கள், கீரைகள், தானியங்கள், பருப்பவகைகள் என சாத்வீக உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் அவர் அமைதியான குணம் கொண்டவராக இருப்பார். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பதட்டம் அடையாமல் தெளிவாக கிரகித்து முடிவுகள் எடுக்கும் பக்குவம் கொண்டவராக இருப்பார்.
உறைப்பு, உப்பு, புளிப்பு என அழுத்தமான உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டு, மாமிசங்கள், எண்ணையில் பொரித்த உணவுகளை விரும்பி உண்பவர்கள் எப்போதும் பதட்டம் உள்ளவர்களாக காணப்படுவார்கள். உணர்ச்சிவசப்பட்டு தப்பான முடிவுகளை எடுத்தவிட்டு பின்பு வருத்தப்பட்டு விட்டு, மீண்டும் அதே தவறைச் செய்வார்கள்.
அசுத்தமான உணவு, புளித்துப்போனது, குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குளிர்ந்திருக்கும் உணவுகள், பழைய உணவு, டிகட்டுப்போன உணவு போன்றவற்றை உண்பவர்கள் மந்தமாக இருப்பார்கள். நல்லது, கெட்டது தெரியாமல் எதையும் நம்புவார்கள்.
தன்னம்பிக்கை
உன் சூழ்நிலை எப்படியிருந்த போதிலும், உன் மன
உறுதியால் உலகையே வெற்றி கொள்ளும் உத்தம
ஆத்மா நீ. அச்சம், கவலை குழப்பம் என்னும்
மாயைகளை வெல்லும் மகாவீரனும் நீயே. எப்பொழுதும்
நீ இறைவனின் கழுத்து மாலையின் களங்கமற்ற
மணியாய்த் திகழ்கிறாய்.
- பிரம்மா பாபா
“நீ உருப்படவே மாட்டாய், ஐன்ஸ்டீன்!
அறிவாளிகளுக்கெல்லாம் அறிவாளி என்று உலகமே கொண்டாடிய வரும், நவீன விஞ்ஞானத்தின் தந்தை எனக் கருதப்படு பவரும், சார்பியல் தத்துவம், அணுநிறை .ஆற்றல் சமானக்கொள்கை, குவாண்டம் கொள்கை போன்ற வற்றை உலகுக்குத் தந்தவருமாகிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை அவர் சிறுவராய் இருந்தபோது அவரது வகுப்பாசிரியர் இப்படித்தான் திட்டுவாராம்.
பிற்காலத்தில் ஐசக் நியூட்டனையே தன் சட்டைப்பையில் போட்டுக் கொள்ளும் பிரபஞ்ச விஞ்ஞானியாக ஐன்ஸ்டீன் உருவாகப் போகிறார் என்று அந்த அப்பாவி ஆசிரியருக்கு மட்டுமல்ல, அவரது பெற்றோருக்குக் கூடத் தெரியாது. காரணம், சிறு வயதில் ஐன்ஸ்டீன் அப்படியொன்றும் பிரமாதமாகப் படிக்கவில்லை. உருவ அமைப்பிலும் நோஞ்சானாகவே விளங்கினார். அவருடைய பௌதிக் கோட்டுபாடுகள் வெறுமைகளை உள்ளடக்கியனவாகக்கூட இருந்தன. ஆனாலும், விண்வெளி-கால ஒருமையை (Space - time continuum) கண்டறிந்த ஐன்ஸ்டீன் மனிதகுலத்தின் பெருமை தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்கு விண்ணளவு விஸ்வரூம் எடுத்து சரித்திரம் போற்றிய சாதனைச்சிகரமாக உயர்ந்து நின்றார் ஐன்ஸ்டீன். இதற்கு பல்வேறு வகையான தாழ்வு மனப்பான்மை சூழல்களை அவர் வெற்றி கொள்ள வேண்டியிருந்தது.
பொதுவாக, மிகவும் கண்டிப்பான பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவயிருக்குத் தங்களையுமறியாமல் ஒரு வித தாழ்வு மனப்பான்மை உண்டாகிவிடும். ஐன்ஸ்டீன் சந்தித்த முதல் தாழ்வு மனப்பான்மை இது தான். 1889-ல் முதன்முதலாக லூய்ட்போல்ட் ஜிம்னாசியம் என்ற கண்டிப்பு மிகுந்த பள்ளியில் ஐன்ஸ்டீன் நுழைந்தார். படிப்பில் கொஞ்சம் பின்தங்கியவராகவும், எப்பொழுதும் உள்நோக்கு முகமானவராகவும், இந்த உலகைப் பற்றிய சில கொள்கை இழைகளைத் தன்னகத்தே பொதிந்து வைத்தவராகவும் காணப்பட்ட ஐன்ஸ்டீன் சாதாரண குழந்தைகளிலிருந்து வேறுபட்டவராக எப்பொழுதும் இருக்கவில்லை. அப்பள்ளியின் கண்டிப்பு ஐன்ஸ்டீனுக்கு அடியோடு பிடிக்கவில்லை என்பது மட்டும் நிஜம். கண்டிப்பு எந்தக் குழந்தைக்குத் தான் பிடிக்கும்?
ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு நியூயார்க் பல்கலைக்கழகத்தின் 72-ஆம் பட்ட மளிப்பு விழாவில் பேசும்போது ஐன்ஸ்டீன், “பயம், கட்டாயம், செயற்கை அதிகாரம் ஆகிய வழிமுறைகள் வாயிலாக செயல்படுவது என்பது ஒரு பள்ளிக்கு மிகவும் மோசமான விஷயம். இது போன்றதொரு கையாளல் மாணவர்களின் ஆரோக்கியமான உணர்வுகள், நேர்மை மற்றும் தன்னம்பிக்கையை சாகடித்துவிடுகிறது. இந்தப் பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது வெறும் அடிமை பயந்தாங்கொள்ளிகளைத்தான்,” என்றார்.
இதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறுமிக்கு எழுதிய கடிததத்தில் “உன்னுடைய கையெழுத்துப் பிரதியை உன் மகன்கள், மகள்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துக் கொள். ஏனெனில், அவர்களும் அதைப் பார்த்து ஆறுதல் அடைவார்கள். அப்போது அவர் களைப் பற்றி அவர்களது ஆசிரியர்கள் என்ன அபிப்ராயப்பட்டார்கள் என்பதைப் பற்றி யெல்லாம் அவர்கள் கொஞ்சம் கூட கவலைப் படவே மாட்டார்கள்,” என்று ஐன்ஸ்டீன் எழுதினார்.
“லூய்ட்போல்ட் ஜிம்னாசியம்” மாணவர் களுக்கு வேப்பங்காயாகக் கசந்தாலும் ஒரு நல்ல விஷயத்தை ஐன்ஸ்டீனுக்குத் தந்தது. எதையும் எப்பொழுதும் நம்பாமல் கேள்வி கேட்பவராக ஐன்ஸ்டீனை அது மாற்றியது.
அல்ல. அந்தப் பள்ளி அவரை மாற்ற வில்லை, அப்படி பள்ளிக்கூடம் அவரை மாற்றியது என்றால், அவருடன் படித்த, அவருக்கு முன்பும் பின்பும் படித்த அத்தனை மாணவ மாணவிகளையும் அப்பள்ளி மரபு பௌதிகத்தின் அஸ்திவாரத்தை அசைத்துப் போடும் அசகாயசூரர்களாக மாற்றியிருக்க வேண்டுமே! ஐன்ஸ்டீன் தன் பள்ளிப் பருவ தாழ்வுமனப்பான்மையை வென்று, எப்பொழுதும் எதிலும் எதிரும் புதிருமாகச் சிந்தித்தல் என்ற அற்புதத் திறமையை வளர்த்துக் கொண்டார் என்பது தான் சரி. இந்தத் தன்மையால் தான், சில நூற்றாண்டுகளாக பல மனிதர்கள் வேதவாக்காக ஏற்றுக்கொண்ட விஷயங்களைக் கேள்வி கேட்டார் ஐன்ஸ்டீன்.
பதினாறு வயதில் ஐன்ஸ்டீன் தனது மாமாவான சீசர் கோக்குக்கு சிறப்பு சார்பியல் தத்துவமாகத் தான் பிற்காலத்தில் உருவாக்கிய கருத்துக்களைக் கடிதங்களாக வரைந்திட ஆதாரமாக அமைந்தது ஐன்ஸ்டீனின் “ஏன், எதற்கு, எப்படி” என்றெல்லாம் கேட்கவைத்த தன்னம்பிக்கை தான். தலைக்குமேலே வானத்தில் பறந்து சென்ற ஒரு பறவைக் கூட்டத்தைப் பார்த்து சிறுவயதிலேயே ஐன்ஸ்டீன் அடித்த காமெண்ட்: “நமக்குத் தெரியாத சில கதிர்வீச்சுக்களை அவை பின்பற்றுகின்றனவோ என்னவோ.”
ஐன்ஸ்டீனுக்கு பன்னிரண்டு வயது ஆகியபோதே அவரது அசாத்திய தன்னம்பிக்கை அவருக்கு ஒரு ஆழமான ஆன்மீகத்தன்மையை உருவாக்கியதாக அவரே பின்னாளில் கூறியுள்ளார். “மனிதர்களைச் சாராமல் தனித்திருக்கும் இந்தப் பெரிய உலகம் நம் கண்முன்னே, குறைந்த பட்சம் நமது ஆய்வுக்கும் சிந்தனைக்கும் ஓரளவாவது விடைகான முடியும் ஒரு சாசுவதமான புதிர்போல நிற்கிறது. இந்த உலகைப் பற்றிய சிந்தனை ஒரு முதிர்ச்சியைத் தருகிறது. நான் மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்த பல மனிதர்கள் இந்த உலகின் மீதான தங்கள் ஈடுபாடு காரணமாக ஒரு வகை உள் விடுதலையையும், பாதுகாப்பையும் அடைந்திருந்தார்கள்,” என்று பிற்பாடு ஐன்ஸ்டீன் கூறுவதற்கு அடிப்படையாக அமைந்ததும் இந்த ஆன்மீகத் தன்மை தான்.
“விதிகளுக்குள்ளே இருந்த விதியை” ஊடுருவ முடியும் என்ற அவரது நம்பிக்கை தான் பிற்பாடு ஆன்மீகம் விட்டுச் சென்றஇடத்திலிருந்து விஞ்ஞானத்தை எடுத்துச் செல்ல ஐன்ஸ்டீனுக்கு தூண்டுதலாக அமைந்தது. ஒளி எப்படி துகளாகவும், அலையாகவும் இருக்கிறதோ அதே போன்றே முயல்பவர்கள் அந்த இரு நாணப் பக்கங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற முதிர்ச்சியை அவர் பெற்றதற்கும் இதுவே காரணம்.
சாமான்ய மனிதர்கள், ஏன் விஞ்ஞானிகள், நம்பிய வழக்கமான விஷயங்களை ஐன்ஸ்டின் நம்பவில்லை, அவரது நம்பிக்கை தனிரகம், அஹ்ர் “ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இயற்கையின் சீர்மையை” (pre established harmony) நம்பினார், அதனால் தான் அற்ரைப் பொறுத்த வரை “கடவுள் இயற்கையுடன் பகடை விளையாடுவதில்லை.”
தன்னம்பிக்கையில் விளைந்த அவரது மன ஒருமுகப்பாடும் மிக அபாரமானதே. ஐன்ஸ்டீன் உடை, உணவு, கேளிக்கை போன்றவற்றில் ஈடுபாடு செலுத் தாமல் இருந்ததற்கு இது தான் காரணம். மேலும். ஒரு முறை பெர்லின் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பெண் விஞ்ஞானியுடன் நடந்து கொண்டிருந்த போது, “நான் மனிதர்களிடம் அதிகமாக வெற்றி பெறவில்லை. நான் ஒரு குடும்பம் சார்ந்த மனிதனும் அல்ல. என் அமைதியை நான் விரும்புகிறேன். கடவுள் இந்த உலகை எப்படி உருவாக்கினார் என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த அல்லது அந்த நிகழ்ச்சியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் கடவுளின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், மற்றவை யெல்லாம் விவரணங்கள் தானே,” என்று அவர் குறிப்பிட்டார். படைப்பின் ரகசியத்தை அறிவதையே தனது வாழ்வின் தாரக மந்திரமாக அவர் கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து புலப்படுகிறதல்லவா?
இவையெல்லாம் அவரது பள்ளிப் பருவத் துக்குப் பல ஆண்டுகள் பின்னர் நிகழ்ந்தவை. லூய்ட்போல்ட் பள்ளியில் ஐன்ஸ்டீன் கல்வியை முழுமையாக முடிக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. ஆனால், அவருக்கு என்னவோ அந்தப் பள்ளியை விட்டு வெளியேறியது இனிப்பாக இருந்திருக்கலாம். நரம்பியல் பிரச்சனை அவருக்கு இருந்தது என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் தருவதற்கு முன்பே, அவர் மற்ற மாணவர்களையும் கெடுக்கிறார் என்று சொல்லி அவரைப் பள்ளியிலிருந்து விலக்கிவிட்டார்கள்.
ஆல்ப்ஸ் மலையைக் கடந்து இத்தாலியில் வேறு ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டபோது, ஐன்ஸ்டீன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. ஏறக்குறைய இந்தக் கால கட்டத்தில், அதாவது தனது பதினாறாவது வயதில், ஒருவர் ஒளியின் வேகத்தில் மற்றொரு ஒளிக்கதிரைப் பின்பற்றினால் என்ன ஆகும் என்று சிந்தித்து ஒரு வெளியில் அலைவுறும் அதே நேரத்தில் ஓய்வு நிலையில் இருக்கும் மின்காந்தப் புலமாக (”a spatially oscillating electromagnetic field at rest”) அது இருக்கும் என்று தான் கண்டுணர்ந்ததாக பின்னாளில் ஐன்ஸ்டீனே சொல்லியிருக்கிறார்.
பள்ளிக்கூட பாடத்திட்டங்களையும் தாண்டி கிர்ச்சாஃப், ஹெல்மோல்ட்ஸ், ஹெர்ட்ஸ், மேக்ஸ்வெல், பாய்ன்கேர் போன்றோரின் பௌதிகப்புத்தகங்களையும், கணித முறை களையும் ஒரு புரட்சியாளனின் தன்னம்பிக்கை யோடு கற்றார் ஐன்ஸ்டீன், இவ்வளவு முயன்றும் புதிய பள்ளிக்கூடத்திலும் ஐன்ஸ்டீனுக்கு ஆசிரியர்களைப் பொறுத்த மட்டில் ஏமாற்றமே மிஞ்சியது. யாரும் அவரை கெட்டிக்கார மாணவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு சட்டென்று வாழ்க்கையின் நுழைவாசலில் அனாதையாக நின்று கொண்டிருந்ததைப் போல் தான் உணர்ந்ததாக ஐன்ஸ்டீன் நண்பர் மார்சல் கிராஸ்மேனின் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார். படித்துப்பட்டம் வாங்கிய பிறகு கூட ஐன்ஸ்டீனுக்கு அவர் விரும்பிய ஆசிரியப் பணி கிடைக்கவில்லை
!
உறுதியால் உலகையே வெற்றி கொள்ளும் உத்தம
ஆத்மா நீ. அச்சம், கவலை குழப்பம் என்னும்
மாயைகளை வெல்லும் மகாவீரனும் நீயே. எப்பொழுதும்
நீ இறைவனின் கழுத்து மாலையின் களங்கமற்ற
மணியாய்த் திகழ்கிறாய்.
- பிரம்மா பாபா
“நீ உருப்படவே மாட்டாய், ஐன்ஸ்டீன்!
அறிவாளிகளுக்கெல்லாம் அறிவாளி என்று உலகமே கொண்டாடிய வரும், நவீன விஞ்ஞானத்தின் தந்தை எனக் கருதப்படு பவரும், சார்பியல் தத்துவம், அணுநிறை .ஆற்றல் சமானக்கொள்கை, குவாண்டம் கொள்கை போன்ற வற்றை உலகுக்குத் தந்தவருமாகிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை அவர் சிறுவராய் இருந்தபோது அவரது வகுப்பாசிரியர் இப்படித்தான் திட்டுவாராம்.
பிற்காலத்தில் ஐசக் நியூட்டனையே தன் சட்டைப்பையில் போட்டுக் கொள்ளும் பிரபஞ்ச விஞ்ஞானியாக ஐன்ஸ்டீன் உருவாகப் போகிறார் என்று அந்த அப்பாவி ஆசிரியருக்கு மட்டுமல்ல, அவரது பெற்றோருக்குக் கூடத் தெரியாது. காரணம், சிறு வயதில் ஐன்ஸ்டீன் அப்படியொன்றும் பிரமாதமாகப் படிக்கவில்லை. உருவ அமைப்பிலும் நோஞ்சானாகவே விளங்கினார். அவருடைய பௌதிக் கோட்டுபாடுகள் வெறுமைகளை உள்ளடக்கியனவாகக்கூட இருந்தன. ஆனாலும், விண்வெளி-கால ஒருமையை (Space - time continuum) கண்டறிந்த ஐன்ஸ்டீன் மனிதகுலத்தின் பெருமை தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்கு விண்ணளவு விஸ்வரூம் எடுத்து சரித்திரம் போற்றிய சாதனைச்சிகரமாக உயர்ந்து நின்றார் ஐன்ஸ்டீன். இதற்கு பல்வேறு வகையான தாழ்வு மனப்பான்மை சூழல்களை அவர் வெற்றி கொள்ள வேண்டியிருந்தது.
பொதுவாக, மிகவும் கண்டிப்பான பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவயிருக்குத் தங்களையுமறியாமல் ஒரு வித தாழ்வு மனப்பான்மை உண்டாகிவிடும். ஐன்ஸ்டீன் சந்தித்த முதல் தாழ்வு மனப்பான்மை இது தான். 1889-ல் முதன்முதலாக லூய்ட்போல்ட் ஜிம்னாசியம் என்ற கண்டிப்பு மிகுந்த பள்ளியில் ஐன்ஸ்டீன் நுழைந்தார். படிப்பில் கொஞ்சம் பின்தங்கியவராகவும், எப்பொழுதும் உள்நோக்கு முகமானவராகவும், இந்த உலகைப் பற்றிய சில கொள்கை இழைகளைத் தன்னகத்தே பொதிந்து வைத்தவராகவும் காணப்பட்ட ஐன்ஸ்டீன் சாதாரண குழந்தைகளிலிருந்து வேறுபட்டவராக எப்பொழுதும் இருக்கவில்லை. அப்பள்ளியின் கண்டிப்பு ஐன்ஸ்டீனுக்கு அடியோடு பிடிக்கவில்லை என்பது மட்டும் நிஜம். கண்டிப்பு எந்தக் குழந்தைக்குத் தான் பிடிக்கும்?
ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு நியூயார்க் பல்கலைக்கழகத்தின் 72-ஆம் பட்ட மளிப்பு விழாவில் பேசும்போது ஐன்ஸ்டீன், “பயம், கட்டாயம், செயற்கை அதிகாரம் ஆகிய வழிமுறைகள் வாயிலாக செயல்படுவது என்பது ஒரு பள்ளிக்கு மிகவும் மோசமான விஷயம். இது போன்றதொரு கையாளல் மாணவர்களின் ஆரோக்கியமான உணர்வுகள், நேர்மை மற்றும் தன்னம்பிக்கையை சாகடித்துவிடுகிறது. இந்தப் பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது வெறும் அடிமை பயந்தாங்கொள்ளிகளைத்தான்,” என்றார்.
இதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறுமிக்கு எழுதிய கடிததத்தில் “உன்னுடைய கையெழுத்துப் பிரதியை உன் மகன்கள், மகள்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துக் கொள். ஏனெனில், அவர்களும் அதைப் பார்த்து ஆறுதல் அடைவார்கள். அப்போது அவர் களைப் பற்றி அவர்களது ஆசிரியர்கள் என்ன அபிப்ராயப்பட்டார்கள் என்பதைப் பற்றி யெல்லாம் அவர்கள் கொஞ்சம் கூட கவலைப் படவே மாட்டார்கள்,” என்று ஐன்ஸ்டீன் எழுதினார்.
“லூய்ட்போல்ட் ஜிம்னாசியம்” மாணவர் களுக்கு வேப்பங்காயாகக் கசந்தாலும் ஒரு நல்ல விஷயத்தை ஐன்ஸ்டீனுக்குத் தந்தது. எதையும் எப்பொழுதும் நம்பாமல் கேள்வி கேட்பவராக ஐன்ஸ்டீனை அது மாற்றியது.
அல்ல. அந்தப் பள்ளி அவரை மாற்ற வில்லை, அப்படி பள்ளிக்கூடம் அவரை மாற்றியது என்றால், அவருடன் படித்த, அவருக்கு முன்பும் பின்பும் படித்த அத்தனை மாணவ மாணவிகளையும் அப்பள்ளி மரபு பௌதிகத்தின் அஸ்திவாரத்தை அசைத்துப் போடும் அசகாயசூரர்களாக மாற்றியிருக்க வேண்டுமே! ஐன்ஸ்டீன் தன் பள்ளிப் பருவ தாழ்வுமனப்பான்மையை வென்று, எப்பொழுதும் எதிலும் எதிரும் புதிருமாகச் சிந்தித்தல் என்ற அற்புதத் திறமையை வளர்த்துக் கொண்டார் என்பது தான் சரி. இந்தத் தன்மையால் தான், சில நூற்றாண்டுகளாக பல மனிதர்கள் வேதவாக்காக ஏற்றுக்கொண்ட விஷயங்களைக் கேள்வி கேட்டார் ஐன்ஸ்டீன்.
பதினாறு வயதில் ஐன்ஸ்டீன் தனது மாமாவான சீசர் கோக்குக்கு சிறப்பு சார்பியல் தத்துவமாகத் தான் பிற்காலத்தில் உருவாக்கிய கருத்துக்களைக் கடிதங்களாக வரைந்திட ஆதாரமாக அமைந்தது ஐன்ஸ்டீனின் “ஏன், எதற்கு, எப்படி” என்றெல்லாம் கேட்கவைத்த தன்னம்பிக்கை தான். தலைக்குமேலே வானத்தில் பறந்து சென்ற ஒரு பறவைக் கூட்டத்தைப் பார்த்து சிறுவயதிலேயே ஐன்ஸ்டீன் அடித்த காமெண்ட்: “நமக்குத் தெரியாத சில கதிர்வீச்சுக்களை அவை பின்பற்றுகின்றனவோ என்னவோ.”
ஐன்ஸ்டீனுக்கு பன்னிரண்டு வயது ஆகியபோதே அவரது அசாத்திய தன்னம்பிக்கை அவருக்கு ஒரு ஆழமான ஆன்மீகத்தன்மையை உருவாக்கியதாக அவரே பின்னாளில் கூறியுள்ளார். “மனிதர்களைச் சாராமல் தனித்திருக்கும் இந்தப் பெரிய உலகம் நம் கண்முன்னே, குறைந்த பட்சம் நமது ஆய்வுக்கும் சிந்தனைக்கும் ஓரளவாவது விடைகான முடியும் ஒரு சாசுவதமான புதிர்போல நிற்கிறது. இந்த உலகைப் பற்றிய சிந்தனை ஒரு முதிர்ச்சியைத் தருகிறது. நான் மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்த பல மனிதர்கள் இந்த உலகின் மீதான தங்கள் ஈடுபாடு காரணமாக ஒரு வகை உள் விடுதலையையும், பாதுகாப்பையும் அடைந்திருந்தார்கள்,” என்று பிற்பாடு ஐன்ஸ்டீன் கூறுவதற்கு அடிப்படையாக அமைந்ததும் இந்த ஆன்மீகத் தன்மை தான்.
“விதிகளுக்குள்ளே இருந்த விதியை” ஊடுருவ முடியும் என்ற அவரது நம்பிக்கை தான் பிற்பாடு ஆன்மீகம் விட்டுச் சென்றஇடத்திலிருந்து விஞ்ஞானத்தை எடுத்துச் செல்ல ஐன்ஸ்டீனுக்கு தூண்டுதலாக அமைந்தது. ஒளி எப்படி துகளாகவும், அலையாகவும் இருக்கிறதோ அதே போன்றே முயல்பவர்கள் அந்த இரு நாணப் பக்கங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற முதிர்ச்சியை அவர் பெற்றதற்கும் இதுவே காரணம்.
சாமான்ய மனிதர்கள், ஏன் விஞ்ஞானிகள், நம்பிய வழக்கமான விஷயங்களை ஐன்ஸ்டின் நம்பவில்லை, அவரது நம்பிக்கை தனிரகம், அஹ்ர் “ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இயற்கையின் சீர்மையை” (pre established harmony) நம்பினார், அதனால் தான் அற்ரைப் பொறுத்த வரை “கடவுள் இயற்கையுடன் பகடை விளையாடுவதில்லை.”
தன்னம்பிக்கையில் விளைந்த அவரது மன ஒருமுகப்பாடும் மிக அபாரமானதே. ஐன்ஸ்டீன் உடை, உணவு, கேளிக்கை போன்றவற்றில் ஈடுபாடு செலுத் தாமல் இருந்ததற்கு இது தான் காரணம். மேலும். ஒரு முறை பெர்லின் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பெண் விஞ்ஞானியுடன் நடந்து கொண்டிருந்த போது, “நான் மனிதர்களிடம் அதிகமாக வெற்றி பெறவில்லை. நான் ஒரு குடும்பம் சார்ந்த மனிதனும் அல்ல. என் அமைதியை நான் விரும்புகிறேன். கடவுள் இந்த உலகை எப்படி உருவாக்கினார் என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த அல்லது அந்த நிகழ்ச்சியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் கடவுளின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், மற்றவை யெல்லாம் விவரணங்கள் தானே,” என்று அவர் குறிப்பிட்டார். படைப்பின் ரகசியத்தை அறிவதையே தனது வாழ்வின் தாரக மந்திரமாக அவர் கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து புலப்படுகிறதல்லவா?
இவையெல்லாம் அவரது பள்ளிப் பருவத் துக்குப் பல ஆண்டுகள் பின்னர் நிகழ்ந்தவை. லூய்ட்போல்ட் பள்ளியில் ஐன்ஸ்டீன் கல்வியை முழுமையாக முடிக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. ஆனால், அவருக்கு என்னவோ அந்தப் பள்ளியை விட்டு வெளியேறியது இனிப்பாக இருந்திருக்கலாம். நரம்பியல் பிரச்சனை அவருக்கு இருந்தது என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் தருவதற்கு முன்பே, அவர் மற்ற மாணவர்களையும் கெடுக்கிறார் என்று சொல்லி அவரைப் பள்ளியிலிருந்து விலக்கிவிட்டார்கள்.
ஆல்ப்ஸ் மலையைக் கடந்து இத்தாலியில் வேறு ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டபோது, ஐன்ஸ்டீன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. ஏறக்குறைய இந்தக் கால கட்டத்தில், அதாவது தனது பதினாறாவது வயதில், ஒருவர் ஒளியின் வேகத்தில் மற்றொரு ஒளிக்கதிரைப் பின்பற்றினால் என்ன ஆகும் என்று சிந்தித்து ஒரு வெளியில் அலைவுறும் அதே நேரத்தில் ஓய்வு நிலையில் இருக்கும் மின்காந்தப் புலமாக (”a spatially oscillating electromagnetic field at rest”) அது இருக்கும் என்று தான் கண்டுணர்ந்ததாக பின்னாளில் ஐன்ஸ்டீனே சொல்லியிருக்கிறார்.
பள்ளிக்கூட பாடத்திட்டங்களையும் தாண்டி கிர்ச்சாஃப், ஹெல்மோல்ட்ஸ், ஹெர்ட்ஸ், மேக்ஸ்வெல், பாய்ன்கேர் போன்றோரின் பௌதிகப்புத்தகங்களையும், கணித முறை களையும் ஒரு புரட்சியாளனின் தன்னம்பிக்கை யோடு கற்றார் ஐன்ஸ்டீன், இவ்வளவு முயன்றும் புதிய பள்ளிக்கூடத்திலும் ஐன்ஸ்டீனுக்கு ஆசிரியர்களைப் பொறுத்த மட்டில் ஏமாற்றமே மிஞ்சியது. யாரும் அவரை கெட்டிக்கார மாணவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு சட்டென்று வாழ்க்கையின் நுழைவாசலில் அனாதையாக நின்று கொண்டிருந்ததைப் போல் தான் உணர்ந்ததாக ஐன்ஸ்டீன் நண்பர் மார்சல் கிராஸ்மேனின் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார். படித்துப்பட்டம் வாங்கிய பிறகு கூட ஐன்ஸ்டீனுக்கு அவர் விரும்பிய ஆசிரியப் பணி கிடைக்கவில்லை
!
உன் எண்ணம் உன் வாழ்க்கை!
எண்ணங்கள் வானை நோக்கி!
எழுத்துக்கள் உயர்வை நோக்கி!
கண்ணிமைக்கும் காலம் கூட
எடுத்து "வை" இலக்கை நோக்கி!
நாளை என்று நாளைத் தள்ளி
வைக்காதே உயர்வைத் தள்ளி!
"இன்று" ஒன்றே உண்மை தம்பி
உயர்வாய் நீ உன்னை நம்பி!
தடுமாற்றம் வந்து உன்னை
தடம் மாறச்செய்யக் கூடும்!
கொள்கையில் உறுதிகொண்டால்
தடையது திரும்பி ஓடும்!
கண்களில் தெளிவு கொண்டு
எண்ணத்தில் வலிமை கொண்டு!
உழைப்பினில் மகிழ்வு கொண்டு!
வென்றிடு வாழ்க்கை நன்று!
எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை என்பதில் சந்தேகமே இல்லை. திருவள்ளுவர், புத்தர் முதல் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் வரை அடித்துச் சொல்லும் இந்த விஷயம் எந்த அளவு உண்மை? சமீபத்தில் சில வகை எண்ணங்கள் நம் மூளையை சுருங்க வைக்கின்றன என்று ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன என்கிற அளவுக்கு உண்மை.
மாண்ட்ரீல்(Montreal) நகரத்தின் புகழ் பெற்ற மெக்கில் (McGill) பல்கலைகழகத்தில் 15 ஆண்டுகளாக மூளை ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் எஸ்.லூபியன் (Dr.S.Lupien) சிலவகை எண்ணங்கள் மனித மூளையை கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை சுருங்கச் செய்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளார். தொடர்ந்து தாழ்வு மனப்பான்மை எண்ணங்களைக் கொண்டவர்கள் மூளை காலப்போக்கில் 20 சதவீதம் வரை சுருங்குகிறது என்றும் புதியன கற்றுக் கொள்வதிலும், நினைவாற்றலிலும் இத்தகைய மனிதர்கள் மிகவும் பின் தங்கி விடுகிறார்கள் என்பதையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.
அது மட்டுமல்ல, தங்களைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் இல்லாதவர்கள் தீய பழக்கங்களுக்கு சீக்கிரமாக அடிமையாகிறார்கள், அந்தப் பழக்கங்களில் இருந்து மீள முடியாமல் அவதிப்படுகிறார்கள், கான்சர், இருதய நோய், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு அதிகமாக ஆளாகிறார்கள் என்றெல்லாம் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
எனவே உங்களைப் பற்றிக் குறைவாக எண்ணுவதை நிறுத்துங்கள். தாழ்வு மனப்பான்மையைப் போல உங்களை வேறெதுவும் முடங்கச் செய்ய முடியாது. தாழ்வு மனப்பான்மை ஒரு விதத்தில் தெய்வத்தையே குறைத்து மதிப்பிடுவதைப் போலத்தான். கடவுள் பயனில்லாத மனிதர்களைப் படைத்திருக்கிறார் என்பதே அவரை இழிவுபடுத்துவது போலத்தானே.
உங்கள் தாழ்வு மனப்பான்மை சிலரை உங்களுடன் ஒப்பிட்டு உருவான ஆதாரபூர்வமான உண்மையாக நீங்கள் ஒருவேளை கருதலாம். அதையும் மேலும் ஆழமாக சிந்தித்தால் உண்மை அல்ல என்று நீங்கள் உணரலாம்.
ஒரு கோடீஸ்வரன் தன் பிள்ளைகளுக்கு நிறைய சொத்துக்களை விட்டுச் சென்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை அறிந்து அதைத் தனக்கு வேண்டியபடி பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழ்பவன் தன்னம்பிக்கை உடையவன், சாதனையாளன். தனக்கு சொத்து இருப்பதே தெரியாமல், சொத்து கிணற்றில் போட்ட கல்லாக எங்கோ இருக்க, வறுமையில் உழல்பவன் தன்னம்பிக்கை அற்றவன், தோல்வியாளன். எனவே உண்மையில் இருவரும் செல்வந்தர்களே என்றாலும் அறிந்தவன், அறியாதவன் என்பதில் தான் வித்தியாசம் உள்ளது.
உங்கள் சொத்து உங்களுக்குள் உறங்கிக் கிடக்கின்றது. அதை அறியாமல் உங்களிடம் ஒன்றும் இல்லை என்று முடிவுக்கு வருவது அறியாமையே. கடவுள் வெறுமைகளைப் படைப்பதில்லை. அப்படி நினைத்து அவரையும் உங்களையும் அவமதித்துக் கொள்ளாதீர்கள். தாழ்வு மனப்பான்மையால் உங்கள் மூளையைச் சுருக்கி, திறமையைச் சுருக்கி, வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கி விடாதீர்கள். உங்களுக்கென இறைவன் உள்ளே வைத்திருக்கும் தனித் திறமையைக் கண்டுபிடித்து பயன்படுத்த ஆரம்பியுங்கள். தாழ்வு மனப்பான்மையும், தேக்க நிலையும் சூரியன் முன் பனி போல காணாமல் போவதைக் காண்பீர்கள்
எழுத்துக்கள் உயர்வை நோக்கி!
கண்ணிமைக்கும் காலம் கூட
எடுத்து "வை" இலக்கை நோக்கி!
நாளை என்று நாளைத் தள்ளி
வைக்காதே உயர்வைத் தள்ளி!
"இன்று" ஒன்றே உண்மை தம்பி
உயர்வாய் நீ உன்னை நம்பி!
தடுமாற்றம் வந்து உன்னை
தடம் மாறச்செய்யக் கூடும்!
கொள்கையில் உறுதிகொண்டால்
தடையது திரும்பி ஓடும்!
கண்களில் தெளிவு கொண்டு
எண்ணத்தில் வலிமை கொண்டு!
உழைப்பினில் மகிழ்வு கொண்டு!
வென்றிடு வாழ்க்கை நன்று!
எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை என்பதில் சந்தேகமே இல்லை. திருவள்ளுவர், புத்தர் முதல் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் வரை அடித்துச் சொல்லும் இந்த விஷயம் எந்த அளவு உண்மை? சமீபத்தில் சில வகை எண்ணங்கள் நம் மூளையை சுருங்க வைக்கின்றன என்று ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன என்கிற அளவுக்கு உண்மை.
மாண்ட்ரீல்(Montreal) நகரத்தின் புகழ் பெற்ற மெக்கில் (McGill) பல்கலைகழகத்தில் 15 ஆண்டுகளாக மூளை ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் எஸ்.லூபியன் (Dr.S.Lupien) சிலவகை எண்ணங்கள் மனித மூளையை கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை சுருங்கச் செய்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளார். தொடர்ந்து தாழ்வு மனப்பான்மை எண்ணங்களைக் கொண்டவர்கள் மூளை காலப்போக்கில் 20 சதவீதம் வரை சுருங்குகிறது என்றும் புதியன கற்றுக் கொள்வதிலும், நினைவாற்றலிலும் இத்தகைய மனிதர்கள் மிகவும் பின் தங்கி விடுகிறார்கள் என்பதையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.
அது மட்டுமல்ல, தங்களைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் இல்லாதவர்கள் தீய பழக்கங்களுக்கு சீக்கிரமாக அடிமையாகிறார்கள், அந்தப் பழக்கங்களில் இருந்து மீள முடியாமல் அவதிப்படுகிறார்கள், கான்சர், இருதய நோய், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு அதிகமாக ஆளாகிறார்கள் என்றெல்லாம் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
எனவே உங்களைப் பற்றிக் குறைவாக எண்ணுவதை நிறுத்துங்கள். தாழ்வு மனப்பான்மையைப் போல உங்களை வேறெதுவும் முடங்கச் செய்ய முடியாது. தாழ்வு மனப்பான்மை ஒரு விதத்தில் தெய்வத்தையே குறைத்து மதிப்பிடுவதைப் போலத்தான். கடவுள் பயனில்லாத மனிதர்களைப் படைத்திருக்கிறார் என்பதே அவரை இழிவுபடுத்துவது போலத்தானே.
உங்கள் தாழ்வு மனப்பான்மை சிலரை உங்களுடன் ஒப்பிட்டு உருவான ஆதாரபூர்வமான உண்மையாக நீங்கள் ஒருவேளை கருதலாம். அதையும் மேலும் ஆழமாக சிந்தித்தால் உண்மை அல்ல என்று நீங்கள் உணரலாம்.
ஒரு கோடீஸ்வரன் தன் பிள்ளைகளுக்கு நிறைய சொத்துக்களை விட்டுச் சென்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை அறிந்து அதைத் தனக்கு வேண்டியபடி பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழ்பவன் தன்னம்பிக்கை உடையவன், சாதனையாளன். தனக்கு சொத்து இருப்பதே தெரியாமல், சொத்து கிணற்றில் போட்ட கல்லாக எங்கோ இருக்க, வறுமையில் உழல்பவன் தன்னம்பிக்கை அற்றவன், தோல்வியாளன். எனவே உண்மையில் இருவரும் செல்வந்தர்களே என்றாலும் அறிந்தவன், அறியாதவன் என்பதில் தான் வித்தியாசம் உள்ளது.
உங்கள் சொத்து உங்களுக்குள் உறங்கிக் கிடக்கின்றது. அதை அறியாமல் உங்களிடம் ஒன்றும் இல்லை என்று முடிவுக்கு வருவது அறியாமையே. கடவுள் வெறுமைகளைப் படைப்பதில்லை. அப்படி நினைத்து அவரையும் உங்களையும் அவமதித்துக் கொள்ளாதீர்கள். தாழ்வு மனப்பான்மையால் உங்கள் மூளையைச் சுருக்கி, திறமையைச் சுருக்கி, வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கி விடாதீர்கள். உங்களுக்கென இறைவன் உள்ளே வைத்திருக்கும் தனித் திறமையைக் கண்டுபிடித்து பயன்படுத்த ஆரம்பியுங்கள். தாழ்வு மனப்பான்மையும், தேக்க நிலையும் சூரியன் முன் பனி போல காணாமல் போவதைக் காண்பீர்கள்
மன நலன் பெருக சக்கர தியானம்
எவ்வளவுதான் சம்பாதித்தாலும், அறிவாளியாக இருந்தாலும், புகழோடு இருந்தாலும், விரும்பியது எல்லாவற்றையும் அடைந்தாலும் மனதில் ஏதோ ஒரு வெறுமை குடி கொண்டிருப்பதை எல்லாருமே உணருவார்கள். வெறுமை மனதில் குடியேறும் போது வெறுப்பும், விரக்தியும் வந்து விடுகின்றன.
மனநிலையில் மாறுதல் ஏற்படும்போது அதையொட்டி நடத்தையிலும் மாறுபாடுகள் வந்து விடுகின்றன. . பிறகு கவலை, துக்கம், மன இறுக்கம், டென்ஷன் இப்படி ஒவ்வொரு பிரச்சினைகளாக உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டு நம்மை நாமே நோயாளி களாக்கிக் கொள்கிறோம் . இதைத் தவிர்ப்பதற்காக யோகா, தியானம் என்பன போன்ற மனவளக்கலை முறைகளை நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கிறhர்கள். அவற்றுள் ஒன்றுதான் சக்கர தியானம்.
இவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். .
நமது உடலில் புலன்மறை சக்திகள் உள்ளன. இவற்றை எனர்ஜிஎன்கிறார்கள்.
அக்குபஞ்சரில் இந்த எனர்ஜியை யின்-யாங் என்பார்கள்.
நம் முன்னோர்கள் பிராணமய கோசம் அல்லது சக்திகோசம் என்றார்கள். இந்த சக்தி கடக்கும் பல வழிகள் உள்ளன. அக்கு பஞ்சரில் இது போன்ற சக்தியை மெரிடியன்கள் என்பார்கள். அதேபோல இந்த சக்திகள் எல்லாம் பல வழியாகத் திரண்டு, உள்ள{றும் ஆற்றலைத் தூண்டியெழுப்புகிறது. இந்த உள்ளான ஆற்றலுக்கு குண்டலினி என்று பெயர்.
குண்டலினி விழிப்புடன் இருக்கும் நிலையில் எல்லா கோசங்களுக்கும் சீரான ஆற்றல் பாய்வதால், அவை பாயும் உறுப்புகள் மற்றும் மனம், ஒட்டுமொத்த உடல் ஆகியவை ஆரோக்கியமாக இருக்கிறது.. இந்த ஆற்றலை நாம் ஏன் எளிதில் அடைய முடிவதில்லை? நமக்குள் இருக்கும் ஆற்றலை நாம் வெளியே கொண்டு வரத் தெரிந்து வைத்திருப்பது இல்லை, அல்லது அதற்காக முயற்சிப்பது கிடையாது. மேலும் முறைகேடான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், எதிர்மறையான செயல்கள் ஆகியவற்றினால் இந்த ஆற்றலை நாம்
வெளியே கொண்டு வர இயலுவதில்லை. மனதை ஒருமுகப்படுத்தி இந்த ஆற்றல்களை வெளியே கொண்டு வர வேண்டும். அப்போது ஆழமான மன நலன் கிடைக்கும்.
சக்கர தியானத்தில் மூன்று படிகள் உள்ளன. உள்ளத்தோடு உச்சரிக்கும் வார்த்தைகள் இவை மனதை ஒருமுகப்படுத்தும், அமரும் விதம், இவை உடலைத் திடப் படுத்தி மனதை ஒருமைப்படுத்த உதவும். அடுத்தது ஆட்காட்டி விரலை மடக்கி கட்டைவிரலின் அடிப்பாகத்தில் வைப்பது போன்ற முத்திரை நிலைகள், இவற்றை முறையாகச்செய்யும் போது மூளையின் பல பகுதிகள் ஊக்குவிக்கப்படுவதால் மனதில் உழன்று கொண்டிருக்கும் பிரச்சினைகள் படிப்படியாக மறைந்து, டிப்ரெஷ்ஷன் போன்ற எண்ணங்கள் அகன்று மனம் ஒரு நிலைப்படும்.
சக்கர தியானத்திலுள்ள ஏழு சக்தி நாளங்களைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.;
*மூலாதாரம் *
பிறப்புறுப்புக்கும், ஆசன வாய்க்கும் இடையில் செல்லும் சக்திப்பாதை. இந்தச் சக்தி அதிகரித்தால் உயிர் ஆற்றல் அதிகரிக்கும்.
இச்சக்தி தொடர்பான உறுப்புகள்„ சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை.
அடையாளம் நான்கு இதழ் சிவப்புத் தாமரை, கறு;ப்பு நிற லிங்கம் கயிரால்
கட்டப்பட்ட குண்டலினி சர்ப்பம். .
*சுவாதிஷ்டானம்*
பிறப்புறுப்புக்கு மேல் செல்லும் சக்திப் பாதை. இந்தச் சக்தி அதிகரித்தால்
சுயக் கட்டுப்பாடு, நுண்ணுணர்வு அதிகரிக்கும்.
தொடர்பான உறுப்புகள்„ கருப்பை, பிறப்புறுப்புகள், பெருங்குடல். அடையாளம்„ ஆரஞ்சு நிறத்தில் ஆறு தாமரை, உள்ளே நீல பிறைச்சந்திரன்
*மணி பூரகம்*
தொப்புள் வழியாகச் செல்லும் பாதை. இது உடலின் சக்திiயும், ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்தி விழிப்படையச் செய்கிறது.
இது தொடர்பான உறுப்புகள் கல்லீரல், வயிறு, சிறுகுடல், மண்ணீரல். அடையாளம் பத்து இதழ் கொண்ட மஞ்சள் நிறத் தாமரை, மையத்தில் அக்னி சுவாலை உடையது.
*அனாஹதம்*
மார்பு நடுவில் செல்லும் இச்சக்திப் பாதையால் உணர்வுகள் பலப்படும். அன்பு,
இரக்கம் போன்றவை மேலோங்கும். இது தொடர்பான உறுப்பு இதயம்..
அடையாளம் பச்சை நிறத்தில் 12 தாமரை இதழ்கள் கொண்டது. மையத்தில் அறுகோணச் சக்கரமும், ஜோதியும் கொண்டது.
*விஷுத்தி*
தொண்டைப் பகுதியில் செல்லும் சக்திப்பாதையிது. மறைவான ஆன்ம சக்தியை வெளிப்படுத்தும், புனிதத் துவத்தை வளர்க்கும். இச்சக்தி தொடர்பான உறுப்புகள் தொண்டை மற்றும் நுரையீரல்.
அடையாளம்„ பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட, உள்ளே நீல நிறத்தையுடைய அடர்நீலச் சக்கரம்
*ஆக்ஞேயம் *
புருவ மத்தியில் செல்லும் பாதையிது. நினைவாற்றலை, விழிப்புணர்வை,
ஒருமுகப்படுத்தும் திறனை அதிகமாக்கும். கண்கள், நெற்றியின் கீழ்ப்பகுதியை உள்ளடக்கியது இந்தப் பாதை.
அடையாளம்„ இரண்டு தாமரை கொண்ட கருநீல நிறத்தையும். இடப்பக்கம் சந்திரனையும்., வலப்பக்கம் சூரியனையும், நடுவே லிங்கத்தையும் அடையாளமாகக் கொண்டது.
*சகஸ்ராரம்*
உச்சந்தலையில் செல்லும் சக்தி. இது மலர்ந்தால் பிரபஞ்ச உணர்வுடன் முழுமையாக ஒன்றுபடுத்தும் நிலை வரும்.
இது தொடர்பான உறுப்பு மூளை. அடையாளம்„ ஆயிரம் தாமரை இதழ்கள் ஊதா நிறத்திலும், அடர் பொன்னிறம்
கொண்ட ஜோதிர் லிங்கத்தை மையத்திலும் கொண்டது.
ம்பிக்கை நெஞ்சில் கொண்டால் ஆழ்கடலும் தாண்டலாம்! கணுவெல்லாம் இனித்திருக்கும் கரும்பையும் சுவைக்கலாம்!
நம்பிக்கை நெஞ்சில் கொண்டால் ஆழ்கடலும் தாண்டலாம்! கணுவெல்லாம் இனித்திருக்கும் கரும்பையும் சுவைக்கலாம்!
மனநிலையில் மாறுதல் ஏற்படும்போது அதையொட்டி நடத்தையிலும் மாறுபாடுகள் வந்து விடுகின்றன. . பிறகு கவலை, துக்கம், மன இறுக்கம், டென்ஷன் இப்படி ஒவ்வொரு பிரச்சினைகளாக உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டு நம்மை நாமே நோயாளி களாக்கிக் கொள்கிறோம் . இதைத் தவிர்ப்பதற்காக யோகா, தியானம் என்பன போன்ற மனவளக்கலை முறைகளை நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கிறhர்கள். அவற்றுள் ஒன்றுதான் சக்கர தியானம்.
இவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். .
நமது உடலில் புலன்மறை சக்திகள் உள்ளன. இவற்றை எனர்ஜிஎன்கிறார்கள்.
அக்குபஞ்சரில் இந்த எனர்ஜியை யின்-யாங் என்பார்கள்.
நம் முன்னோர்கள் பிராணமய கோசம் அல்லது சக்திகோசம் என்றார்கள். இந்த சக்தி கடக்கும் பல வழிகள் உள்ளன. அக்கு பஞ்சரில் இது போன்ற சக்தியை மெரிடியன்கள் என்பார்கள். அதேபோல இந்த சக்திகள் எல்லாம் பல வழியாகத் திரண்டு, உள்ள{றும் ஆற்றலைத் தூண்டியெழுப்புகிறது. இந்த உள்ளான ஆற்றலுக்கு குண்டலினி என்று பெயர்.
குண்டலினி விழிப்புடன் இருக்கும் நிலையில் எல்லா கோசங்களுக்கும் சீரான ஆற்றல் பாய்வதால், அவை பாயும் உறுப்புகள் மற்றும் மனம், ஒட்டுமொத்த உடல் ஆகியவை ஆரோக்கியமாக இருக்கிறது.. இந்த ஆற்றலை நாம் ஏன் எளிதில் அடைய முடிவதில்லை? நமக்குள் இருக்கும் ஆற்றலை நாம் வெளியே கொண்டு வரத் தெரிந்து வைத்திருப்பது இல்லை, அல்லது அதற்காக முயற்சிப்பது கிடையாது. மேலும் முறைகேடான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், எதிர்மறையான செயல்கள் ஆகியவற்றினால் இந்த ஆற்றலை நாம்
வெளியே கொண்டு வர இயலுவதில்லை. மனதை ஒருமுகப்படுத்தி இந்த ஆற்றல்களை வெளியே கொண்டு வர வேண்டும். அப்போது ஆழமான மன நலன் கிடைக்கும்.
சக்கர தியானத்தில் மூன்று படிகள் உள்ளன. உள்ளத்தோடு உச்சரிக்கும் வார்த்தைகள் இவை மனதை ஒருமுகப்படுத்தும், அமரும் விதம், இவை உடலைத் திடப் படுத்தி மனதை ஒருமைப்படுத்த உதவும். அடுத்தது ஆட்காட்டி விரலை மடக்கி கட்டைவிரலின் அடிப்பாகத்தில் வைப்பது போன்ற முத்திரை நிலைகள், இவற்றை முறையாகச்செய்யும் போது மூளையின் பல பகுதிகள் ஊக்குவிக்கப்படுவதால் மனதில் உழன்று கொண்டிருக்கும் பிரச்சினைகள் படிப்படியாக மறைந்து, டிப்ரெஷ்ஷன் போன்ற எண்ணங்கள் அகன்று மனம் ஒரு நிலைப்படும்.
சக்கர தியானத்திலுள்ள ஏழு சக்தி நாளங்களைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.;
*மூலாதாரம் *
பிறப்புறுப்புக்கும், ஆசன வாய்க்கும் இடையில் செல்லும் சக்திப்பாதை. இந்தச் சக்தி அதிகரித்தால் உயிர் ஆற்றல் அதிகரிக்கும்.
இச்சக்தி தொடர்பான உறுப்புகள்„ சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை.
அடையாளம் நான்கு இதழ் சிவப்புத் தாமரை, கறு;ப்பு நிற லிங்கம் கயிரால்
கட்டப்பட்ட குண்டலினி சர்ப்பம். .
*சுவாதிஷ்டானம்*
பிறப்புறுப்புக்கு மேல் செல்லும் சக்திப் பாதை. இந்தச் சக்தி அதிகரித்தால்
சுயக் கட்டுப்பாடு, நுண்ணுணர்வு அதிகரிக்கும்.
தொடர்பான உறுப்புகள்„ கருப்பை, பிறப்புறுப்புகள், பெருங்குடல். அடையாளம்„ ஆரஞ்சு நிறத்தில் ஆறு தாமரை, உள்ளே நீல பிறைச்சந்திரன்
*மணி பூரகம்*
தொப்புள் வழியாகச் செல்லும் பாதை. இது உடலின் சக்திiயும், ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்தி விழிப்படையச் செய்கிறது.
இது தொடர்பான உறுப்புகள் கல்லீரல், வயிறு, சிறுகுடல், மண்ணீரல். அடையாளம் பத்து இதழ் கொண்ட மஞ்சள் நிறத் தாமரை, மையத்தில் அக்னி சுவாலை உடையது.
*அனாஹதம்*
மார்பு நடுவில் செல்லும் இச்சக்திப் பாதையால் உணர்வுகள் பலப்படும். அன்பு,
இரக்கம் போன்றவை மேலோங்கும். இது தொடர்பான உறுப்பு இதயம்..
அடையாளம் பச்சை நிறத்தில் 12 தாமரை இதழ்கள் கொண்டது. மையத்தில் அறுகோணச் சக்கரமும், ஜோதியும் கொண்டது.
*விஷுத்தி*
தொண்டைப் பகுதியில் செல்லும் சக்திப்பாதையிது. மறைவான ஆன்ம சக்தியை வெளிப்படுத்தும், புனிதத் துவத்தை வளர்க்கும். இச்சக்தி தொடர்பான உறுப்புகள் தொண்டை மற்றும் நுரையீரல்.
அடையாளம்„ பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட, உள்ளே நீல நிறத்தையுடைய அடர்நீலச் சக்கரம்
*ஆக்ஞேயம் *
புருவ மத்தியில் செல்லும் பாதையிது. நினைவாற்றலை, விழிப்புணர்வை,
ஒருமுகப்படுத்தும் திறனை அதிகமாக்கும். கண்கள், நெற்றியின் கீழ்ப்பகுதியை உள்ளடக்கியது இந்தப் பாதை.
அடையாளம்„ இரண்டு தாமரை கொண்ட கருநீல நிறத்தையும். இடப்பக்கம் சந்திரனையும்., வலப்பக்கம் சூரியனையும், நடுவே லிங்கத்தையும் அடையாளமாகக் கொண்டது.
*சகஸ்ராரம்*
உச்சந்தலையில் செல்லும் சக்தி. இது மலர்ந்தால் பிரபஞ்ச உணர்வுடன் முழுமையாக ஒன்றுபடுத்தும் நிலை வரும்.
இது தொடர்பான உறுப்பு மூளை. அடையாளம்„ ஆயிரம் தாமரை இதழ்கள் ஊதா நிறத்திலும், அடர் பொன்னிறம்
கொண்ட ஜோதிர் லிங்கத்தை மையத்திலும் கொண்டது.
ம்பிக்கை நெஞ்சில் கொண்டால் ஆழ்கடலும் தாண்டலாம்! கணுவெல்லாம் இனித்திருக்கும் கரும்பையும் சுவைக்கலாம்!
நம்பிக்கை நெஞ்சில் கொண்டால் ஆழ்கடலும் தாண்டலாம்! கணுவெல்லாம் இனித்திருக்கும் கரும்பையும் சுவைக்கலாம்!
Subscribe to:
Posts (Atom)
சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...

-
இன்று காலை,டொயோடா கார் தயாரிப்பு நிறுவனம் சந்தித்து வரும் பிரச்சினைகளைக் குறித்து வெளியாகி இருந்த செய்திக் கட்டுரைகளைப் படித்துக் ...
-
1. உளவளத்துணை என்னும்போது தனிப்பட்ட ஒருவர் தன்னுடைய பிரச்சினை, துன்பம் என்பவற்றைத் தானே தீர்த்துக்கொள்ள இன்னுமொருவர் உதவும் நடவடிக்கை. 2. அ...
-
ஆழந்து மூச்சு விடுங்கள் – கே.எஸ்.சுப்ரமணி ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்...