November 21, 2014

முடியும் என்பதே மூச்சாகட்டும்

ஒரு காட்டில் சிங்கம், புலி, கரடி, யானை, குரங்கு என பல விதமான பறவைகள் எல்லாம் வாழ்ந்து வந்துச்சாம். இவையெல்லாம் ஒற்றுமையா ஒரு குடும்பம் மாதிரி இருந்த தாம். தினந்தோறும் மாலையில் ஒரு பெரிய ஆலமரத்தடியில் சிங்க ராஜா தலைமையில் கூடி, அன்றைய நிகழ்ச்சிகள் பேசி மகிழுமாம். அந்த ஆலமரத்து விழுதில் ஒரு சிலந்தி இருந்ததாம்… அந்த சிலந்தி கூட்டம் கூடியதும் கீழ வந்து,
“நான் தான் பலசாலி, நான் தான் புத்திசாலி நான் தான் அறிவாளி” என்று பாடுமாமாம். நான் இதைக்கேட்ட விலங்குகளில் சில சிரிக்குமாம், சில விலங்குகளுக்கு கோபமாக வருமாம்… சிலந்தி பாடிட்டு விழுது வழியா மேல போயிடுமாம். இது வாடிக்கையாக தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி…..
கோடைகாலம் வந்தது. காட்டில மழையே இல்ல. விலங்குகள் நிறைய செத்துப் போயின.. குடிக்கத் தண்ணீர் இல்லாம அந்த காட்டில இருந்த குதூகலமே போயிடுச்சு…. எல்லா விலங்குகளும் வழக்கம்போல ஆலமரத்தடியில சோகமா கூடியிருந்தது…. எந்த விலங்கு மூஞ்சிலேயும் தண்ணீர் கிடைக்கும் நாம் வாழ்வோம் என்ற நம்பிக்கையே இல்லையாம். அப்போ சிலந்தி வேகமா மரத்தில இருந்து கீழிறங்கி வந்து கழுகுகிட்ட என்னோட வாண்ணு கூட்டிகிட்டு கழுகு ரொம்ப உயரத்தில பறக்க அதன் மேலே இருந்த சிலந்தி மழை மேகத்த தன் வாய் நூலால் கட்டி இழுத்து வந்து காட்டிற்கு அருகில் கொண்டு வந்திடுச்சாம்… காட்டிற்கு அருகில் மழை மேகம் வந்ததும் மரங்களின் குளிர்ச்சி பட்டு பெரிய மழை பொழிந்ததாம். சிங்கம் உள்பட எல்லா விலங்குகளும் மகிழ்ச்சியால துள்ளி குதிச்சதாம் சிலந்திய பார்த்து…
நீ தான் புத்திசாலி
நீ தான் பலசாலி
என்று ஆரவாரம் செய்ததாம். சிலந்தி வெட்கத்தோடு அமைதியாக இருந்ததாம். தெரிந்த கதைதான். இதைப் படித்ததும் நமது மூளையும் கொஞ்சம் புத்திசாலித்தனத்தை பெறுகிறதா இல்லையா……
ஆம்! சிங்கத்தின் முன்னால் சிலந்தி பெரிய விலங்காகும் போது நம்மால் எவ்வளவு பெரிய உயர்வை நாம் அடைய முடியும் என்ற புத்திசாலித்தனம் நமக்குள் எழுகிறதல்லவா?
சொற்கள் செயல் வடிவாகும் போது தான் நமக்கு புகழும் பெருமையும் சேர்கிறது. எண்ணம் சொற்களாகிறது. சொற்கள் செயல்வடிவாகும் போது நம் வாழ்வு உயர்கிறது. எதுவும் என்னால் முடியும் என்ற எண்ணம் நமக்குள் எதையும் சாதிக்கக்கூடிய சக்தியை தரும் என்பது உண்மைதான்.
நான் புத்திசாலி என்னால் எதுவும் முடியும் என்று வாய்விட்டுச் சொல்வதில் தவறில்லை. சொல்வதை வாய்ப்பு கிடைக்கும் போது செயல்வடிவமாக்கிட வேண்டும். அப்போது நம் திறமையை நாமே சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை…. நம்மைப்பற்றி உலகம் சொல்லும்!
முடியும் என்று நினைப்பதை சொல்வதை செயல்வடிவமாக்குவதைத் தவிர வேறு இலட்சியம் நமக்கு இருக்கக் கூடாது…. செம்மண்ணில் இருக்கும் நீர் சிவப்பாகும். பசு எதைச் சாப்பிடுகிறதோ…. அதைப் போலத்தான் பாலின் தன்மை அமையும்… நமது எண்ணம் போல்தான் செயல்பாடும் அமையும் என்பதை நினைவில் கொள்வோம். முடியும் என்பதையே மூச்சாகக் கொள்வோம்.

உலகமே உங்களுக்காக படைக்கப்பட்டதுதான்

* அனைத்திற்கும் ஓர் அதிர்வு அலைவரிசை உள்ளது. நீங்கள் எந்த உணர்வைக் கொண்டிருக்கிறீர்களோ அந்த உணர்வு தான் இருக்கும். அதே அதிர்வு அலைவரிசையில் உள்ள அனைத்தையும் உங்கள் வாழ்விற்குள் கொண்டு வருகிறது.
* வாழ்க்கை உங்களுக்குச் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை உங்களுடன் தகவல் பரிமாறிக் கொண்டிருக் கிறது. அடையாளங்கள், வண்ணங்கள், நபர்கள், பொருட்கள் என்று நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வும், நீங்கள் கேட்கும் ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொரு சூழலும் உங்களுடைய அலைவரிசையில் உள்ளன.
* நீங்கள் தொடர்ந்து மிகிழ்ச்சியாக இருக்கும் போது, மகிழ்ச்சியான மக்கள், மகிழ்ச்சியான சூழல்கள், மற்றும் மகிழ்ச்சியான நிகழ்வுகளால் மட்டுமே உங்கள் வாழ்விற்குள் நுழைய முடியும்.
* வாழ்வைப் பொறுத்தவரை எந்தவொரு விபத்தும் தற்செயலான நிகழ்வும் ஏற்படுவது கிடையாது. அனைத்தும் இணக்கமானவைதான். ஏனெனில் ஒவ்வொன்றிற்கும் ஓர் அலைவரிசை உள்ளது. இது வாழ்வின் எளிமையான இயற்பியல் மற்றும் பிரபஞ்சத்தின் செயல்பாடு ஆகும்.
* நீங்கள் நேசிக்கும் ஏதோ ஒரு பொருளை நினைத்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் அன்பின் ஆற்றலின் அடையாளச் சின்னத்தைப் பார்க்கும்போதோ அல்லது கேட்கும்போதோ அன்பின் ஆற்றல் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
* ஒரு விஷயத்தில் ஈடுபடுவதற்கு முன், அன்பின் ஆற்றலை உங்களுக்கு முன்னதாக அங்கு அனுப்புங்கள். உங்களுடைய நாளில் ஒவ்வொரு விஷயமும் சிறப்பாக நடப்பதாகக் கற்பனை செய்யுங்கள். எந்தவொரு காரியத்தைச் செய்வதற்கு முன்னும் உங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்குள் அன்பை உணருங்கள்.
* ஒவ்வொரு நாளும் கேள்விகள் கேளுங்கள். நீங்கள் ஒரு கேள்வி கேட்கும்போது ஒரு கேள்வியைக் கொடுக்கிறீர்கள். அதற்கான விடையை நீங்கள் பெற்றுத்தான் ஆக வேண்டும்.
* உங்கள் வாழ்வில் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்கு உதவுவதற்கு அன்பில் ஆற்றலை உங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியும். அன்பின் ஆற்றல் உங்கள் தனிப்பட்ட உதவியாளராகவும் பணத்தை நிர்வகிக்கும் மேலாளராகவும் தனிப்பட்ட முறையில் உங்கள் உடலுக்குப் பயிற்சியளிப்ப வராகவும், உறவுகள் குறித்து ஆலோசனை வழங்கும். ஆலோசனையாளராகவும் இருக்கும்.
* உங்கள் மனம் ஏகப்பட்ட விவரங்களால் ஆட்கொள்ளப்பட்டிருந்தால், அந்தச் சிறிய விவரங்கள் உங்கள் கவனத்தைச் சிறகடித்து உங்களைக் கீழே இழுத்துத் தள்ளிவிடும். உங்கள் வாழ்வை எளிமையாக்கிக் கொள்ளுங்கள் . சிறு விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். அது என்ன பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகிறது?
* அன்பின் ஆற்றலுக்கு நேரெதிரானது என்று எதுவும் கிடையாது. அன்பைத் தவிர வாழ்வில் வேறு எந்த சக்தியும் இல்லை. உலகில் நீங்கள் காணும் எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் அன்பின் பற்றாக்குறையினால் உருவானவையே .

November 16, 2014

மனக்கண்ணாடி

தன்னம்பிக்கை, சாதனைகள் பற்றி நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஓர் எண்ணம் இருக்கும். அது என்ன தெரியுமா? அதிகம் படித்தவர்கள், முதல் மதிப்பெண் பெற்றவர்கள், பணபலம் படைத்தவர்கள்… என்று. அப்படி இல்லையென்று இந்த மாதிரியான ‘இமேஜ்’ஜை உடைத்துக் காண்பித்தவர்கள் நம் அருகிலேயே இருக்கலாம். சாதனை என்பது தன்னம்பிக்கையின் அடையாளம். இதிலே ஏற்றத்தாழ்வுக்கு இடமே இல்லை.
காலையில் எழுகின்ற நேரம் முதல் இரவு படுக்கையைத் தட்டிப் போடும் வரை நாம் எல்லோருமே ஒருவித குறிக்கோளை நோக்கி, தன்னம்பிக்கையை நோக்கி நகர்கிறோம் என்பதை உணர்வதில்லை.
நம்மை உற்சாகப்படுத்த யாரும் இல்லை. கைதட்டி அங்கீகாரம் கொடுக்க யாரும் இல்லை என்று ஒருபோதும் நினைக்க வேண்டியதில்லை. தோல்விகள் தான் நம்மைத் தூக்கி நிறுத்தும் ‘கிரேன்’. மீண்டும் உசுப்பேற்றி எழவைக்கும் ஒரு அபூர்வமான பொருள். ஒரு தவறிலிருந்து பாடம் கற்கிறோம். அதை ஏன் அவமானமாக நினைக்க வேண்டும். உதாரணமாக குட்டி கதையொன்றைப் பார்ப்போம்…
குள்ளமாக இருக்கும் ராம் உயரமாக இருக்கும் ராஜேஷை நெருங்கி கேட்கிறார். ‘உயரமாக ஏதாச்சும் ஐடியா கொடேன்’ என்று உரிமையாய்.
அதற்கு ராஜேஷ், “அதோ அங்கே பாருங்க… ஒரு பெரிய மரம் இருக்கு. அதுல ஒரு கிளைய தினமும் காலையில எட்டி பிடிச்சு ஊஞ்சலாடுங்க…” என்று சொல்லி சென்றார்.
ராம் அந்த மரத்தின் அடியில் நின்று அண்ணாந்து பார்த்தார். எந்த ஒரு கிளையையும் இவரால் எட்டிப் பிடிச்சு ஊஞ்சலாட சில நிமிடங்கள்கூட தாக்கு பிடிக்க முடியாது. ஆக, இந்த ராஜேஷ் நம்மை ஏளனமாகவே எடைபோட்டு பதில் சொல்கிறார் என மனதுக்குள் வேகவேகமாக தவறாகக் கணக்குப்போட்டு கண் கலங்கினார்.
அப்படியே அந்த மரத்தின் அடியில் ஒரு கல் மேல் உட்கார்ந்து அண்ணாந்து பார்த்தார். குள்ளமாய் பிறந்தது என் குறையா?… படைத்த இறைவனின் தவறா?… என்ற தாழ்வு மனப்பான்மையால் தத்தளித்தார்.
இப்போது குள்ளம் ஒரு பிரச்சனையாக தெரியவில்லை. ராஜேஷ் “எட்டாத மரத்தை காட்டி எட்டிப்பிடி” ன்னு இளக்காரமா பதில் சொல்லிட்டாரேன்னு கண்களில் நீர் எட்டி பார்த்தது.
இவருக்கு எதையாவது பண்ணி ஒரு அங்குலமாவது வளர்ந்து காட்ட வேண்டும் என உத்வேகம் எழுந்தது.
தான் உட்கார்ந்த கல்லின் மேல் எழுந்து நின்று பார்த்தார். இந்த கல்லின் மேல் நின்று ‘ஹக்’ என எம்பிக்குதித்தால் ஒரு கிளையை இரு கைகளால் கொக்கி போட்டு பிடித்து முன்னும் பின்னும் சின்ன ஊஞ்சலோடு ஒரு நிமிடம் தாக்கு பிடித்து கீழே குதிப்பது என முடிவு செய்தார்.
அந்த மரத்தில் ராம் நின்று இருக்கும் உயரத்தை சாக்பீஸால் கோடு போட்டுக் குறித்துக் கொண்டார். அதிகாலையில் பாதி விடிந்ததும் விடியாத வேளையில் தினமும் ராம் அந்த மரத்தின் அருகில் உள்ள கல்லிலிருந்து ‘ஜம்ப்’ செய்தார். ஆரம்பத்தில் கை வலித்தது. கிளையை பற்றித் தொங்கும்போது உள்ளங்கைகள் எரிவதுபோல இருந்தாலும் அவர் எடுத்த முயற்சியை விடவில்லை.
குறைந்தபட்சம் ஒரு அங்குலமாவது வளர்ந்து அதை ராஜேஷிடம் காட்ட வேண்டும் என்ற முனைப்போடு பயிற்சி செய்தார். சில மாதங்களுக்குப் பின்னர் ஒன்றரை அங்குலம் வளர்ந்து முதலில் போட்ட சாக்பீஸ் கோட்டினைத் தாண்டி நின்றது.
அவர் கண்களை அவராலே நம்ப முடியவில்லை. கண்ணாடி முன்பு நின்று பார்த்தார். முதல் வேலையாக ராஜேஷை சந்தித்தார். தான் வளர்ந்ததை மரத்தை சாட்சியாக வைத்து சாக்பீஸ் கோட்டினை நடுவராகக் காட்டினார்.
ஆச்சர்யப்பட்ட ராஜேஷ் முகம் மலர கை குலுக்கி ராமோடு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். அந்த வார்த்தை ராம் மனதில் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதா என வியந்தார்.
இப்போது நமக்கு ஓர் உண்மை புரிந்திருக்கும். ராமை யாரும் ‘கை தட்டி, விசில் அடித்தோ, ஆமாம் அப்படித்தான்’ என்றோ உற்சாகமூட்டவில்லை.
ஒரு வார்த்தை, அதையே பாலமாக அமைத்து வெற்றிப்படிக்கட்டை எட்டிப்பிடித்தார். தன்னம்பிக்கையை வளர்த்திக் கொள்வதும், சாதனைகளை உருவாக்குவதும் ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. மனப்பயிற்சி நம்மை மாமனிதனாக உயர்த்திக் காட்டுகிறது.
நம்முடைய மனம் கண்ணாடியாய் பிரதிபலிக்க வேண்டும். சந்தோஷமாய் சிரிக்கும்போது கண்ணாடியில் தெரியும் நம் உருவமும் சிரிக்கிறது. அழும்போது அதுவும் அழுகிறது. அதேசமயம் இரு கைகளையும் தலைக்குமேல் உயர்த்தி கையசைத்துப் பாருங்கள். வெற்றியாளனாக வலம் வருவீர்கள்.
இல்லை என்ற சொல்லை
இல்லாமல் செய்வோம்!
முடியும் என்ற வார்த்தையை
மூளையில் மூலதனமாக்குவோம்!
அவமானங்களை
அஸ்திவாரமாக அமைப்போம்!
வேதனைகளை
வேர்வையெனத் துடைப்போம்!
சோதனைகள்
சாதனைகளாக மலரும் வரை…
மனவலிமை கொண்டு
மலையென நிற்போம்!

விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை

டுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அந்தக் காரியம் நீர்த்துப் போகக் கூடாது என்பதில் கவனமாக இருந்து விவசாயத்திலிருந்து தொழில்துறைக்கு வந்து சாதித்துக் கொண்டிருப்பவர்…
தான் எடுத்த வேலை ஒவ்வொன்றும் முடிவடையும் போது அது தான் உலகத்தில் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று செயல்பட்டு தரமான பொருட்களையே உற்பத்தி செய்து வருபவர்…
ஆரம்பத்தில் தொழில் துறையைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்திருந்தாலும் தன்னுடைய ஈடுபாட்டின் காரணமாக ஒவ்வொரு விசயத்தையும் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் இந்தத் தொழிலில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் ஒரு சின்ன தொழில்சாலையாக ஆரம்பித்து மிகக்குறுகிய காலத்திலேயே ‘டெக்னாலஜி’யில் சிறந்த மெசின்களைப் புகுத்தி மிகச்சிறந்த தர நிர்ணயத்துடன் கூடிய துணிகளை உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனமாக கட்டமைத்துள்ளவர்…
தொழில் ஆரம்பித்த போது இவரிடம் இருந்தது எல்லாம் குறைந்த முதலீடும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் தான். அதை வைத்துக்கொண்டு ஃபேப் டெக் இன்டர்நேசனல் என்ற சிறு கம்பெனியை உருவாக்கி, இன்று ஃபேப் ஃபிட் அப்பேரல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஃபேப் டெக் இன்டர்நேசனல் ஹோசரிஸ் பிரைவேட் லிமிடெட், காலர் மேட் என்று விரிவடைந்த நான்கு நிறுவனங்களில் 600க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. என். விவேகானந்தன் அவர்களை ஒரு மாலை பொழுதில் சந்தித்தோம்.
அப்போது தன்னுடைய இளமைக்காலம், விவசாயத்தைத் தொடர்ந்து தொழில் துறையில் ஈடுபட்டு சாதனை புரிந்தது, அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், பின்னலாடைத் தொழிலில் தற்போது இருக்கும் நெருக்கடிகளை சமாளித்து எப்படி சமாளித்து சாதித்து வருகிறார் என்று தன்னுடைய பல அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். சாதிக்க பெரிய அளவில் பணமோ, பின்புலமோ எதுவும் தேவையில்லை. சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும், ஈடுபாடும் இருந்தாலே அனைவரும் சாதனையாளராக முடியும் என்ற அவரின் நேர்முகம் அவர் மொழியிலேயே…

உங்களைப்பற்றி
 கோவை மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுல்தான் பேட்டையில் திரு. S.R. நாராயணசாமி, திருமதி. பத்மாவதி அவர்களுக்கு மகனாகப் பிறந்தேன். பள்ளிப்படிப்பை எங்கள் ஊருக்கு அருகில் இருந்த லட்சுமி நாயக்கன் பாளையத்தில் உள்ள எஸ்.ஆர்.என்.வி. மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். 1971ம் ஆண்டு கோவை ராமகிருஷ்ணா வித்யாலயத்தில் இளங்கலை வணிகவியல் படிப்பை முடித்த நான் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தான் எனது அப்பா தனக்கு உதவியாக விவசாயத்தை பார்க்க உதவிசெய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
எனக்கோ சொந்தத் தொழில் தொடங்கி நடத்த வேண்டும் என்று விருப்பம். அப்பாவுக்கு விவசாயத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை. எதை மேற்கொள்வது என்று சிந்தனையில் ஆழ்ந்த போது எனது அப்பாவுக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயத்தை கவனிக்கும் பொறுப்பு எனக்கு வந்தது. மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொண்டு விவசாயம் செய்தேன். அந்த காலகட்டத்தில் தான் விவசாயத்தில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. புதிய வீரிய ரக ஒட்டு விதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றைப் பயன்படுத்தி வேளாண்மை செய்யும்போது மகசூல் அதிகரித்தது.
நானும் அந்த புதிய வீரிய ரக ஒட்டு விதைகளில் சோளம், பருத்தி போன்றவற்றை பயன்படுத்தி அதிக மகசூல் எடுத்துக் கொண்டிருந்தேன். சில ஆண்டுகளில் அந்த விவசாயத்தில் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன.
புதிய புதிய நோய்களும், புழுக்களும் தோன்ற லாபகரமான தொழிலாக அதுவரை இருந்துவந்த வேளாண்மை மெல்ல நட்டத்தை ஏற்படுத்தும் தொழிலாக மாறியது. உடனடியாக விழித்துக்கொண்ட நான் சோளம், பருத்தி போன்ற பயிர்களைப் பயிரிடுவதைத் தவிர்த்து தென்னை வளர்க்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 90 சதவீத நிலத்தை தென்னை சாகுபடிக்கே பயன்படுத்தினேன்.
தென்னை சாகுபடியை மேற்கொண்டதால் வேளாண்மையில் ஈடுபடும் நேரம் குறைந்தது. அதிக நேரம் ஓய்வு கிடைத்தது. அதைப் பயனுள்ள விதமாகப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன். அப்போதுதான் என் ஆரம்பகால குறிக்கோளான தொழில் தொடங்குவது என்ற எண்ணம் மெல்ல துளிர்த்தது.
தொழில்தொடங்கமுடிவெடுத்ததும்நீங்கள்முதலில்தேர்ந்தெடுத்ததொழில்குறித்து
எனது உறவினர்களும், நண்பர்களும் தொழில் நிமித்தமாக கோவை மற்றும் திருப்பூருக்கு சென்று வருவதைக் கவனித்த நான் அந்த ஊர்களுக்குச் சென்று தொழில் தொடங்கலாமா என்று யோசித்தேன்.
பின்பு சொந்த ஊரிலேயே தொழில் தொடங்கலாம் என எண்ணி காயர் பேக்டரி தொழில் தொடங்க முடிவெடுத்து அதற்காக ஒரு இடத்தையும் தேர்வு செய்து பாலக்கால் போடப்போன போது குழி தோண்டுவதற்காக ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்தபோது, அந்தக் கல்லுக்குக் கீழே பாம்பு இருந்தது. ‘சகுணம் சரியில்லை; இந்த இடத்தில் தொழிற்சாலை அமைக்க வேண்டாம்; மாற்று ஏற்பாடுகளை செய்யலாம்’ என்று அப்பா கூறியதால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. இந்நிகழ்வால் எனக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.
ஆறு மாதங்கள் பொறுமையாக காத்திருந்த நான் மீண்டும் சொந்த ஊரில் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டேன். வேறு புதிய இடம் தேர்வு செய்தேன். இடம் தேர்வு செய்தது மட்டுமே நடந்தது. மேற்கொண்டு மற்ற விஷயங்கள் எதுவும் சரியாக நடைபெறாததால் அந்த முறையும் தொழில் தொடங்கும் என் முயற்சி தடைபட்டது. சரி, இந்த இடத்தில் தொழில் தொடங்குவது இயலாத காரியம் என்று முடிவெடுத்து திருப்பூர் சென்றேன்.
1987ம் ஆண்டு திருப்பூர் வந்த நான் மணி என்கின்ற நாகராஜன் என்பவருடன் பல தொழில் சாலைகளுக்கு சென்று பார்வையிட்டு அவை எப்படி செயல்படுகின்றன என்பதை உள்வாங்கினேன். தொடர்ந்து, அப்போது மிக நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருந்த டேபில் பிரிண்டிங் (Table Printing) செய்யலாம் என்று முடிவெடுத்தேன். குறைந்த முதலீட்டில், வாடகைக்கு ஒரு இடத்தைப் பிடித்து முதல் முயற்சியாக ஒரே ஒரு டேபிளைக் கொண்டு ஸ்கிரீன் பிரிண்டிங் செய்யத் தொடங்கினேன்.
அடுத்த ஆண்டே மற்றொரு டேபிள் வாங்கி என்னுடைய தொழிலை விரிவாக்கம் செய்தேன். இரண்டு டேபிளைக் கொண்டு செய்த ஸ்கிரீன் பிரிண்டிங்கால் பெரிய அளவில் வருமானம் இல்லை என்றாலும் ஓரளவுக்கு வருமானம் வந்து கொண்டிருந்தது.
ஓரளவுவருமானம்அதைத்தாண்டிபேரளவுவருமானம்தேடஅடுத்துநீங்கள்எடுத்தமுயற்சிகள்குறித்துசொல்லுங்களேன்
ஸ்கிரீன் பிரிண்டிங்கைத் தாண்டி வேறு என்ன செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது புதிதாக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருந்த நிட்டிங் மெசினைப் பற்றிய அறிமுகம் ஏற்பட்டது.
முதலில் 12 உள்நாட்டு நிட்டிங் மெசினைக் கொண்டு நிட்டிங் தொழிலைத் தொடங்கினேன். டேபிள் பிரிண்டிங், நிட்டிங் மெசின் என்று இரண்டில் இருந்தும் நான் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததால் சில ஆண்டுகளுக்குப் பிறகு, திரும்ப விவசாயத்துக்கே சென்றுவிடலாமா? என்று கூட யோசித்தேன். அப்போதுதான் நிட்டிங் மெசின் புதிய தொழில்நுட்பத்துடன் வெளிவந்தது.
1990ல் ஏற்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையின் பலனாக புதிய தொழில் நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட நிட்டிங் மெசின் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, அதைப் பயன்படுத்தி தரமான முறையில் நிட்டிங் செய்யப்படும் சூழல் அதிகரித்தது.
நாமும் அத்தகைய நிட்டிங் மெசினை இறக்குமதி செய்யலாம் என்று முடிவெடுத்த நான் 1993ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய நிட்டிங் மெசினைக் கொண்டு நிட்டிங் செய்தேன்.
இறக்குமதி செய்யப்பட்ட அந்த நிட்டிங் மெசின் மூலம் மிக விரைவாகவும், தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் வேலை முடித்து கொடுக்கப்பட்டதால் நல்ல வரவேற்பு கிடைத்தது.
வரவேற்பைப்பெற்ற தங்கள்நிறுவனத்தின்அடுத்தகட்டவளர்ச்சியாகநீங்கள்மேற்கொண்டசெயல்பாடுகள்குறித்து
தமிழ்நாடு முதலீட்டுக் கழகத்தின் (TIIC) உதவியுடன் சிறிய அளவில் இருந்த எங்கள் தொழிற்சாலை 2000ம் ஆண்டின் தொடக்கத்தில் 25 மெசின்களுடன் இயங்க ஆரம்பித்தது. தொடர்ந்து நல்ல நிலையில் சென்றதால் 2003ல் திருப்பூருக்கு அருகில் இருக்கும் வீரபாண்டியில் இரண்டாவது யூனிட்டாக ஃபேப் ஃபிட் அப்பேரல்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்டை ஆரம்பித்தோம். தொடர்ந்து எங்கள் நிறுவனம் அடுத்தகட்ட வளர்ச்சியாக காலர் நிட்டிங், காம்பேக்டிங், ரைசிங், சூடிங், சென்டரிங், பிரிண்டிங் என்று அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்தது.
2009ம் ஆண்டு டையிங் என்ற நிலைக்கு உயர்ந்தோம். இன்று நூலில் இருந்து துணியாக உருவாக்கப்பட்டு வெளிவரும் நிலை வரை படிப்படியாக உயர்ந்து இருக்கிறோம்.
இப்படிப்படிப்படியாகஉயர்ந்தநிலையைஎட்டக்காரணமாகஇருந்ததுஎன்றுநீங்கள்சொல்லவிரும்புவது
எளிதில் விட்டுக்கொடுக்காத விடாமுயற்சியும், தளர்ந்து போகாத தன்னம்பிக்கையும், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் தொலைநோக்கும் தான். மேலும் ஒவ்வொரு நிலையிலும் புதிய வாய்ப்புகளை அடையாளம் கண்டு அதைப் பயன்படுத்திக் கொள்வதும், பொருளின் தரம், அளவு போன்றவை சரியாக அமைய வேண்டும் என்று செயல்பட்டதும் பின்னலாடை தயாரிப்பவர்களுடன் (Exporter) ஒருங்கிணைந்து செயல்பட்டதும் ஒரு காரணம்.
ஆரம்ப நிலையில் இருந்த ஒரு தொழில் துறையில் டெக்னாலஜி அப்படி ஒன்றும் முன்னேறியிருக்காது. தர நிர்ணயங்களும் ஏற்பட்டிருக்காது. அந்த சமயத்தில் தர நிர்ணயத்துக்கும், டெக்னாலஜிக்கும் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டதும் ஒரு முக்கியக் காரணம். சின்னத் தொழிலதிபராக இருப்பவர், பெரிய தொழிலதிபராக மாறுவதற்கு முதல் தேவை தன் பிசினஸை வளர்ப்பதுடன் கூடவே தொழில் நுட்பத்தையும் வளர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து ஆர்வத்துடன் என் தொழிலை பல நிலைகளிலும் விரிவுபடுத்தியதும் ஒரு காரணம்.
ஒரு சின்ன அறையில் கம்பெனி நடத்தி, டெக்னாலஜியைப் பயன்படுத்தாமல் இருந்தவர்கள் சின்ன அளவிலேயே நின்றுவிட்டார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்த நான் அடுத்த கட்டத்துக்கு ஒரே தாவாகத் தாவி புதிய டெக்னாலஜி உள்ள மெசின்களை இறக்குமதி செய்து, தொழில்நுட்ப திறமைசாலிகளைக் கண்டுபிடித்து அவர்களை எங்கள் நிறுவனத்தில் இணைத்துக் கொண்டு செயல்பட்டதும் ஒரு காரணம். இதைத் தவிர தரக்கட்டுப்பாடு, தொடர்ந்து ஏற்படுத்திய புதுமைகள், வேலைக்குப் பணியாளர்களை சேர்ப்பதில் இருந்து வருடக் கடைசியில் பணி மதிப்பீடு செய்வது வரை ஒவ்வொரு விசயத்திலும் மிக நுணுக்கமான கவனம் மற்றும் ஈடுபாட்டுடன் செயல்பட்டது என்று இந்த உயர்ந்த நிலையில் இருப்பதற்கு பல காரணங்களைப் பட்டியலிடலாம்.
ஆரம்ப காலகட்டத்தில் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு நிறுவனமாக இருந்ததை ஒரே இடத்தில் அமைத்து செயல்பட்டதால் கிடைத்த பலனாக நீங்கள் கருதுவது…
ஒரு துறையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாதையை மாற்றும் முயற்சி என்பது பல சவால்கள் நிறைந்தது. சில திட்டங்களில் குறிப்பிட்ட சவால்கள் மிகத் தீவிரமாகச் செயல்படும். உதாரணமாக, நிட்டிங் மட்டும் கொண்ட ஒரு நிறுவனம், டையிங் மட்டும் கொண்ட ஒரு நிறுவனம், காம்பேக்டிங் மட்டும் கொண்ட ஒரு நிறுவனம் என்று ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு நிறுவனமாக இருந்ததால் நூலில் இருந்து முழுமை பெற்ற துணியாக வரும்வரை கிட்டத்தட்ட 5 அல்லது 6 இடங்களுக்குக் கொண்டு சென்று எடுத்துவரும் நிலை இருந்தது. இது சற்று கடினமான பணியாகவே இருந்தது.
இப்படி பல பகுதிகளாக பிரித்து செய்வதில் பல சவால்களை எதிர்கொண்டோம். ஏதாவது ஒரு நிலையில் மாற்றங்களை, புதுமைகளைச் செய்ய முயலும்போது எதிரில் பல சவால்கள் எழும். அவற்றுடன் தொடர்ந்து போராடுவது சற்றுகடினம்.
இதனால் தான் தற்போது பல நிறுவனங்கள் நூலை பெற்று முழுமை பெற்ற துணியாக கொடுப்பது வரையுள்ள அனைத்துப் பணிகளும் செய்யும் விதமாக அனைத்து இயந்திரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. நாங்களும் அப்படித்தான் அனைத்து இயந்திரங்களையும் வைத்திருக்கிறோம். எனவே வளர்ச்சிக்குத் தடையாக இருந்த நிலை மாறி ஒரே இடத்தில் அனைத்துப் பணிகளும் நடைபெறும் வளர்ச்சி நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் அனைத்து நிலைகளும் ஒரே நிறுவனத்தின் மேற்பார்வையில் நடைபெறுவதால் எந்த நிலையில் என்ன பிரச்சனை ஏற்படுகிறது? அதனால் துணியில் எத்தகைய மாற்றம் ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடித்து அதைத் தவிர்க்க முடிகிறது.
இந்தியாவில்தற்பொழுதுபனியன்துணிகளின்தேவைஅதிகரித்திருக்கிறதா?
ஆரம்ப காலத்தில் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் பனியன் துணிகளுக்கு தேவை அதிகமாக இருந்தது. இந்தியாவில் உள்ளாடையாக மட்டுமே பயன்படுத்துபவர்களாக இருந்தார்கள். தற்போது இந்த நிலை மாறிவிட்டது என்றே சொல்லலாம். உதாரணமாக கடந்த ஆண்டு ஏற்றுமதி 13,000 கோடி என்றால் உள்நாட்டில் விற்பனை 6,000 கோடியாக இருப்பதைச் சுட்டிக் காட்டலாம்.
இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி பெரியவர்கள் கூட ‘டி-சர்ட்’ போடும் நிலை வந்துவிட்டது. எவ்வளவோ துணிகள் இருந்தால் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது புதிதாக ‘டி-சர்ட்’ எடுத்து அணிந்து செல்லும் நிலை ஏற்பட்டிருப்பதைப் பார்க்கும் போது உள்நாட்டுச் சந்தையில் இதற்கான தேவை அதிகரிப்பதையே காட்டுகிறது.
தற்போதுஇந்தத்தொழிலில்உள்ளபிரச்சனைகளாகநீங்கள்பார்ப்பது
இந்தத் தொழில் மட்டுமின்றி அனைத்துத் தொழில்களிலுமே பிரச்சனைகள் தோன்றத்தான் செய்கின்றன. அவற்றில் முக்கியமானது வேலையாட்கள் பற்றாக்குறை. உள்ளூரில் தேவையான ஆட்கள் கிடைக்காததால் வெளிமாநிலங்களில் குறிப்பாக பீஹார், ஒரிஸா, அஸ்ஸாம் போன்ற வட மாநிலத்தவரை வேலைக்கு சேர்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
உள்ளூர் பிரச்சனை இதுவென்றால் உலக அளவில் ஏற்படும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் ஏற்றுமதியில் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பணத்தின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் பெருமளவில் இந்தத் தொழிலைப் பாதிக்கச் செய்கிறது.
மற்றொரு முக்கிய பிரச்சனை டையிங் செய்வதால் ஏற்படும் மாசு, சுற்றுச்சூழலை பாதிக்கும் என்ற நிலைப்பாட்டால் இந்த தொழில் பெரிய நெருக்கடியில் சிக்கியிருந்தது. தற்போது இந்தத் துறை இந்த பிரச்சனைகளில் இருந்தெல்லாம் வெளிவந்துவிட்டதாகவே உணர்கிறேன். ஆட்கள் பற்றாக்குறைக்கு புதிய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக உற்பத்தியை மேற்கொள்கிறோம்.
சாயநீரைசுத்திகரிப்புசெய்வதில்திருப்பூரின்தற்போதையநிலை
தற்போது திருப்பூரில் உள்ள 18 சுத்திகரிப்பு நிலையங்களில் 16 நிலையங்கள் பூஜ்ஜிய அளவு வெளியேற்றம் (Zero Level Discharge) நிலையில் இயங்குகின்றன. இது உலகத்தில் சிறந்த சுத்திகரிப்பு என்று வெளிநாடுகளில் இருந்து வந்த அறிவியல் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது. டையிங் செய்வதிலும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் அச்சுறுத்தல் தற்போது இல்லை.
பொதுவாக 2000 டிடிஎஸ் உப்புத் தன்மை கொண்ட நீரை ஆற்றிலோ அல்லது கடலிலோ கலக்குமாறு செய்யலாம் என்பது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் இன்று நாங்கள் ஒரு சொட்டு நீரைக்கூட ஆற்றில் கலப்பதில்லை.
சாயக்கழிவு நீரில் இருந்து முதலில் கலரைப் பிரித்து எடுத்துவிட்டு, தண்ணீரின் உப்புத் தன்மையை 90 சதவீதத்திற்கு குறைத்து விடுகிறோம். அந்த தண்ணீரை மீண்டும் நாங்களே பயன்படுத்திக் கொள்கிறோம். எஞ்சியுள்ள 10 சதவீத உப்புத் தண்ணீரும் படிகங்களாகவே (Solid) இருப்பதால் அதை ஆவியாக்கிவிடுவதால் சாயக்கழிவு நீர் எந்த விதத்திலும் கடலிலோ, ஆற்றிலோ தற்போது கலப்பதில்லை.
இந்த அளவுக்கு தொழில்நுட்பத்தை தனி ஒரு நிறுவனமாக இருந்து ஒரு சிலர் செயல்படுத்துகின்றனர். இதற்கு முதலீடும் அதிகமாகத் தேவைப்படும் என்பதால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள டையிங் நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து பொதுவான ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்கி பயன்படுத்துகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாக்கப்படுகிறது.
தங்களின்இந்தவளர்ச்சிக்குத்துணைநின்றவர்களாகநீங்கள்சொல்லவிரும்புபவர்கள்
என்னுடைய இத்தகைய வளர்ச்சிக்கு உதவியவர்களில் மிக முக்கியமான நபர் என்னுடைய மைத்துனர் திரு. செந்தில்குமார். அவரின் ஈடுபாடும், கடின உழைப்பும் என் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்து உதவியது.
2007ல் தன்னை எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியில் ஈடுபடுத்திக் கொண்ட எனது மூத்த மகன் திரு. கிருபாகரின் தொலைநோக்குச் சிந்தனையால் நிறுவனம் பல கட்டங்களைத் தாண்டி வளர்ச்சியடைந்தது. புதிய இயந்திரங்களையும், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் உள்ளே நுழைந்து அவற்றை சரியாகப் பயன்படுத்தி வளர்ச்சி கண்ட எனது இளைய மகன் திரு. மிதுன் பாலாஜி அவர்களும் 1994 முதல் இன்று வரை எங்களோடு இணைந்து இரவு பகல் பாராது அனைத்துப் பிரிவுகளிலும் பணிபுரியும் மேலாளர், கண்காணிப்பாளர் மற்றும் தொழிலாளர்களின் ஈடுபாடு இந்த நிறுவன வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எந்த நிறுவனமாக இருந்தாலும் நேரடிக் கண்காணிப்பு இருந்தால் தான் வளர்ச்சி இருக்கும் என்பதால் இவர்கள் அனைவரும் ஒவ்வொரு நிலையையும் நேரடியாகக் கண்காணித்து செயல்படுகிறார்கள். இதனால் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி கிடைத்துக் கொண்டிருக்கிறது.
எதிர்வரும்காலங்களில்நீங்கள்செய்யவிரும்புவது
ஒரு துணி உருவாக்கப்படுவதில் தற்போது 100 சதவீத பணிகளை நிறைவு செய்யும் நிறுவனமாக இருக்கிறது. எதிர்காலத்தில் எங்களின் இலக்காக நிர்ணயித்து இருப்பது ‘கார்மெண்ட்ஸ்’ ஏற்றுமதி செய்வது என்பது தான். அதுவும் விரைவாக செய்வோம்.
ஒருவர்குறிக்கோளைஇலக்கைஎளிதில்அடையநீங்கள்தரும்ஆலோசனை
வெற்றி பெற வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், அதைச் செயல்படுத்த கடின உழைப்பு, இடையில் ஏற்படும் தோல்விகளை வீழ்ச்சியாக நினைக்காமல் தொடர்ந்து முயற்சி செய்யும் மனப்பான்மை, அனைவரையும் மதித்து வேலை வாங்கும் தலைமைப் பண்பு என்று உங்களை நீங்கள் வளர்த்திக் கொண்டால் நீங்களும் உங்கள் குறிக்கோளை, இலக்கை எளிதில் அடைய முடியும். ஆரம்பத்தில் தோல்விகள் வரலாம்; ஆனால் கடைசியில் எப்படியும் வெற்றி கிடைத்துவிடும்.
நேர்மறை மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மால் எது முடியும், எது முடியாது என்பதன் எல்லைகளை விஸ்தரிக்க இது போன்ற மனம்தான் வேண்டும். இந்த மனநிலை மட்டும் வந்துவிட்டால் கிடைக்கும் பலன்கள் ஆச்சரியமானவை. இப்படி நேர்மறை எண்ணத்துடன் மனம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் நம்முடைய இலக்குகள் மட்டும் பெரிதாவதில்லை. நம் ஆளுமையையும் ஒரேயடியாக மாற்றி விடுகிறது. சாதிக்க வேண்டும் என்ற சவால் தோன்றியவுடன் அதைச் சாதிப்பதற்குத் தேவையான திறமைகளும் தானாகவே வளர்ந்துவிடும்.
எதிலும் புதுமையைப் புகுத்த வேண்டும். ஆனால் இன்று பெரும்பாலான நிறுவனங்கள் புதிதாக எதையும் செய்ய முயற்சிப்பதுகூட இல்லை. அதற்கு அவர்கள் சொல்லும் முதல் சாக்கு, ‘இதைச் செய்யத் தேவையான திறமைகள் நம்மிடம் இல்லை’. ஆனால் நடைமுறை உண்மை என்னவென்றால் இந்த சவால்கள்தான் திறமையை வளர்க்கும். திறமையை கையில் வைத்துக்கொண்டு யாரும் சவால்களைத் தேடிப்போவதில்லை. இந்நிலை மாறவேண்டும். சவால்களை எதிர்கொண்டு சாதிக்க முயற்சிக்க வேண்டும்.
இதைத் தவிர எந்த ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்றாலும் அதுபற்றி அறிவை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டு ஈடுபடுவது நல்லது. குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தொழில் பயிற்சி பெற வேண்டும். அந்த பயிற்சியில் இருந்து கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு தொழில் தொடங்கினால் அவற்றில் ஏற்படும் பல பிரச்சனைகளையும், சிக்கல்களையும் எளிதில் சமாளித்து வெற்றி பெற முடியும் என்பது என் கருத்து.
தன்னம்பிக்கைகுறித்து
வாழ்க்கையில் ஏமாற்றம், இயலாமை, விரக்தி ஏற்படக் காரணம் தன்னைப் பற்றிய ஒரு குறுகிய மனப்பான்மை தான். தன்னைப் பற்றி நம்பிக்கையுடன் செய்ய முடியும், சாதிக்க முடியும், நம்மால் முடியும் என்று செயல்பட்டால் வெற்றி நிச்சயம். சாதனையாளர்கள் பின்னே பார்க்கும் பொழுது அவர்களுடைய விடாமுயற்சி, கடின உழைப்பு, நேர்மை அனைவரையும் அரவணைத்து வந்தது நம் கண்முன்னே தெரிகின்றது.
இந்த தன்னம்பிக்கை மாத இதழ் வெற்றிப்படிகளை தொட்டவர்களைப் பாராட்டும் வகையிலும், தொட முயற்சி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், ஒவ்வொரு துறையிலும் புதிய சாதனையாளர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதால், தனி மனிதருக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கும் பயனுள்ள மாற்றங்கள் ஏற்பட வழிகாட்டியாக அமையும்.
பெட்டிச்செய்தி:
வேளாண்மையில் ஆர்வம்:
திரு.விவேகானந்தன் அவர்கள் தொழில் துறையில் சாதனை நிகழ்த்திக் கொண்டிருந்தாலும் வேளாண்மையிலும் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். வேளாண்மையின் மீதுள்ள ஆர்வத்தினால் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள நாகூர் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பொள்ளாச்சி நெட்டை(Pollachi Tall), டிப்டூர், நௌவ்லக், டீ ஜே (Dee Jay) அந்தமான், காசர்கோடு போன்ற மிகச்சிறந்த தென்னை வகைகளைப் பயிரிட்டுள்ளார்.
இந்த மரங்கள் ஒவ்வொரு வரிசையிலும் ஒவ்வொரு வகையாக நடப்பட்டு இருக்கின்றன. நல்ல வீரியத்துடன் கூடிய மகசூல் கிடைக்கும் என்பதால் இவ்வாறு நடப்பட்டுள்ளன. மேலும் வீட்டில் இருந்தபடியே தண்ணீர் மேலாண்மை (Water Management)-யைத் திறம்படச் செய்ய புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்.
நற்குணங்களுக்குக் காரணம்
பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து சேவை செய்து வருகிறார். கல்வி, மருத்துவம், வேலைவாய்பு என்று பல உதவிகளைச் செய்து வருகிறார். இத்தகைய மனப்பான்மையை தனக்கு ஏற்படுத்தியவர் சுல்தான்பேட்டை திரு. எஸ்.ஆர். இராஜகோபால் அவர்தான் என்று கூறும் இவர், சக மனிதர்களுடன் எப்படி பழகுவது? அவர்களுக்கு எப்படி மதிப்பளிப்பது? தொழிலாளர்கள் எல்லோருடைய ஒத்துழைப்பையும் பெற்று எப்படி நிர்வாகத்தைத் திறம்பட கொண்டுசெல்வது? சமுதாயத்துக்கு தன்னலம் கருதாமல் பயன்களைக் கொடுப்பது என்று பல ஆளுமைகளையும், பன்முகத்தன்மைகளையும் திரு. இராஜகோபால் அவர்களை வழிகாட்டியாகக் கொண்டே கற்றுக்கொண்டதாகவும் சொல்கிறார்.
தலைமைப் பொறுப்பில்…
30 ஆண்டுகளுக்கு மேலாக சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருந்து பல ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்து பள்ளியின் தரம் மேம்பட உதவிக்கொண்டிருக்கிறார்.
தான் படித்த எஸ்.ஆர்என்.வி மேல்நிலைப் பள்ளியின் முன்னால் மாணவர்கள் கூட்டமைப்பின் பொருளாளராக இருக்கிறார்.
200 உறுப்பினர்களையும், 4000 நிட்டிங் மெசின்களையும் கொண்டு இயங்கும் சவுத் இந்தியா இம்போர்ட்டடு மெசின் நிட்டர்ஸ் அசோசியேசனின் தலைவராகவும் திறம்பட செயலாற்றுகிறார்…

முன்னேற்றத்துக்கு மூன்று சொற்கள் -ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்

இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை, வேதனைகளும் சோதனைகளும் நிறைந்தது. ஆயினும் முன்னேற விரும்புகின்றவர்களுக்கு அவர் வாழ்க்கை ஒரு அருமையான பாடமாகும்.
ஒரு பெண்ணால் முன்னேற முடியுமா? வறுமை நிறைந்த தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா? அதுவும் இளமை ததும்பும் பருவத்தில் தன்னைக் காத்துக்கொண்டு தன் குடும்பத்தைக் காப்பாற்றமுடியுமா? என்றால் “முடியும்ணி என்று முன் உதாரணமாக நிற்கிறார் 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை புரிந்த இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.
பதின்மூன்று வயதில் தன் தந்தையை இழந்த அவர், தன் இரண்டு சகோதரிகளையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றார். வறுமைதான் அவருக்கு பெரும் சொத்தாக அமைந்தது.
அவர் தந்தை ஒரு பாடகர், நடிகரும் கூட. சிறு வயதில் 7ஆம் வயதிலேயே அவரோடு மேடையில் பாடவும், சில சமயங்களில் நடிக்கவும் சென்றுள்ளார் சிறுமி லதா.
தந்தையின் இறப்புக்கு பிறகு எப்படியாவது குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்று ஒரு நாடகக் கம்பெனி விடாமல், ஸ்டுடியோ விடாமல் ஏறி இறங்கினார்: “”குரல் சரியில்லை” இசை யமைப்பாளர்கள் அளித்த பதில்.
அவர் அழகாக இருந்ததால் நடிக்கவே அழைத்தர்கள். ஆனால், லதாவுக்கு நடிப்பில் விருப்பமில்லை. இசையில்தான் பெரும் விருப்பம். அதனால் பாடுவதையே விரும்பினார்.
நடிப்பா? பாடலா? என்றமுடிவுக்கு வரவேண்டிய கட்டம். சலனத்திற்கு ஆளாகாமல் ஒன்றையே தேர்ந்தார். பாடல்தான் தனது வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்தார். இதுதான் அவரது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது.
ஒரு பட உரிமையாளர் வினாயக் என்பவர் பாட வாய்ப்பு நல்கினார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் மாரடைப்பில் இறந்து போனதும் மீண்டும் வாழ்வில் வறுமைப் புயல் வீசத் தொடங்கியது.
“வாழ்க்கை யில் ஒரு இலட்சியத்தை எடுத்துக்கொள். அதையே உன் உயிராகவும் உடம்பாகவும் போற்று. நாடி நரம்புகளில் எல்லாம் உன் இலட்சியம் எல்லாம் குருதியோடு கலந்து ஓடட்டும். மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, அது ஒன்றையே உன் கண்முன் நிறுத்திப் பாடுபடு. இது ஒன்றுதான் வெற்றிக்கு வழிணி என்ற விவேகானந்தரின் கருத்தை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியவர் லதா மங்கேஷ்கர்.
இன்று 30 ஆயிரம் பாடல்களுக்குமேல் பாடி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். நாம் எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பது, முன்னேற விரும்புகின்றவர்கள் மேற்கொள்ள வேண்டிய பாடம். லதா 24மணி நேரமும் வாய்ப்பை எதிர்நோக்கி தன்னைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள் வேலைதேடி சோர்ந்துபோய் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பொழுது எதிர்பாராதவிதமாக ஒரு இசையமைப்பாளர் “குலாம் ஹைதர்” என்பவரைச் சந்தித்தார்.
லதாவின் குரல் வளத்தை அரிய விரும்பிய அவர் அந்த இடத்திலேயே கையிலிருந்த சிகரெட் தகரப் பெட்டியைக் கொடுத்த, அதிலேயே தாளம்போட்டு பாடச்சொன்னார். லதா அப்படியே பாடினார். அவர் நெடுநாள் தன்னை தயார் செய்து கொண்டிருந்த திறமைக்கு அன்று ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அந்தத் திறமையும் அவருக்கு கை கொடுத்தது. அன்றிலிருந்து அவர் படிப்படியாக வெற்றிப் படிகளில் ஏறத்தொடங்கினார்.
“திறமையான மாலுமிக்கு காற்று கூட அவன் சொல்லுகின்ற திசையில் வீசும்ணி என்பார்கள். லதாவின் வாழ்வில் அது உண்மையாயிற்று.
இன்று அறுபது வயதாகும் (28#9#89) லதா தன் வாழ்வை இசைக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார். திருமணம் செய்து கொள்ளவில்லை. சோகமாகட்டும், மகிழ்ச்சியாகட்டும், பக்தி யாகட்டும் ஒன்றிப் பாடுகின்ற தன்மையால் அந்த உணர்ச்சிகளைக் கேட்போர் உள்ளத்திலும் வரவழைத்து விடுவார். அதுதான் அவரது வெற்றியின் இரகசியமாகும்.
திரைப்படப் பாடல்கள் மட்டுமன்றி, கர்நாடக இசையிலும் தேர்ச்சி பெற்றார். இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியைப் போன்று இன்று புகழ் பூத்து விளங்குகிறார். மராட்டிய மண்ணில் பிறந்த அவர், மராட்டிய வீரன் சிவாஜியைப் போல, மராட்டிய நாவலாசிரியர் காண்டேகரைப் போல, இசைக்குயில் லதா மகேஷ்கரும் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்.
அன்றைய அதே அடக்கம், அதே பணிவு, இன்றும் அவரோடு நிலைத்து நிற்பதால் புகழ் பூத்த பெண்மணியாக, சாதனை படைத்த பெண்மணியாகத் திகழ்கிறார். பெண்ணால் அதுவும் அழகான இளம் பெண்ணால் முடியுமா? என்று ஐயத்தை எழுப்புகின்றவர்களுக்கு லதா மங்கேஷ்கர் ஒரு விடையாகவே விளங்குகிறார்.

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...