February 3, 2013

மாற்றி சிந்தித்து வெற்றி அடைவது எப்படி?


உங்கள் மனது தோல்வியை நினைத்து கொண்டு இருந்தால்
உங்களுக்குள்ளே அடிக்கடி கூறி சொல்லுங்கள் தோல்வியின்
மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று. உடனே அந்த தோல்வி
என்ற எண்ணம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.
உங்கள் ஆழ்மனதுதான் உங்களுடைய நடத்தைகள்
அனைத்திற்கும் காரணம். நீங்கள் ஒரு செயலை தவறு என்று
உங்கள் மனதிற்கு கூறினால் உங்கள் ஆழ்மனதும் "ஆம்"
அந்த செயல் தவறு என்று ஆமோதிக்கும்.

இல்லை நான் செய்யும் செயல் சரிதான் என்று உங்கள்
ஆழ்மனதிற்கு கூறினீர்கள் என்றால் ஆம் அந்த செயல் சரிதான்
என்று உங்கள் ஆழ்மனது உங்களுடன் சேர்ந்து துதி பாடும்.

ஆழ்மனது தான் உங்களுக்கு நடக்கும் நல்லவை கெட்டவை
அனைத்திற்கும் காரணம்.

எண்ணம் போல் வாழ்வு என்று ஏன் கூறுகிறார்கள். நீங்கள்
நல்லவற்றை நினைக்குபோது உங்கள் ஆழ்மனதில் அந்த
நல்ல எண்ணங்கள் பதிந்து உங்கள் நடத்தையும்
நல்லவையாக இருக்கும்.

கெட்டதை நினைக்கும் போது அவையும் உங்கள்
ஆழ்மனதில் பதிந்து உங்கள் நடத்தையும்
கெட்டவையாக  இருக்கும்.

மனது என்பது ஒளி  நாடாவை போன்றது.
எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பதிவு செய்து
திருப்பி சொல்லும்.

ஆழ்மனது  என்பது ஒரு ஜெராக்ஸ் மிஷினை போன்றது.
உள்ளதை உள்ளபடியே எடுத்து காட்டும்.

ஆழ்மனது என்பது முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது.
எது எப்படியோ அதை அப்படியே பிரதிபலிக்கும்.

அதனால் தோல்வி
கரமான சிந்தனைகளுக்கு பேச்சுக்களுக்கு இடம்
கொடுக்காதீர்கள். ஏனென்றால் அவை அப்படியே உங்கள்
ஆழ்மனதில் பதியப்பட்டு உங்களுடைய் நடத்தையிலும் பேச்சிலும் வெளிப்படும்.

இந்த காரியம் நடக்காது என்னால் அங்கு போக முடியாது
என்னால் அந்த செயலை செய்ய முடியாது என்று நினைத்தீர்கள்
என்றால் நிச்சயம் நீங்கள் நினைப்பதுதான் நடக்கும்.
அதாவது எல்லாமே எதிர் மறையாகத்தான் நடக்கும்.

இதையே மாற்றி நினைத்து பார்த்தால் என்னால் அந்த செயலை
செய்ய முடியும், என்னால் அங்கு போக முடியும், என்று
நினைத்தால் நல்ல பலனையே எதிர்பார்க்கலாம்.
எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.

நீங்கள் தடை என்று நினைக்கும் எந்த காரியமும்
உங்களுடைய நினைப்பில்தான் உள்ளது. அந்த தடையை
தகர்த்து எறியலாம் என்று நினைத்தீர்கள் என்றால்
அந்த தடையை தகர்த்து எறிந்து  விடுவீர்கள்.

விளையாட்டு வீரர்களை எடுத்து கொள்ளுங்கள்.
எப்படி அவர்களால புதிய சாதனைகளை படைக்க முடிகின்றது.
சாதனைகளை படைக்க முடியாது என்று அவர்கள்
நினைத்தால் அவர்களால் புதிய சாதனைகளை
உண்டாக்க முடியுமா?

எனவே எந்த தடையையும் மாற்று சிந்தனை மூலம் தகர்த்து
எறிந்து விடலாம்.

ஒரு செயலில் நீங்கள் தோல்வியை சந்திக்கிறீர்கள் என்றால்
அதற்க்கு என்ன காரணம். பல நாட்களாக பல வாரங்களாக
பல வருடங்களாக தோற்று விடுவீர்கள் என்று உங்களுக்குள்
சொன்னதின் விளைவாகத்தான் இருக்கும்.

தோல்வியை நான் நம்புவதில்லை என்று மாற்றி
நினைத்து உங்களுக்குள்ளேயே கூறிக்கொண்டு
இருங்கள். வெற்றி நிச்சயம்.

மாற்றி சிந்திப்பதற்கு உங்களுடைய மனம் ஒரு
முக்கிய கருவியாகும். அந்த மனதை உங்களுக்கு சாதகமாக
மாற்றி நினைப்பதற்கு  ஒரு கருவி தேவை.
அந்த கருவிதான் தியானம்.

தியானம் என்ற கருவியின் மூலமாகத்தான் உங்கள் மனதை
மாற்றி நினைக்க வைத்து உங்கள் வெற்றியை
அடையலாம்.

துன்பங்களை எப்படி சமாளிப்பது?


துன்பங்கள் என்பது நிரந்திரம் அல்ல. ஒருவர் காலம்
முழுவதும் துன்பகரமான வாழ்க்கையை மட்டுமே
அனுபவித்து கொண்டு இருக்க மாட்டார்.
சற்று சிந்தித்து பார்த்தல் தெரியும்.


இந்த உலகத்தில் உள்ள எல்லா செயல்களுமே
இரட்டை இரட்டையாகத்தான் இருக்கும்.
உலகத்தில் படைக்கப்பட்ட அணைத்து பொருட்களுமே
இந்த விதியின் அடிப்படையில்தான் இருக்கும்.

மின்சாரத்தில் positive negative என்ற இரண்டும் இருந்தால்தான்
ஒளியை நாம் பெற முடியும். அது போன்று வாழ்க்கையில்
இன்பமும் துன்பமும் இருந்தால்தான் வாழ்க்கை என்ற ஒளி
விளக்கு எரிய முடியும்.

ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் நல்ல தொரு சமுதாயத்தை
உருவாக்க முடியும்.

பூஜயமும் ஒன்று என்ற இரண்டும் இல்லை என்றால்
கணிபொறி இயங்க முடியாது.

முடியாது என்ற சொல் இருந்தால்தான் முடியும் என்ற
வைராக்கியமே பிறக்கும்.

இந்த உலகத்தில் உள்ள பெரும்பால பணக்காரர்களின்
ஆரம்ப கால வாழ்க்கையை நினைத்து பார்க்க வேண்டும்.
அவர்கள் பிறக்கும் போதே பணக்காரர்களாக பிறக்க வில்லை.

உண்ணும் உணவுக்கும் உடுக்கும் உடைக்கும் இருக்கும்
இருப்பிடத்திற்கும் கண்டிப்பாக
மிகவும் கஷ்டப்பட்டு இருப்பார்கள் .

மிக பெரிய பிரபலங்களாக வலம் வந்து மறைந்த அம்பானி, MGR,
சிவாஜி கணேசன் போன்றவர்களின் சுய சரிதையை படித்தீர்கள்
என்றால் இந்த உண்மை புரியும்.    

அவர்களுடைய கடுமையான உழைப்பின் காரணமாகவும்
நாமும் இந்த உலகத்தில் முன்னேற முடியும் என்ற
நம்பிக்கையின் காரணமாகத்தான் பணக்காரர்களாகவும்
பிரபலமாகவும் வாழ்ந்து மறைந்தனர்.

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...