November 23, 2013

எண்ணத்தின் ஆற்றல்கள்

எண்ணங்களே உலகின் மிகச் சிறந்த சக்தியாகும்.
எண்ணங்கள் அசைந்து செல்லும் தன்மை உடையவை.
எண்ணங்கள் ஒன்று பலவாகப் பருகும் தன்மை உடையவை

நல் எண்ணங்களின் சேமிப்பே ஆற்றலை சேமிக்கும் முறையாகும்
எண்ணங்கள் – செயலாகி, செயல் – பழக்கமாகி, பழக்கம் – பண்பாகி, பண்பு – விதியாக மாறுகிறது.
எண்ணம் தூண்ட மனம் செயல்படுகிறது. மனம் செயல்படும்போது உடலும் செயல்படுகின்றது.
மகிழ்ச்சியான எண்ணங்கள் மன ஆற்றலை வளர்க்கின்றன. துன்பமான எண்ணங்கள் மன ஆற்றலை குறைக்கின்றன.
பகைவனைக்கூட நல்ல எண்ணங்கள் மூலம் நண்பனாக்கலாம்.
தீயவர்களைக்கூட நல்ல எண்ணங்கள் மூலம் நல்லவர்களாக மாற்றி விடலாம்.
ஒத்த எண்ணங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் ஆற்றல் வாய்ந்தவை.
நல்லெண்ணம் படைத்தவர்களின் உள்ளொளி அந்த வட்டத்துக்குள் வந்தவர்களுக்கு எல்லாம் நன்மை செய்கிறது.
நம்பிக்கை மிகுந்தவர்கிடமிருந்து வெளியாகும் எண்ணங்கள் பிறரிடமும் நம்பிக்கையை வளர்க்கின்றன.
எங்கெங்கோ இருக்கும் பலருடைய நல்ல எண்ணங்கள் ஒன்று சேரும்போது மிகப்பெரிய நல்ல விளைவை உண்டாக்குகின்றது.
நம் எண்ணங்களின் ஆற்றலுக்கு ஏற்பவே நமக்கு வெற்றி கிடைக்கிறது.
எண்ணத்தின் மூலம் தூரத்திலுள்ள பொருள்களைப் பார்க்கலாம். ஒலிகளைக் கேட்கலாம்.
உயர்வான எண்ணங்கள் உடலைப்பொலிவாக ஆக்குகிறது. எண்ணங்கள் நம் சூழ்நிலையை உருவாக்குகின்றன.
மனதை ஒருமைப்படுத்துவதன் மூலம் எண்ண ஆற்றலைப் பெருக்கலாம். முறையான பழக்க வழக்கங்கள் மூலம் எண்ணங்களை ஒருமைப்படுத்தலாம்.
ஒரு நேரத்தில் ஒன்றைப் பற்றித் திரும்ப திரும்பச் சிந்திப்பதால் மனதை ஒருமைப்படுத்தலாம்.
எண்ணங்கள் உயிருள்ளவை. அவற்றை வளர்க்கும் முறையில் வளர்த்தால் பயன் பெறலாம்.
ஒரு மனிதனின் தீர்மான எண்ணத்தின்படியே அவன் வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது.
இன்றைய வாழ்க்கை அவனது இதுநாள் வரையான எண்ணங்களின் விளைவே ஆகும்.
இந்தப் பரந்த உலகில் ஒருவன் எண்ணும் அளவிற்கு அவனுக்கு சொந்தமாகிறது.
முடியும் என்ற எண்ணம் உடையவர்களால் மட்டுமே எதனையும் சாதிக்க முடியும்.
யாரிடமிருந்து எதைப் பெற்றாலும் அது அவரவர் எண்ணத்தின் விளைவேயாகும்.
தீவிரமாக எண்ணும் அனைத்தும் அடையக் கூடியவையே
சரியான எண்ணங்களின் மூலம் சரியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
நம்முன் தோன்றும் எண்ணங்கள் நாம் அடைய விரும்பும் நிலையை அடைய உதவும்.
ஒரு மனிதனின் கட்டுப்பாடான வாழ்க்கை எண்ணத்தின் ஆற்றலைப் பெருக்குகிறது.
எண்ணம் படகு போன்றது. நம்மைப் பயனுள்ள இடத்தற்கு அது அழைத்துச் செல்கிறது.
நல்ல எண்ணங்களே உலகை ஆள்கின்றன.
ஒழுக்கமுள்ள மனிதர்களின் எண்ணங்கள் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவை. அவை நல்ல விளைவுகளை உண்டாக்கும்.
உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைக்கும் போது எண்ணங்கள் ஆற்றல் பெறுகின்றன.
எல்லோரும் வாழ வேண்டும் என்பதைவிடச் சிறந்த எண்ணம் ஒன்றில்லை.
நல்ல எண்ணங்கள் மூலம் இவ்வுலகில் புதிய நாகரிகத்தையே தோற்றுவிக்கலாம்.

நான் யார்?

நான் யார்?

கோடிக்கணக்கான மனிதர்கள் பிறந்து வளர்ந்து மடிந்து போன பூமி இது. இங்கு வரலாறு என்பது மிக சொற்பமே. மனிதனின் வரலாறும் பூமியின் வரலாறும் ஒன்றுதான். பல்வேறு காலகட்டங்களில் தனித்தனியாய் அல்லது ஒரு குழுவாய் மனிதர்கள் செய்த செயல்கள், எடுத்த முடிவுகள் மற்றும் அவர்கள் ஆற்றிய எதிர்வினைகள் யாவும் வரலாற்றை உருவாக்கின. இன்றும் அது தொடர்கிறது.

அனைவரும் வரலாற்றை படிக்கின்றனர். ஒருசிலர்தான் அதை படைக்கின்றனர்.

உலகில் ஏற்பட்ட மிகப்பெரும் மாற்றங்கள், அதிசயங்கள், புரட்சிகள், போர்கள் யாவுமே முதன்முதலில் விதை முளைப்பது தனிமனிதனின் மனதில்தான். நீங்கள் எடுக்கும் எந்த முடிவானாலும், அதன் விளைவு ஒரு வரலாறாகவோ அல்லது ஒரு சாதாரணமான நிகழ்ச்சியாகவோ மாறுகிறது.

இங்கே மிக முக்கியமானது முடிவெடுப்பதுதான்.

சரி. நீங்கள் யார்? எதற்காக பிறந்தீர்கள்? உங்கள் வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன? நீங்கள் யாருக்காக வாழப்போகிறீர்கள்? உங்களுக்காகவா? உங்கள் குடும்பத்திற்காகவா? உங்கள் சமூகத்திற்காகவா? உங்கள் நாட்டிற்காகவா? அல்லது உங்கள் அழகான காதலிக்காகவா? இதற்கு விடை கிடைத்துவிட்டால்  போதுமானது. நீங்கள் யார் என்று கண்டுபிடித்துவிடலாம்.

சிலருக்கு இலட்சியங்கள் அவ்வபோது மாறிக்கொண்டே இருக்கும். முடிவுகளை அடிக்கடி மாற்றும் ஒருவர் பாதைகளையும் அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும். அது மேலும் பல சிக்கல்களை உருவாக்கும்.

சிலர் ஒரே லட்சியத்தில் பல வருடங்கள் வெற்றியடையாமல் இருப்பதுண்டு. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர், சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்தபோது அவர் தன்னுடைய லட்சியத்தை என்னிடம் கூறினார். அதாவது, அவர் ஒரு அரசு அதிகாரி ஆகவேண்டும் என்பதே அந்த லட்சியம். மீண்டும் பலமுறை அவரை சந்தித்தபோதும் அவர் அதே லட்சியத்தை கூறினார்.

"கவர்மெண்ட் வேலைக்கு ட்ரை பண்ணிட்ருக்கேன் ஜீவா" என்று சில வருடங்களுக்கு முன்பு  நான் சந்தித்த போதும் அதையே கூறினார். ஆகா அவர் தன்னுடைய லட்சியத்தை மாற்றவுமில்லை அடையவுமில்லை. அவர் யார் என்பதும் அவருடைய வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதும் கடைசிவரை அவருக்கு புரியாமலேயே போயிற்று. இப்போது அவர் அரசு வேலைக்கான வயதுவரம்பை கடந்து வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

வெறும் லட்சியத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அதற்கான சரியான முயற்சியோ முடிவோ எடுக்கவில்லை எனில், உங்கள் லட்சியம் தண்ணீரின் மேல் எழுதிய எழுத்தாக மட்டுமே இருக்கும்.

நீங்கள் யார் என்பதை தெரிந்துகொள்ள நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை நீங்களே  கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டியதுதான். உங்கள் வாழ்க்கையின் உண்மையான லட்சியம் அகப்ப்படும்வரையில் கேட்டுக்கொண்டே இருங்கள். உங்களுக்காக சில லட்சியங்களை பட்டியலிடுகிறேன்

உறவுகள் சார்ந்த இலட்சியங்கள்

குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது, காதலியை கைபிடிப்பது, அண்ணன் தம்பிகள் சேர்வது, இழந்த பூர்வீக சொத்தை மீட்பது, அப்பா அம்மாவை உலக சுற்றுலா அனுப்புவது, தங்கையின் திருமணம், குடும்பத்துக்காக ஒரு பெரிய வீடு கட்டுவது அல்லது பிரிந்த உறவுகளை சேர்ப்பது போன்றவை அடங்கும்.

தொழில் அல்லது வேலை சார்ந்த இலட்சியங்கள்

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் அல்லது அரசு வேலையில் சேர்வது, குறிப்பிட்ட ஊதியம் பெறுவது, தொழில் வளர்ச்சி பெறுவது, புதிதாக ஏதேனும் கண்டறிவது மற்றும் புதிதாக சாதனை புரிவது போன்றவை அடங்கும்.

பணம் சார்ந்த இலட்சியங்கள்

உங்கள் லட்சியம் எதுவாயினும் அதனூடே பயணிப்பது நம் கண்களுக்கு புலப்படாத பணமும்தான். வாழ்வில் பணம் மிகவும் முக்கியமானது என்பதை அனைவரும் அறிவர்.

"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை " - திருவள்ளுவர்

"பணம் பத்தும் செய்யும்" - பழமொழி

"காசேதான் கடவுளடா" -  பேச்சுவழக்கு

உண்மையிலேயே உலகின் மாபெரும் சாதனையாளர்கள் ஆகக்கூடிய தகுதிகள் அத்தனையும் இருந்தும் சாதிக்காமல் போனவர்கள் எத்தனையோ! அந்த பட்டியலில் நீங்கள் வேண்டாமே!

இந்த உலகம் மோசமானது என்று குறைசொல்லி நாம் ஒதுங்க முடியாது. ஏனெனில் பல சமயங்களில் நாமும் அப்படித்தான் நடந்து கொள்கிறோம். பணம் இல்லாத ஒரு சாமான்யனிடமும் பெரும் பணம் படைத்த பணக்காரனிடமும் நாம் ஒரே மாதிரி நடந்து கொள்வதில்லை. பணம் இல்லாதவன் உண்மையிலேயே நாயை விட கேவலமானவனாகத்தான் கருதப்படுகிறான்.

நீங்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் விழைந்தால், நீங்கள் யார் என்பதை உலகிற்கு உணர்த்த உங்களுக்கு பணம் அவசியம் தேவை. நீங்கள் யாராக இருந்தாலும் சரி நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ உங்களுக்கு தேவையான ஒன்று பணம்தான்.

பணம் பெரிதல்ல என்று நினைப்பவர்கள் எவரும் அதை வைத்துக்கொண்டிருப்பவர்கள்தான். மேற்கொண்டு படியுங்கள். இந்த வலைப்பூவின் மற்றபிற பக்கங்கள் பணத்தின் வாசனையை உங்கள் அருகே கொண்டுவரும்.


எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்

நம் எண்ணங்களை ஒழுங்குப் படுத்திக் கொண்டு நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் தீய எண்ணங்களை நம் இதயத்தலிருந்து வெளியேற்றி விடுவோமானால், முதல் நன்மை நாம் துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்துவிடலாம்.

இது ஏதோ அறிவுரை அல்ல. முழுக்க முழுக்க அனுபவம் கடந்த 20 ஆண்டுகளில் 30 ஆண்டுகளில் எந்தந்த எண்ணங்களால் வளர்ந்துள்ளோம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் உண்மை பளிச்சென்று தெரிய வரும்.

இந்த இதழ் முழுவதும் பரவிக் கிடக்கின்ற எண்ணங்கள் பற்றிய கருத்துகளை ஒன்றன்பின் ஒன்றாகப் படியுங்கள். ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு சிறிய இடைவெளி கொடுங்கள். உங்கள் எண்ணங்களோடு இக் கருத்துகளை இணைத்துப் பாருங்கள்.

எடுத்த எடுப்பில் சில கருத்துக்கள் உண்மை என்று உணர்வீர்கள்.

இரண்டாம் மூன்றாம் முறை இந்த இதழைப் படியுங்கள். எண்ணங்களுக்கு ஆற்றல் உண்டு என்பதை உணர்வீர்கள்.

உங்களுக்கான நல்ல எண்ணங்களைத் தேர்ந்து எடுங்கள். அதை நடைமுறைப்படுத்த முயற்சியுங்கள்.

சந்தேகம் இருப்பின் எழுதுங்கள். அடுத்த இதழல் அதற்கான பதிலைப் பெறலாம்.

எண்ணங்களின் தோற்றம்

மனத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள பதிவுகளிலிருந்து எண்ணங்கள் தோன்றுகின்றன. இவை இயல்பாகத் தோன்றும் எண்ணங்களாகும்.

நடைமுறை வாழ்க்கையில் தோன்றும் எண்ணங்கள்

அறிகுறியால் தோன்றும் எண்ணங்கள்
இயல்பான உணர்ச்சியால் தோன்றும் எண்ணங்கள்
கேள்வியால் தோன்றும் எண்ணங்கள்
காட்சியால் தோன்றும் எண்ணங்கள்
பழக்கத்தின் காரணமாகத் தோன்றும் எண்ணங்கள்
சிந்திப்பதன் காரணமாகத் தோன்றும் எண்ணங்கள்.
எண்ணங்கள் பதிவாகும் இடங்கள்

நாம் வெளிப்படுத்தும் எண்ணங்கள் விண்வெளயில் பதிவாகின்றன.
எண்ணங்கள் நம் மனதிரையில் பதிவாகின்றன.
எண்ணங்கள் நம் முகத்திரையில் பதிவாகின்றன
எண்ணங்கள் நம் கண்களில் பதிவாகின்றன.
எண்ணங்களை வகைப்படுத்துதல்

மனதில் தோன்றும் எண்ணங்களை குறித்து வைத்துக் கொண்டு பாகுபடுத்தி ஆராய வேண்டும்
எண்ணம் உருவாக ஒரு பின்னணி வேண்டும். நாம் அடைய விரும்பும் இலட்சியத்தைப் படமாகப் பார்க்கும் கற்பனை திறன் வேண்டும்.
தீய எண்ணங்களால் ஏற்படும் விளைவுகள்

மனம் வெற்றிடமாக இருக்கும் போது தீய எண்ணங்கள் தோன்றுகின்றன.
எதையும் காம இச்சையோடு பார்க்கும்போது தீய எண்ணங்கள் தோன்றுகின்றன.
பிறரைக் குறைகூறும்போது அந்த எண்ணங்களால் குறை கூறியவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
மனம் ஓய்ந்திருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் தீய எண்ணங்கள் நுழைந்து விடுகின்றன. தீய எண்ணங்கள் தீமையையே விளைவிக்கின்றன.
முரண்ப்பட்ட எண்ணங்கள் முரண்பட்ட விளைவுகளையே உண்டாக்குகின்றன.
எண்ணங்களால் பற்றும் பற்றினால் ஆசையும், ஆசையால் கோபமும் உண்டாகின்றது.
எண்ணங்களைக் கட்டுப் படுத்தும் முறை:

எண்ணங்களைக் கட்டுப் படுத்த அளவு கடந்த முயற்சியும் பொறுமையும் தேவை
தேவைகளையும் குறைப்பதால் மட்டுமே ண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியும்.
எண்ணத்தை வெல்வது என்பது நம்மிடம் உள்ள குறைகளை வெல்வது ஆகும்
.

இறை வழிபாட்டால் எண்ணங்களைக் கட்டுப்டுத்தலாம்.
தியாகங்கள் செய்வதால் எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம்.
முறையான பழக்க வழக்கங்களால் எந்த வகையான எண்ணங்களையும் கட்டுப்படுத்தலாம்.

வெற்றியின் படிமுறைகள்

நமது வாழ்வில் அன்றாடம் எத்தனையோ பல விதமான பிரச்சனைகளை சந்திக்கின்றோம் அவற்றில் எத்தனை வீதமானவைனளுக்கு நிரந்தரமான தீர்வு பெறப்பட்டிருக்குமென்று பார்த்தால் பூச்சியமே விடையாகவிருக்கும்.

இது ஏன்? என்ன காரணத்தினால் ?.

அதீக நம்பிக்கை
சோம்பல்த்தனம்
அலட்ச்சியப்போக்கு


சரி எப்படி வெற்றியை தனதாக்கிக்கொளுவது என்று பார்ப்போம்.

மனதை சற்று தளர்வாக வைத்துக்கொள்ளவும் (உ-ம் தேநீர் அருந்துதல்)
பிரச்சனையை என்னவென்று அலசினால் கிட்டத்தட்ட 20 வீதத்தினை குறைக்கலாம்
மீதி 80 வீதத்தினையும் நிவர்த்தி செய்வதற்கு மிகத் தெளிவாக ஒரு தாளில் பிரச்சனைக்குரிய காரணம் ,தீர்க்கும் வழிமுறைகள் என தங்களுக்கேற்றவாறு அட்டவனை ஒன்றை போட்டுக்கொள்ளுங்கள்
இவ்வட்டவனையை மேலோட்டமாக இரண்டு மூன்று தரம் ஆராய்ந்து பார்த்தால் பிரச்சனைக்குரிய அடிப்படைக்காரணத்தை கட்டாயம் அறியலாம்
இப்பொழுது பிரச்சனை ஒரு நெல்லிக்காயளவு இருப்பதை உணர்வீர்கள்.இதனை தீர்க்கும் வழிமுறைகளைளும் தெளிவாக வடிவமைக்கப்பட்டுவிடும்
வெற்றியானது உங்களுக்கு இலவசமாகவும் நிரந்திரமாகவும் கிடைத்துவிடும்
ஆகவே மேற்சொல்லப்பட்ட படி முறையானது அநுபவத்தில் இருந்துபெறப்பட்டதாகும்

வெற்றி தரும் எண்ணங்கள்

வெற்றி தரும் எண்ணங்களைபற்றி அறிஞர்களின் கருத்து

"வெற்றியினைச் சிந்தியுங்கள் வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள்.வெற்றியை உருவாக்கத் தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும். மனப்படம் அல்லது மனப்பான்மை மிக வலிமையுடன் நிலைபெறுகிறபோது அது சூழ்நிலைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. இதற்கும் மனக்கட்டுப்பாடுதான் அவசியமாகிறது"     -  வின்சென்ட் பீல்(மதப்போதகரும் மனோதத்துவ நிபுணரும்)

"நம்பிகைதான் நிகழ்ச்களை உருவாக்குகிறது "   -    வில்லியம் ஜேம்ஸ்

"எண்ணம் எவ்வளவு வன்மையுடன் உடலை ஆட்சி செய்கின்றது என்பதை எண்ணிப்பர்கும் பொழுது எனக்கு பெரும் வியப்பேற்படுகிறது "- கவிஞன் கதே

"தொழிலில் வெற்றியும் தோல்வியும் மனதின் திறமையால் நிர்ணயிக்கப்படுவதில்லை ,மனப்பன்மையினல்தான் நிர்ணயிக்கப்படுகிறது "- டாக்டர்  வால்டர் ஸ்கட்

"நாம் என்ன  நினைக்கிறோமோ ,அதுவாகத்தான் நாம் இருக்கிறோம் .நாம் இனி என்ன ஆகப்போகிறோம் என்பதையும் அதுதான் நிர்ணயிக்கிறது "-  டாக்டர் எம்.ஆர். காப்மேயர்

"ஒருவன் எதை நினைக்கிறானோ ,அதுவாகவே இருக்கிறான் "-பைபிள்

"நாம்  இப்போது எப்படி இருக்கிறோமோ என்பது இதற்கு முன் நாம் என்ன சிந்தித்தோம் என்பதைப் பொறுத்தது "-புத்தர் 

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?

எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப்போன்றது.

நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு.

எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க எனக்கு உதவிய 10 விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.

1. தியானம்

தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. புன்னகை

கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

3. நண்பர்கள்

முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.

4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்

சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.

5. குறைகூறாதீர்கள்

உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.

6. உதவுங்கள்

எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.

7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

8. பாடுங்கள்

உங்களுக்கு தெரிந்த ஏதாவது படலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.

9. நன்றி கூறுங்கள்

நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.

10. நல்லதை படியுங்கள்

தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.


உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்.


சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...