April 17, 2010

தோல்வி இல்லை

விரக்தி வேண்டாம் விரட்டி விடு
கவலை வேண்டாம் களைந்து விடு
துக்கம் வேண்டாம் துரத்தி விடு
துயரம் வேண்டாம் துறந்து விடு
மகிழ்ச்சி வேண்டும் மகிழ்வாய் இரு
இன்பம் வேண்டும் இன்முகமாய் இரு
புன்னகை வேண்டும் சிரித்தே இரு
தன்னம்பிக்கை வேண்டும் விழித்தே இரு
முயற்சி வேண்டும் வெற்றி பெறு
பயிற்சி வேண்டும் திறமைகள் பெறு
இலட்சியம் வேண்டும் பயணம் தொடரு
உழைப்பு வேண்டும் உறக்கம் குறைத்திரு
நெருப்பு வேண்டும் நெஞ்சில் வைத்திரு
துடிப்பு வேண்டும் நரம்பில் அணிந்திரு
முயன்றால் முடியாதது எதுவுமில்லை உலகில்
முனைப்போடு முயன்றால்
தோல்வி இல்லை உலகில்!

கவிஞர் இரா. இரவி, மதுரை

பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை

பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை
ஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை
உங்களிடம் உயர்ந்த மனிதன் யாரென்றால்
உடன் யோசிக்காமல் நான் என்று கூறுங்கள்
சிறந்த மனிதன் யாரென்று கேட்டால்
சிறிதும் தயங்காமல் நான் என்று கூறுங்கள்
உங்களை நீங்கள் உயர்வாக எண்ணுங்கள்
உங்களை நீங்கள் தாழ்வாக எண்ணாதீர்கள்
என்னால் முடியும் தன்னம்பிக்கை கொள்ளுங்கள்
நடந்த நல்லவற்றை அடிக்கடி நினையுங்கள்
நடந்த தீயவற்றை அன்றே மறந்திடுங்கள்
முடியாது நடக்காது கிடைக்காது விட்டுவிடுங்கள்
முடியும் நடக்கும் கிடைக்கும் என்றே எண்ணுங்கள்.
மகிழ்ச்சியாகவே மனதை எப்போதும் வைத்திடுங்கள்
மகிழ்ச்சியை பிறருக்கு வாரி வாரி வழங்குங்கள்

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...