November 28, 2009

தோல்வியில் நீ துவளாதே!

இன்றைய தேதியில் உலகம் கொண்டாடும் ஒரு பிரபலம் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங் தான். ஒருமுறைஹாக்கிங் சிறு சாலை விபத்தில் சிக்கி லேசான காயமடைந்தார். இது நடந்து சுமார் பத்துமணி நேரத்துக்குள் அமெரிக்காவின் அத்தனை டி.வி. சேனல்களும் அந்த நிகழ்ச்சியைப் பற்றி செய்தி சேகரிக்க அவரது வீட்டின் முன் குவிந்துவிட்டன.

இத்தனை புகழ் பெற்றவராக ஸ்டீவன் ஹாக்கிங் மாறிடக்காரணம் என்ன? அவரது “காலத்தின் சுருக்கமான வரலாறு’ (A Brief History of Time) என்ற புத்தகமா, பிரபஞ்சம் அல்லது பேரண்டத்தைப் பற்றிய அவரது ஆராய்ச்சி களா, பிரபஞ்சத்தின் தோற்றம், கருநிறைகள் (Block holes) போன்றவை பற்றிய அவரது கருத்துக்களா?

ஒரு வகையில் பார்க்கப்போனால் இவையெல்லாமே ஸ்டீவன் ஹாக்கிங்கின் புகழுக்குக் காரணம்தான். குறிப்பாக, சிக்கலான விஞ்ஞான உண்மைகளை உள்ளடக்கிய அவரது புத்தகம் ஜெஃப்ரி ஆர்ச்சர், ராபர்ட் லட்லம் போன்ற நாவலாசிரியர்களின் “பெஸ்ட்செல்லர்’களோடு போட்டி போட்டுக் கொண்டு கோடிக்கணக்கில் விற்றுத் தீர்ந்தது; ஸ்டீவன் ஹாக்கிங்கிற்கு கோடி கோடியாய் பணத்தைக் கொட்ட வைத்தது.

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி சாதித்தது, ஸ்டீவன் ஹாக்கிங்கின் தன்னம்பிக்கை தான் என்பது ஹாக்கிங்கின் மருத்துவர், மனைவி, நண்பர்கள், பதிப்பகத்தார் ஆகிய எல்லோருமே தெரிந்த ஒரு உண்மைதான். ஹாக்கிங்கின் தளராத தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நவீன விஞ்ஞானத்தைக் கூட வாசகர்கள் விரும்பும் வகையில் ஜனரஞ்சகமாகத் தரமுடியும் என்பதில் அவர் கொண்டிருந்த ஆர்வம் மற்றும் உறுதி ஆகியவையே அவரைச் சாதனையாளர் ஆக்கின.

இருபத்தொரு வயதில் ‘Amyotrophic Lateral Sclerosis (ALS)’ என்னும் இயக்க நரம்புசெல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டார் ஸ்டீவன் ஹாக்கிங். இது மிகவும் கொடுமையான நோய், நாளுக்கு நாள் உடலின் பாகங்கள் படிப் படியாக செயலிழந்துகொண்டே வரும். ஆனாலும், மனம் தளர்ந்துவிடாமல் மிகுந்த மன வலிமையோடு, தன்னம்பிக்கையோடு, விடா முயற்சியுடன் அயராது உழைத்தார். ஸ்டீவன் ஹாக்கிங். இரண்டே வருடங்களில் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் கெடு விதித்ததை யும் மீறி இன்றைக்கும் தனது 66 வயதில் விஞ்ஞான உலகின் இரண்டாவது ஐன்ஸ்டீன் என்ற புகழோடு ஸ்டீவன் ஹாக்கிங் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்றால் இதற்குக் காரணம் அவரது தன்னம்பிக்கையன்றி வேறு என்ன?

உலகில் எல்லா விலங்குகளின் வளர்ச்சியும் கிடைமட்டத்தில்தான் இருக்கிறது. ஆனால், மனிதன் மட்டும் தான் உயரே வளர்கிறான். தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து நிற்பவனும் அவனே. வளர்ச்சி, முன்னேற்றம், சாதனை இவையெல்லாம் மனிதனுக்கு மட்டுமே சாத்தியம். அளப்பரிய ஆற்றல் நம்மிடம் மட்டுமே இருக்கிறது.

நம் மனதில் கோடிக்கணக்கான சூரியன் களின் ஆற்றல் அழியாத ஜீவ சைதன்யமாக உறைந்திருக்கிறது. ஆனால் நாமோ நமது ஆற்றலை மறந்துவிட்டு, சக்திகளை ஒதுக்கி விட்டு பலவீனர்களாக நம்மைக் கருதிக்கொண்டு ஒருவகை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறோம்; பிரச்சனைகளால் சூழ்ந்து கிடக்கிறோம்; பயம், கவலை, சந்தேகம், வேதனை, விரக்தி போன்றவற்றால் வீழ்ந்து கிடக்கிறோம்.

ஒரு கதை உண்டு. பிறந்து கண்கூட விழித்திராத ஒரு சிறிய சிங்கக்குட்டி தன் தாயிடமிருந்து எப்படியோ வழிதவறிவிட்டது. அந்த வழியாக வந்த ஆட்டுமந்தையிடமிருந்து ஒரு ஆடு அந்தச் சிங்கக்குட்டியை எடுத்துவந்து பாலூட்டி வளர்த்தது. நாளடைவில் ஆட்டு மந்தையுடன் வளர்ந்த சிங்கக்குட்டி ஆடு போலவே புல் மேய்ந்து மே! மே! என்று கத்தவும் ஆரம்பித்தது. பெரிய சிங்கமாக அது வளர்ந்து விட்ட போதிலும்கூட, அது அப்படியே தான் ஆட்டு மந்தையோடு மந்தையாக வலம் வந்தது.

சிலகாலம் கழித்து அந்த வழியாக வந்த வேறு ஒரு சிங்கம் தன்னைப் போன்றஒரு சிங்கம் ஆட்டுமந்தையிலுள்ள ஆடுகளுடன் ஒன்றாகப் புல் மேய்வதையும் “மே! மே!’ என்று கத்துவதை யும் பார்த்து அதிசயித்துப் போனது. உடனே அந்த சிங்கத்துடன் பேச விரும்பியது. ஆனால், ஆட்டு மந்தைச் சிங்கமோ இந்த சிங்கத்தைப் பார்த்து ஆடுகளைப் போலவே பயந்து ஓடியது. எனவே இரண்டாவது சிங்கத்தால் ஆட்டு மந்தைச் சிங்கத்துடன் பேசமுடியாமல் போனது.

ஒருநாள் இரண்டாவது சிங்கத்துக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த சிங்கம் ஆட்டுமந்தைச் சிங்கத்தைப் பார்த்து, “நீ ஒரு சிங்கம். ஆட்டு மந்தையுடன் ஏன் சுற்றித் திரிகிறாய்?’ என்று கேட்டது. ஆனால், முதல் சிங்கமோ, “இல்லை, நான் ஆடு தான்’ என்ற படியே “மே! மே!’ என்று கத்தியது. உடனே இரண்டாவது சிங்கம் “அப்படியா என்னுடன் வா’ என்று கூறியபடியே முதல் சிங்கத்தை இழுத்துச் சென்று சற்றுத் தொலைவிலிருந்த ஒரு நீர்நிலைக்கு அழைத்துச் சென்று தத்தம் உருவப் பிரதிபலிப்புகளைக் காட்டி “என்னுடைய உருவம், உன்னுடைய உருவம் இரண்டையும் தண்ணீருக்குள் பார்’ என்றது. ஆட்டுமந்தைச் சிங்கமும் தண்ணீருக்குள் பார்த்தபோது தானும் ஒரு சிங்கம் தான் என்று உணர்ந்தது. அத்துடன் அந்த சிங்கத்தின் கத்தல் அகன்றதோடு கம்பீரமான முழக்கம் அதன் வாயிலிருந்து வெளிப்பட்டது.

மனிதர்களும் இப்படித்தான்! தத்தம் சிறுவயதிலிருந்தே தவறான கருத்துக்கள் திணிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள். நாம் பலவீனர்கள், ஆற்றல் குறைந்தவர்கள் என்றெல்லாம் நம்மை நாமே நினைத்திடும் நிலைக்கு ஆளாகிக் கொள்கிறோம். வழிதவறிய சிங்கம் போலவே நமது ஆற்றலை நாமே குறைத்து மதிப்பிட்டு ஆடுகளைப் போல் கதறிப் பதறித் தவிக்கிறோம்.

நம்மிடம் பலவீனம் இருப்பதாக நாம் ஏன் நினைக்க வேண்டும்? நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தான் இந்த உலகமும் தோற்றமளிக்கும். இருட்டில் ஒரு வெட்டப்பட்ட மரம் நிற்கிறது. அதைப் பார்க்கும் திருடன் அதைப் போலீஸ்காரர் என்று நினைத்து பயப்படுகிறான். காதலியைத் தேடிவரும் காதலனோ அவள்தான் அங்கு நிற்கிறாள் என்று எண்ணி ஆசையுடன் அதை நோக்கி விரைகிறான். பேய்க்கதைகள் கேட்ட ஒரு சிறுவனோ அதை ஆவி என்று கருதி ஓடி ஒளிகிறான். ஆனால், இத்தனைக்கும் அந்த மரம் மரமாகவே தான் இருக்கிறது.

நாம் ஆற்றல் நிறைந்தவர்கள்; நமது மனம் ஆற்றலின் இருப்பிடம். “நான் ஆற்றலின் உறைவிடம், சக்தி சொரூபம் ஆகிய ஆன்மா, இறைவனின் செல்லக்குழந்தை’ என்றபலம் மிக்க எண்ணங்கள் நமது மனங்களில் உதயமாகட்டும். அப்போது தொடர்ச்சியாக எண்ணப்படும் இந்த எண்ணங்களின் வலு நம்மைத் தூக்கி நிறுத்தி சாதனையாளர்களாக்கும்.

இப்போது நாம் எழவேண்டிய நேரம் வந்துவிட்டது. மனதின் மகத்தான ஆற்றலை மானிட குலம் புரிந்து கொள்ளும் தருணம் வாய்த்துவிட்டது. “எழுமின்! விழிமின்!’ என்ற விவேகானந்தரின் வீரவார்த்தைகள் காற்றில் பறக்கும் பஞ்சுக்கே, விடுபட்ட துப்பாக்கிக் குண்டின் வேகத்தைத் தரும்போது நமக்குத் தராதா என்ன? எனவே இனியும் வேண்டாம் உறக்கம். அறியாமையும், சோம்பலும், கவன மின்மையும் நமது தேசிய சொத்துக்களாக இருந்தது போதும். இனி விழித்திடுவோம்; எழுந்திடுவோம்; வெற்றிப்பாதையில் வீரநடை போட்டிடுவோம்!

தளராத தன்னம்பிக்கையோடு வெற்றிநடை போடவேண்டியது நாம் மட்டுமல்ல. நமது அருமைக் குழந்தைகளின் மனதிலும் “நாம் ஆற்றல் வாய்ந்தவர்கள்; சாதிக்கப் பிறந்தவர்கள்’ என்ற நம்பிக்கையூட்டும் நேர்மறை எண்ணங் களையே, வீறுகொண்டு எழவைக்கும் வெற்றிச் சிந்தனைகளையே விதைப்போம்.

உன்னத சிந்தனைகளால் உள்ளங்களை நிரப்புவோம்; உயரங்களைத் தொடும் உரம்வாய்ந்த உறுதிமனிதர்கள் நிறைந்த ஏற்றமிகு எதிர்காலத்தை எளிதாய்ப் படைத்திடுவோம்.

தாழ்வுமனப்பான்மையை தவிடுபொடியாக்குங்கள்

இன்றைய தேதியில் உலகம் கொண்டாடும் ஒரு பிரபலம் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங் தான். ஒருமுறைஹாக்கிங் சிறு சாலை விபத்தில் சிக்கி லேசான காயமடைந்தார். இது நடந்து சுமார் பத்துமணி நேரத்துக்குள் அமெரிக்காவின் அத்தனை டி.வி. சேனல்களும் அந்த நிகழ்ச்சியைப் பற்றி செய்தி சேகரிக்க அவரது வீட்டின் முன் குவிந்துவிட்டன.
இத்தனை புகழ் பெற்றவராக ஸ்டீவன் ஹாக்கிங் மாறிடக்காரணம் என்ன? அவரது “காலத்தின் சுருக்கமான வரலாறு’ (A Brief History of Time) என்ற புத்தகமா, பிரபஞ்சம் அல்லது பேரண்டத்தைப் பற்றிய அவரது ஆராய்ச்சி களா, பிரபஞ்சத்தின் தோற்றம், கருநிறைகள் (Block holes) போன்றவை பற்றிய அவரது கருத்துக்களா?


ஒரு வகையில் பார்க்கப்போனால் இவையெல்லாமே ஸ்டீவன் ஹாக்கிங்கின் புகழுக்குக் காரணம்தான். குறிப்பாக, சிக்கலான விஞ்ஞான உண்மைகளை உள்ளடக்கிய அவரது புத்தகம் ஜெஃப்ரி ஆர்ச்சர், ராபர்ட் லட்லம் போன்ற நாவலாசிரியர்களின் “பெஸ்ட்செல்லர்’களோடு போட்டி போட்டுக் கொண்டு கோடிக்கணக்கில் விற்றுத் தீர்ந்தது; ஸ்டீவன் ஹாக்கிங்கிற்கு கோடி கோடியாய் பணத்தைக் கொட்ட வைத்தது.


ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி சாதித்தது, ஸ்டீவன் ஹாக்கிங்கின் தன்னம்பிக்கை தான் என்பது ஹாக்கிங்கின் மருத்துவர், மனைவி, நண்பர்கள், பதிப்பகத்தார் ஆகிய எல்லோருமே தெரிந்த ஒரு உண்மைதான். ஹாக்கிங்கின் தளராத தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நவீன விஞ்ஞானத்தைக் கூட வாசகர்கள் விரும்பும் வகையில் ஜனரஞ்சகமாகத் தரமுடியும் என்பதில் அவர் கொண்டிருந்த ஆர்வம் மற்றும் உறுதி ஆகியவையே அவரைச் சாதனையாளர் ஆக்கின.


இருபத்தொரு வயதில் ‘Amyotrophic Lateral Sclerosis (ALS)’ என்னும் இயக்க நரம்புசெல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டார் ஸ்டீவன் ஹாக்கிங். இது மிகவும் கொடுமையான நோய், நாளுக்கு நாள் உடலின் பாகங்கள் படிப் படியாக செயலிழந்துகொண்டே வரும். ஆனாலும், மனம் தளர்ந்துவிடாமல் மிகுந்த மன வலிமையோடு, தன்னம்பிக்கையோடு, விடா முயற்சியுடன் அயராது உழைத்தார். ஸ்டீவன் ஹாக்கிங். இரண்டே வருடங்களில் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் கெடு விதித்ததை யும் மீறி இன்றைக்கும் தனது 66 வயதில் விஞ்ஞான உலகின் இரண்டாவது ஐன்ஸ்டீன் என்ற புகழோடு ஸ்டீவன் ஹாக்கிங் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்றால் இதற்குக் காரணம் அவரது தன்னம்பிக்கையன்றி வேறு என்ன?


உலகில் எல்லா விலங்குகளின் வளர்ச்சியும் கிடைமட்டத்தில்தான் இருக்கிறது. ஆனால், மனிதன் மட்டும் தான் உயரே வளர்கிறான். தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து நிற்பவனும் அவனே. வளர்ச்சி, முன்னேற்றம், சாதனை இவையெல்லாம் மனிதனுக்கு மட்டுமே சாத்தியம். அளப்பரிய ஆற்றல் நம்மிடம் மட்டுமே இருக்கிறது.


நம் மனதில் கோடிக்கணக்கான சூரியன் களின் ஆற்றல் அழியாத ஜீவ சைதன்யமாக உறைந்திருக்கிறது. ஆனால் நாமோ நமது ஆற்றலை மறந்துவிட்டு, சக்திகளை ஒதுக்கி விட்டு பலவீனர்களாக நம்மைக் கருதிக்கொண்டு ஒருவகை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறோம்; பிரச்சனைகளால் சூழ்ந்து கிடக்கிறோம்; பயம், கவலை, சந்தேகம், வேதனை, விரக்தி போன்றவற்றால் வீழ்ந்து கிடக்கிறோம்.


ஒரு கதை உண்டு. பிறந்து கண்கூட விழித்திராத ஒரு சிறிய சிங்கக்குட்டி தன் தாயிடமிருந்து எப்படியோ வழிதவறிவிட்டது. அந்த வழியாக வந்த ஆட்டுமந்தையிடமிருந்து ஒரு ஆடு அந்தச் சிங்கக்குட்டியை எடுத்துவந்து பாலூட்டி வளர்த்தது. நாளடைவில் ஆட்டு மந்தையுடன் வளர்ந்த சிங்கக்குட்டி ஆடு போலவே புல் மேய்ந்து மே! மே! என்று கத்தவும் ஆரம்பித்தது. பெரிய சிங்கமாக அது வளர்ந்து விட்ட போதிலும்கூட, அது அப்படியே தான் ஆட்டு மந்தையோடு மந்தையாக வலம் வந்தது.


சிலகாலம் கழித்து அந்த வழியாக வந்த வேறு ஒரு சிங்கம் தன்னைப் போன்றஒரு சிங்கம் ஆட்டுமந்தையிலுள்ள ஆடுகளுடன் ஒன்றாகப் புல் மேய்வதையும் “மே! மே!’ என்று கத்துவதை யும் பார்த்து அதிசயித்துப் போனது. உடனே அந்த சிங்கத்துடன் பேச விரும்பியது. ஆனால், ஆட்டு மந்தைச் சிங்கமோ இந்த சிங்கத்தைப் பார்த்து ஆடுகளைப் போலவே பயந்து ஓடியது. எனவே இரண்டாவது சிங்கத்தால் ஆட்டு மந்தைச் சிங்கத்துடன் பேசமுடியாமல் போனது.


ஒருநாள் இரண்டாவது சிங்கத்துக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த சிங்கம் ஆட்டுமந்தைச் சிங்கத்தைப் பார்த்து, “நீ ஒரு சிங்கம். ஆட்டு மந்தையுடன் ஏன் சுற்றித் திரிகிறாய்?’ என்று கேட்டது. ஆனால், முதல் சிங்கமோ, “இல்லை, நான் ஆடு தான்’ என்ற படியே “மே! மே!’ என்று கத்தியது. உடனே இரண்டாவது சிங்கம் “அப்படியா என்னுடன் வா’ என்று கூறியபடியே முதல் சிங்கத்தை இழுத்துச் சென்று சற்றுத் தொலைவிலிருந்த ஒரு நீர்நிலைக்கு அழைத்துச் சென்று தத்தம் உருவப் பிரதிபலிப்புகளைக் காட்டி “என்னுடைய உருவம், உன்னுடைய உருவம் இரண்டையும் தண்ணீருக்குள் பார்’ என்றது. ஆட்டுமந்தைச் சிங்கமும் தண்ணீருக்குள் பார்த்தபோது தானும் ஒரு சிங்கம் தான் என்று உணர்ந்தது. அத்துடன் அந்த சிங்கத்தின் கத்தல் அகன்றதோடு கம்பீரமான முழக்கம் அதன் வாயிலிருந்து வெளிப்பட்டது.


மனிதர்களும் இப்படித்தான்! தத்தம் சிறுவயதிலிருந்தே தவறான கருத்துக்கள் திணிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள். நாம் பலவீனர்கள், ஆற்றல் குறைந்தவர்கள் என்றெல்லாம் நம்மை நாமே நினைத்திடும் நிலைக்கு ஆளாகிக் கொள்கிறோம். வழிதவறிய சிங்கம் போலவே நமது ஆற்றலை நாமே குறைத்து மதிப்பிட்டு ஆடுகளைப் போல் கதறிப் பதறித் தவிக்கிறோம்.


நம்மிடம் பலவீனம் இருப்பதாக நாம் ஏன் நினைக்க வேண்டும்? நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தான் இந்த உலகமும் தோற்றமளிக்கும். இருட்டில் ஒரு வெட்டப்பட்ட மரம் நிற்கிறது. அதைப் பார்க்கும் திருடன் அதைப் போலீஸ்காரர் என்று நினைத்து பயப்படுகிறான். காதலியைத் தேடிவரும் காதலனோ அவள்தான் அங்கு நிற்கிறாள் என்று எண்ணி ஆசையுடன் அதை நோக்கி விரைகிறான். பேய்க்கதைகள் கேட்ட ஒரு சிறுவனோ அதை ஆவி என்று கருதி ஓடி ஒளிகிறான். ஆனால், இத்தனைக்கும் அந்த மரம் மரமாகவே தான் இருக்கிறது.


நாம் ஆற்றல் நிறைந்தவர்கள்; நமது மனம் ஆற்றலின் இருப்பிடம். “நான் ஆற்றலின் உறைவிடம், சக்தி சொரூபம் ஆகிய ஆன்மா, இறைவனின் செல்லக்குழந்தை’ என்றபலம் மிக்க எண்ணங்கள் நமது மனங்களில் உதயமாகட்டும். அப்போது தொடர்ச்சியாக எண்ணப்படும் இந்த எண்ணங்களின் வலு நம்மைத் தூக்கி நிறுத்தி சாதனையாளர்களாக்கும்.


இப்போது நாம் எழவேண்டிய நேரம் வந்துவிட்டது. மனதின் மகத்தான ஆற்றலை மானிட குலம் புரிந்து கொள்ளும் தருணம் வாய்த்துவிட்டது. “எழுமின்! விழிமின்!’ என்ற விவேகானந்தரின் வீரவார்த்தைகள் காற்றில் பறக்கும் பஞ்சுக்கே, விடுபட்ட துப்பாக்கிக் குண்டின் வேகத்தைத் தரும்போது நமக்குத் தராதா என்ன? எனவே இனியும் வேண்டாம் உறக்கம். அறியாமையும், சோம்பலும், கவன மின்மையும் நமது தேசிய சொத்துக்களாக இருந்தது போதும். இனி விழித்திடுவோம்; எழுந்திடுவோம்; வெற்றிப்பாதையில் வீரநடை போட்டிடுவோம்!


தளராத தன்னம்பிக்கையோடு வெற்றிநடை போடவேண்டியது நாம் மட்டுமல்ல. நமது அருமைக் குழந்தைகளின் மனதிலும் “நாம் ஆற்றல் வாய்ந்தவர்கள்; சாதிக்கப் பிறந்தவர்கள்’ என்ற நம்பிக்கையூட்டும் நேர்மறை எண்ணங் களையே, வீறுகொண்டு எழவைக்கும் வெற்றிச் சிந்தனைகளையே விதைப்போம்.


உன்னத சிந்தனைகளால் உள்ளங்களை நிரப்புவோம்; உயரங்களைத் தொடும் உரம்வாய்ந்த உறுதிமனிதர்கள் நிறைந்த ஏற்றமிகு எதிர்காலத்தை எளிதாய்ப் படைத்திடுவோம்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்திற்கு சில பொதுவான யோசனைகள்:

1. தினமும் நிறைய சீரகத் தண்ணீர் அருந்துங்கள்.

2. பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

3. பருத்தி ஆடையை அணியுங்கள்.

4. வெயிலில் வெளியில் செல்லும் போது sun screen லோஷன் உபயோகப்படுத்துங்கள்.

5. மனதை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ளுங்கள்

அழகு குறிப்புகள்

கண்கள் பராமரிப்பு :

கண்ணில் கருவளையமா?

பல பெண்களுக்கு உள்ள பிரச்னையே கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை போக்குவது எப்படி என்பது தான். கருவளையங்கள் முகத்தின் அழகை கெடுத்து விடுகின்றன.

சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இதுதான் அவர்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது. கரு வளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

* உருளை கிழங்கை மேல் தோலோடு சீவி சாறு எடுத்து, கண்களுக்கு அடியில் தடவி வந்தால் கருவளையம் நீங்கும்.

* பிஞ்சு வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். இதனால் கண்கள் குளிர்ச்சி அடைவதுடன் கருவளையமும் குறையும்.

* மாதுளம் பழச்சாறு, பன்னீர் ஆகியவற்றை கண்களுக்கு அடியில் தடவி வந்தால் பளிச்சிடும் கண்களை பெறலாம்.

* நம் முகத்தைப் பிரகாசமாகக் காட்டுவது நமது கண்களே. அக்கண்கள், பளிச்செனவிருக்க தினமும் இரவில் விளகெண்ணெயை கண்ணிமையின் மேலேயும், கண்ணின் கீழ்ப் பகுதி களில் உருளைக்கிழங்குச் சாரையும் தடவவேண்டும். அப்படித் தடவிவந்தால் காலையில் கண்கள் பளிச்சென இருக்கும். கருவளையங்கள் போக, துளசியும் புதினாவும் அரைத்து பன்னீர் (rosewater) சேர்த்துத் தடவவேண்டும்.


கண்களை அலங்கரியுங்கள்

கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்துவிட்டாலே போதும்... பாதி அழகு வந்துவிடும். எனவே உங்களைச் சொல்லும் கண்களை அழகாக அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிலருக்கு ஐ லைனர் கூட போடத் தெரியாது. ஆனால் தெரியாது என்று விட்டுவிட வேண்டாம். வீட்டில் இருக்கும்போது போட்டு முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

சரி கண்களை எப்படி அலங்கரிப்பது என்று பார்ப்போம்.

உங்கள் கண்கள் பெரிய இமைகளைக் கொண்டிருப்பின்...

கண் இமைகளை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷேடோக்களை இடவும்.

பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள்.

கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.

சிறிய கண்களைக் கொண்டவர்கள்..

நன்கு அழுத்தமான வர்ண ஐ ஷேடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள்.

இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள்.

சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன்றும்.

உள்நோக்கி இருக்கும் கண்களுக்கு...

கண்கள் மீது ஐ ஷேடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு, இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும்.

இது உங்கள் கண்களை அழகாக்கும்.



வேலைக்கு செல்லும் பெண்கள் பார்லர் போக நேரம் இல்லை என்றால் தேனின் உதவியுடன் எப்படி பேசியல் பண்ணி கொள்ளுவது என்று கீழே பாருங்கள் .

டோநர் (Toner )

வெள்ளரிக்காய் ஜூஸ் 2 டீஸ்பூன் + தேன் 1 டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் போர்ஸ் (pores ) எல்லாம் போய் முகம் நல்ல மெதுவாக (soft) இருக்கும் .

ஸ்கரப் (scrub)

ஒட்ஸ்( oats) 2 டீஸ்பூன் + தேன் 2 டீஸ்பூன் + பாதாம் பவுடர் 1 டிஸ்பூன் + தயிர் 2 டிஸ்பூன் நான்கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 10 நிமடத்திற்கு சர்குலர் மோஷனில் தேய்க்கவும் .பிறகு 10 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத டெட் ஸ்கின் (deadskins) எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும் .

ப்ளீச் (Bleach)

தேன் 2டீஸ்பூன் + லேமன் ஜூஸ் 2டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத தழும்புகள் எல்லாம் போய் முகம் சிவந்து தெரியும் .

க்லன்சர் (cleanser)

1/4 cup தேன் + சோப் (liquid soap) 1 டீஸ்பூன் + கிளசரீன் (glycerin) 1 டீஸ்பூன் மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத கரும் புள்ளிகள், முகப்பறு எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும் .


தினமும் அழகாக இருக்க

·மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் மூக்கின் நுனியில் கொஞ்சம் அதிகமாக மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டும். அப்படி போட்டுக் கொண்டால் அவர்கள் மூக்கு பார்ப்பதற்குச் சின்னதாகத் தெரியும்.·மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டி ருக்கும் பெண்களுக்குக் கண்களின் அழகு கொஞ்சம் குறையும் மூக்குக் கண்ணாடி அணியும் அந்தப் பெண்கள் கொஞ்சம் பட்டையாகவே தங்கள் கண் இமைகளுக்கு மை தீட்டிக் கொள்ள வேண்டும்.

·வயதான பெண்கள் அவசியம் தங்கள் கண்களுக்கு மை தீட்டிக் கொள்வதால் கண்களில் உள்ள வயதான தோற்றம் போகும். இளமையான தோற்றம் வரும். ·நாற்பது வயதாகிவிட்ட பெண்களும்கூட இளமையுடன் இருக்கலாம். அழகுடன் இருக்கலாம். தினமும் ஒரு தம்ளர் ஒரேஞ்சுப் பழ ஜுஸ் குடிக்க வேண்டும். வயிறு நிறையச் சாப்பிடக்கூடாது. இனிப்பு வகைகள், தயிர், பால், முட்டை, நெய், வெண்ணெய், மாமிசம், தேங்காய், கிழங்கு வகைகள் சாப்பிடக்கூடாது. அடிக்கடி வெயிலில் சுற்றக் கூடாது. தினமும் காலையிலும் மாலையிலும் சிறிது தூரம் நடக்க வேண்டும்.

·பெண்கள் சூடான தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து அதிலிருந்து வரும் ஆவியைத் தங்கள் முகத்தில் படும்படி செய்ய வேண்டும். இப்படிச் செய்துவிட்டு முகத்தைச் சோப்புப் போட்டுக் கழுவிவிட வேண்டும். முகம் சுத்தமாகும்.மிருதுவாகும். பொலிவு பெறும்.

·காலையில் எழுந்ததும் எலுமிச்சம்பழச் சாற்றைத் தண்ணீரில் கலந்து சாப்பிடுவது நல்லது. இது இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருள்களை வெளிப்படுத்துகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. இரத்தம் சுத்தமாகிவிட்டால் உடம்பு பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

·பெண்கள் வெயிலில் வெளியில் போகும்போது இருபது நிமிஷங்களுக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருக்கக் கூடாது. கால்மணி நேரத்துக்கு ஒரு தடவை எங்கேயாவது நிழலில் கொஞ்ச நேரம் நின்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து வெயிலில் நின்றால் பெண்களின் அழகு கெட்டுப் போகும். முகம் சுருங்கும். உடம்பின் பளபளப்பும் போய்விடும்.

·அடிக்கடி குளிர்ந்த பானங்களைக் குடிப் பவர்களும் ஐஸ்கிரீம் சாப்பி டுகிறவர்களும் சொக்லேட் உண்பவர்களும் கோப்பி குடிப் பவர்களும் பருமனாகி விடுகி றார்கள். உடம்பு இளைக்க வேண் டும்; பெருக்க கூடாது என்று நினைக்கி றவர்கள் இவற்றையெல்லாம் தொடக் கூடாது. தள்ளிவைக்க வேண்டும். ·தினமும் காலையில் வெந்நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து அதில் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து பருக வேண்டும். இப்படிச் செய்து வந்தால் அவர்கள் ஒல்லியாக இருப்பார்கள். அவர்கள் குரல் இனிமையாக இருக்கும்


முகத்தில் கரும்புள்ளிகளா கவலை வேண்டாம்

துடைத்து வைத்த குத்துவிளக்கு போன்ற அழகு என்பார்களே... முகத்தில் மாசு, மறு, கரும்புள்ளி என்று எதுவும் இல்லாமல் இருந் தாலே முகம் பளபளக்கும். ஒரு வேளை முகப்பருவோ, கரு வளையமோ வந்து விட்டால் அவற்றை எப்படிச் சரி செய்வது? அல்லது தற்காலிகமாக மேக்கப் மூலம் எப்படி மறைப்பது என்று பார்ப்போமா... முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால்...

உங்களுடைய சருமம் ரொம்பவே எண்ணெய்த்தன்மையாக இருந்தால், இந்தக் கரும்புள்ளிகள் அழைக்காமலேயே உங்கள் முகத்தில் வந்து விடும். எப்படிச் சரி செய்வது? ஐஸ் கட்டியை சுத்தமான கைக்குட்டையில் சுற்றி, அதைக் கொண்டு முகத்தை ஒற்றி யெடுங்கள். இப்படிச் செய்தால் முகத்தில் வழி யும் எண்ணெய், கட்டுப்பாட்டில் வரும். சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தேனுடன் பிசைந்து கரும்புள்ளிகள் மீது தடவி வரவும். லேவண்டர் ஒயிலை தொடர்ந்து அப்ளை செய்து வந்தாலும் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

எப்படி மறைப்பது?

கன்சீலரை சற்று அதிகமாக எடுத்து பிரஷ் ஷின் மூலமாக முகத்தில் தடவி அதன் மீது ட்ரான்ஸுலின்ட் பவுடரை அப்ளை செய்தால், முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பதே தெரி யாது.

முகத்தில் முகப்பரு மற்றும்

தழும்பு இருந்தால்...

முகப்பருவே ஒரு தொல்லை என்றால், அதைவிட பெருந்தொல்லை அதைக் கிள்ளி விட்டால் வரும் தழும்பு. எப்படிச் சரி செய்வது?

உங்களுடையது எண் ணெய்ப் பசை சருமம் என் றால் தக்காளி ஜூஸ், வெள் ளரி ஜூஸ், தர்பூசணி ஜூஸ் மூன்றிலும் தலா ஒரு டீஸ் பூன் எடுத்துக் கலந்து அதை முகத்தில் தடவி வந்தால், முகப்பருவும் சரியாகிவிடும். அதைக் கிள்ளினால் வரும் தழும்பும் சரியாகிவிடும். உங்களுடையது நோர்மல் சருமம் என்றால் ஒரு டீஸ் பூன் தர்பூசணி ஜூஸ், 4 டீஸ் பூன் ஓட்ஸ் பவுடர், ஒரு டீஸ் பூன் லெமன் ஜூஸ், ஒரு டீஸ்பூன் ஓரேஞ் ஜூஸ் நான் கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி வாருங்கள் போதும். எப்படி மறைப்பது?

இதற்கும் கன்சீலரை கொஞ்சம் அதிகமாக அப்ளை செய்து, அதன் மீது பிரஷ்ஷால் லேசாக டிரான் ஸுலின்ட் பவுடரை டச் செய்யுங்கள். தழும்பு சற்று ஆழமாக இருந்தால் தொடர்ந்து பேஷியல், ஸ்கிரப்பிங் என்று சரியான இடைவெளியில் செய்து வாருங்கள். முகத்தில் லேசான தீக்காயம் இருந்தால்...

முகத்தில் லேசான தீக்காயம் ஏற்பட்டால், அதற்கு உங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே பெஸ்ட் தீர்வு இருக்கிறது. எப்படிச் சரி செய்வது?

சோற்றுக் கற்றாளையைக் கீறி, அந்த ஜெல்லை அப்படியே தீக்காயத்தின் மீது தடவி வாருங்கள். லேவண்டர் ஒயிலைத் தொடர்ந்து தடவி வந்தால் தீக்காயம் எங்கே என்று தேடி னாலும் கிடைக்காது. தீக்காயத்தினால் ஏற்பட்ட தழும்பு மறைய வேண்டுமென்றால் விட்டமின் ஈ' ஒயிலை அதன் மீது தொடர்ந்து தடவுங்கள். எப்படி மறைப்பது?

இதற்கும் பிரஷ்ஷினால் கன்சீலரை அப்ளை செய்து, அதன் மீது பவுடரை ஸ்பொன்ஜால் தொட்டுத் தடவுங்கள்! உப்பிய கண்களோ, கருவளையமோ இருந்தால்...

எத்தனை அழகான கண்களும் வீங்கி இருந் தாலோ, அதைச் சுற்றி கருவளையம் இருந் தாலோ எடுபடாமல் போய்விடும். எப்படிச் சரி செய்வது?

நேரத்திற்குத் தூங்கினால் கண்கள் வீங்காது. தவிர உருளைக் கிழங்கு மற்றும் வெள் ளரிக்காயை வட்டமாக சீவி அதை கண்களின் மீது 10 நிமிடம் வைத்தால் வீக்கம் மற்றும் கருவளையம் இரண்டுமே சரியாகிவிடும்.

எப்படி மறைப்பது?

உங்கள் ஒரிஜனல் ஸ்கின் கலரை விட லைட் கலரில் கன்சீலரை கண்களைச் சுற்றியுள்ள கரு வளையத்தின் மீது தடவி அதன் மீது உங்க ளின் ஸ்கின் கலர் பவுடர் பவுன்டேஷனை அப்ளை செய்யுங்கள்.

கண்களைச் சுற்றி சுருக்கம் விழுந்தால்...

சட்டென்று வயதைக் கூட்டிக் காட்டிவிடும். இந்தப் பிரச்சினைக்கு என்ன செய்யலாம்?

எப்படிச் சரி செய்வது?

சுருக்கம் உள்ள பகுதிகளில் விட்டமின் ஈ' ஒயிலையோ அல்லது பாதாம் ஒயிலையோ தடவி மென்மையாக மசாஜ் செய்துவிட்டு, பிறகு குளிர்ந்த நீரை கண்கள் மீது மெதுவாக வாரி அடியுங்கள்.

எப்படி மறைப்பது?

மை வைக்கும் இடத்தில் தரமான ஐ ஜெல்' லைத் தடவி பத்து நிமிடம் கழித்து பவுன் டேஷனை அப்ளை செய்யுங்கள். சுருக்கம் தெரியாது.


உதடுகள் அழகாக சிவப்பு நிறமாக வேண்டுமானால், கிளிசரின் மற்றும் எலுமிச்சம் பழச்சாறை சம அளவு சேர்த்து தூங்கப் போகும்போது உதடுகளில் தேயுங்கள். காலையில் எழுந்ததும் கழுவி விடுங்கள்.

- கடுக்காய், செம்பருத்திப்பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

- முகத்தில் ரத்த ஓட்டம் அதிகமாகி பளிச்சென்ற வசீகரம் கிடைக்க வேண்டுமானால், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி துளசிச்சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள். மூன்று மாதம் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

- பல்லில் இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் கலந்து பற்களை தேயுங்கள்.

-கஸ்தூரி மஞ்சளையும் சந்தனத்தையும் அரைத்து உடலில் பூசுங்கள். அரை மணி நேரம் கழித்து ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரில் குளியுங்கள். இவ்வாறு செய்தால் தோலுக்கு நல்ல நிறமும் தோற்றமும் கிடைக்கும்.

- கற்க்ண்டு, தேன், கரட் சாறு, வெள்ளிக்காய்ச்சாறு ஆகியவைகளை சம அளவு சேர்த்து சாப்பிட்டால் முக அழகு அதிகமாகும்.

- தினமும் தூங்கச் செல்லும் முன்பு ஆமணக்கு எண்ணெயை இமையில் தேய்த்தால் இமை நன்றாக வளரும்.

- முகத்தில் பால் ஆடையை தேய்த்து அது காயும்போது லேசான சுடு நீரில் முகத்தை கழுவினால் முக அழகு பொலிவு பெறும்.

- தினமும் கரட் சாப்பிடவது தோல் அழகுக்கு நல்லது.

தூய்மையான சந்தனம், கடுக்காய் 4, கசகசா 2 டேபிள்ஸ்பூன், பாதாம் பருப்பு இலைகளால் தயாரித்த கலவையினை ஃபேஸ் பேக் ஆக பயன்படுத்தலாம்.

- கடைகளில் ஃபேஸ்- மாஸ்க் பொடி விற்கும். அதை வாங்கி ஒரு ஸ்பூன் மாஸ்க் பொடியில் சிறிது வெள்ளரி, கரட், தயிர் சேர்த்துக் குழைத்து பூசி 20 நிமிடம் ஊறினதும் கழுவிவந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும்.

- வெள்ளரிச்சாறும் புதினாச்சாறும் கலந்து முகம், கைகளில் தேய்த்து வரலாம்.

- குளிர்காலத்தில் படுக்கும் முன், முகத்தில் மொயிஸ்ச்ரைஸர் பூசுவது நல்லது.

- கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.

- முட்டைக்கோஸ், முள்ளங்கிச்சாறுகளும் முகத்தை பளிச்சென்றாக்க உதவும்.

- தலைக்கு முட்டை தேய்த்து குளிப்பது நல்லது.

- கை கால் நகங்களைச் சுத்தமாக வெட்டி, வெதுவெதுப்பான நீரில் சோப் துண்டுகளை போட்டு, கொஞ்ச நேரம் அமிழ்த்தி வைத்து பழைய tooth brush கொண்டு சுத்தம் செய்து, நெயில்பாலிஷ் போட்டு வந்தால் பார்க்க அழகாக இருக்கும்.

பெண்கள் பச்சைத் தக்காளிப் பழங்களைத் தினமும் சாப்பிட்டு வரவேண்டும். சாப்பிட்டு வந்தால், தோல் கொஞ்சம் சிவப்பாக மாறும். தோல் சுருக்கம் மாறும். நிறமும் மாறி, சுருக்கமும் மறைந்தால் பார்க்க அழகாக இருக்கும்.

கோழி முட்டையை உடைத்து வெள்ளைப் பாகத்தை மட்டும் ஒரு கோப்பையில் ஊற்ற வேண்டும். இதில் கொஞ்சம் எலுமிச்சம்பழச் சாறைக் கலக்க வேண்டும். கொஞ்சம் பாதாம் பருப்பை அரைத்து இதில் சேர்க்க வேண்டும். சேர்த்து, மூன்றையும் கலக்கி, பெண்கள் தங்கள் முகததில் தடவிக் கொள்ள வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து சோப்புப் போட்டு முகத்தைக் கழுவிவிட வேண்டும். இப்படிச் செய்து வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.


கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது.

பெண்களும் சரி, ஆண்களும் சரி, தங்களுக்கு ஊளைச் சதை விழாமலிக்கப் பழம் சாப்பிட்டு வரவேண்டும். பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் ஊளைச் சதை கரையும். பப்பாளிப்பழம் ஒன்றுக்குத்தான் ஊளைச் சதையைக் குறைக்கும் சக்தி உண்டு.

முகத்தில் பரு இருக்கிறதா? இருந்தால், பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் விகாரமுள்ள, மாறாத வடுக்கள் விழுந்துவிடும். எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.

பனிக்காலத்தில் சிலருக்குத் தோலில் சில இடங்களில் வெடிப்புத் தோன்றும். வெடிப்புத் தோன்றிய இடங்களில் கொஞ்சம் வாஸ்லைனைத் தடவி வரவேண்டும். தடவி வந்தால் வெடிப்பு மறைந்துவிடும்!

தங்கள் கண்களுக்கு மை தீட்டிக் கொள்ளும் பழக்கமுள்ள பெண்கள், படுக்கப் போகும்போது சோப்புப்போட்டு முகத்தைக் கழுவிவிட்டு அதன் பின்னரே படுக்க வேண்டும். கண் மையுடன் தூங்கக் கூடாது. கண் மையுடன் தூங்கினால் கண்கள் சீக்கிரம் கெட்டுப் போகும்.

முகத்தில் தோல் உரிந்தால் அதைப் போக்க சிறிது கிளிசரின், எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவுங்கள். பிறகு சோப்பு போட்டு முகத்தைக் கழுவுங்கள். உரிந்த தோல் வந்துவிடும்.

குளித்தவுடன் உடல் முழுவதும் சிறிது பவுடர் போட்டுக் கொண்டால் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.

தேங்காயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தோல் பளபளப்புக் குறையாமலும், கோளாறு ஏற்படாமலும் தேங்காய் பார்த்துக் கொள்கிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்களும், இருதயநோய் உள்ளவர்களும் தேங்காயைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

முகத்தை, சோப்பு மட்டும் போட்டுக் கழுவிக் கொண்டிருக்கக் கூடாது. பயித்தம் மாவு, சிகைக்ககாய் ஆகியவற்றையும் கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும். இப்படிச் செய்தால்தான் முகத்தில் இருக்கும் பளபளப்பு குறையாமல் இருக்கும்.

முகத்தில் எண்ணெய் வடிகிறதா? இதைப் போக்கத் தினசரி காலையிலும் இவு படுக்கப் போகும் போதும் முகத்தில் எலுமிச்சம்பழத்தை அறுத்துக் தேயுங்கள். எண்ணெய் பசை போய்விடும்.

பெண்கள் தினமும் படுக்கப் போகும்போது புருவங்களிலும் இமைகளிலும் கொஞ்சம் விளக்கெண்ணையைக் தடவிக் கொண்டால், புருவங்களிலும் இமைகளிலும் முடி நன்றாக வளரும். பெரிதாக வளரும். இதனால் அழகு அதிகமாகும

துணிந்து செயல்பட வைக்கும் சூழ்நிலைகள்

புதிய வழி என்கிறபோது, அதுவரையில் அவர் செய்து பழக்கமில்லாத ஒரு வழியாகத்தான் இருக்கும். பழக்கமில்லாத எந்த ஒரு காரியத்தையும் முதல் தடவையாகச் செய்யும்போது, அதற்குத் துணிவு தேவை.

ஏற்கனவே அடைந்துள்ள ஓர் இழப்பை ஈடு செய்வது என்றால், அதற்காகச் செய்யப்படுகிற முயற்சி, ஒரு பெரிய இலாபத்தைத் தரக்கூடியதாக அமைய வேண்டும். சிறிய இலாபத்தைக் தரக்கூடிய சிறு முயற்சிகளால், அவருடைய நெருக்கடி தீரப் போவது இல்லை. எனவே, அவர் இறங்கியே ஆக வேண்டும்!

பெரிய முயற்சிகளின் மூலமாகத்தான் பெரிய இலாபங்களை அடைய முடியும். அப்படி இருந்தும், இதுவரை அவர் ஏன் பெரிய முயற்சிகளில் இறங்காமல் இருந்தார்?

காரணம், பெரிய முயற்சிகளின் மூலமாகப் பெரிய இலாபங்களை அடைவதற்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ, அவ்வளவு வாய்ப்பு பெரிய நஷ்டங்களை அடைவதற்கும் அதிலே இருக்கிறது! பெரிய இலாபங்கள் வருமானால் அது மகிழ்ச்சிக்கு உரியதே; ஆனால் பெரிய நஷ்டங்கள் வந்தால் என்ன செய்வது? இந்த பயத்தில்தான் அவர் இதுவரை எந்த ஒரு செயல் முயற்சியிலும் இறங்காமல், சாதாரண முறையிலேயே தன்னுடைய தொழிலை நடத்திக் கொண்டு வந்தார். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

எதாவது ஓர் ஆபத்தான முயற்சியை மேற்கொள்வதன் மூலமாகத்தான், அவர் தன்னுடைய நெருக்கடிகளை இப்போது சமாளிக்க முடியும். இதுபோன்ற கட்டாயத்துக்கு ஆளான பிறகு, அவர் இனியும் தயங்கிக் கொண்டிருக்க முடியாது. தன்னுடைய பொருளாதார அழிவைத் தவிர்ப்பதற்காக, அவர் துணிந்து செயல்பட்டுத்தான் ஆகவேண்டும், வேறு வழி இல்லை.

துணிவினால் தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுவதற்கு, இப்போது அவருக்கு நேரம் கிடையாது. புலியால் துரத்தப்படுகிறவன் தண்ணீரில் மூழ்கிவிடுவோமோ என்று அஞ்சிக்கொண்டிருக்க முடியுமா? அதேபோல் அவரும் தன்னுடைய புதிய முயற்சியால் தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்க முடியாது.

புதிய முயற்சி ஒன்றைச் செய்யாமல் இருந்தால்தான் வீழ்ச்சயடைவது உறுதி என்று அவர் உணர்கிறார். புதிய முயற்சியைச் செய்வதால் ஒருவேளை அந்த வீழ்ச்சிக்கு ஆளாகாமல் தப்பிவிடலாம் அல்லவா? அந்த ஒரு நம்பிக்கையால் அவர் துணிவுடன் அந்தப் புதிய முயற்சியில் இறங்கித்தான் ஆகவேண்டும்.

நம்முள் உறங்கிக் கிடக்கும் சக்திகள் எப்போது எழுச்சி பெறுகின்றன?

புலியினால் கொல்லப்படுவதற்குப் பதிலாக ஒருவன் வெள்ளத்தினால் கொல்லப்படுவானானால் அவனை அந்த வெள்ளத்திலே குதிக்கவைத்த துணிவினால் அவன் உண்மையிலேயே ஒரு பயனையும் அடைந்தவனாய் ஆகமாட்டானே? என்று கேட்கப்படலாம்.

சாதாரண மனநிலையில் இருக்கும்போது அந்த வெள்ளத்திலே குதித்து இருப்பானானால் அந்த வெள்ளத்தைச் சமாளிப்பதற்குத் தேவையான ஆற்றல்கள் அவனுடைய உடம்பிலோ உள்ளத்திலோ இருந்திருக்கமாட்டா. ஆனால், அவன் இப்போது புலிக்குப் பயந்து அல்லவா வெள்ளத்தில் குதித்து இருக்கிறான்? அந்தப் புலியைக் கண்டவுடன் அவன் உடம்பிலும் உள்ளத்திலும் எத்தனையோ விதமான சக்திகள் எழுச்சி பெறுகின்றன.

பலவிதமான சக்திகள் எழுச்சி பெற்ற நிலையில் உள்ள மனிதனுக்கும், சாதாரண நிலையிலுள்ள அதே மனிதனுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. சாதாரண நிலையில் உள்ளபோது குதித்திருந்தால் அவன் வெள்ளத்தால் விழுங்கப்படுவான். தன்னுடைய சக்திகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து எழுந்து செயல்படுகிற நிலையில் குதித்தவன் அந்த வெள்ளத்தை வென்று கரையேறி விடுவான். இங்கு அவனுக்குத் துணிவே துணையாக நிற்கிறது. துணிவே துணை!

வாழ்வின் வெற்றி - தன்னம்பிக்கை முனை

ஒருவரது வாழ்வின் வெற்றி என்பது அவரது வாழ்க்கைப் படிநிலை தொடர்ந்து ஏற்றப்பாதையில் செல்கிறதா என்பதைப் பொறுத்தது.

ஏற்ற இறக்கமான வாழ்க்கை என்பது சராசரி வாழ்க்கை.

தொடர்ந்து இறக்க நிலையில் இருக்கும் ஒரு வாழ்க்கை என்பது தோல்வியின் அடையாளம்.

தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி என்பது தோல்வியுற்றவர்களுக்கான உற்சாக வார்த்தை. ஆனால் என்றும் முதல் படியிலேயே நின்று கொண்டிருப் பவர்களை என்ன சொல்வது? இரண்டாவது படிக்கு செல்வதற்கான முயற்சி என்பது மிகவும் அவசியம். ஒரு சின்ன வெற்றி. அது போதும்.

எடுத்த எடுப்பிலேயே மாபெரும் வெற்றி என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான். ஆனால் அதைத் தொடர்ந்து வருவது ஒரு சின்னத் தோல்வியாக இருந்தால் கூட சில நேரங்களில் அதைத் தாங்க முடியாது போகலாம். முதல் படியில் இருந்து விழும்போது பெரிதாக அடிபடாது. ஆனால் உச்சிப் படியில் இருந்து விழும்போது அந்த வீழ்ச்சி மிகப் பெரியதாக இருக்கும்.

ஒவ்வொரு படியிலும் பிடிமானம் மிக முக்கியம். ஒவ்வொரு படியாக மேலேறிச் செல்பவருக்கு அந்தப் பிடிமானம் வலுவாக இருக்கும். ஒரேயடியாக மேல்படிக்கு தாவிச் செல்பவருக்கு பிடிமானமே இருக்காது.

கிடைக்கும் வெற்றி தனக்குத் தகுதியானது தானா என்ற கேள்வி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்க வேண்டும். தகுதியான வெற்றி ஒரு போதும் தன்னைவிட்டு நீங்காது. தகுதியற்ற வெற்றியோ நிலையற்றது.

பரீட்சையில் காப்பியடித்து வெற்றி பெறுபவன் தற்காலிகமாக வெற்றி பெறலாம். அவன் அதையே தொடர்ந்து தேர்வில் வெற்றி பெற உபயோகித்தால் ஒருநாள் கண்காணிப்பாளரால் பிடிக்கப் படுவான். அன்றோடு அவன் வாழ்க்கை முடிந்தது.

போலியான சான்றிதழ்களைக் கொடுத்து பலர் வேலை வாய்ப்புகளைப் பெற்றனர். ஒருநாள் அவர்களின் சான்றிதழ்கள் பொய்யானவை என்று கண்டறியப் பட்டது. அதுவரை அவர்கள் செய்து வந்த பணி அவர்களிடமிருந்து உடனடியாக பறிக்கப் பட்டது. அந்த வேலையை நம்பி அவர்கள் வாழ்க்கையில் கட்டியிருந்த கனவுக் கோட்டைகள் அனைத்தும் ஒரே நாளில் சரிந்து விட்டன. அவர்களை நம்பியிருந்த அவர்களின் குடும்பத்தினர் ஏமாற்றமும் அவமானமும் அடைந்தனர். நேர்மையற்ற வெற்றிகள் ஒருபோதும் நிலைக்க மாட்டாது.

நேர்மைக்கு அடுத்தபடியாக நேரந்தவறாமை மிக முக்கியம். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மிக முக்கியம். அதை கொடுத்த காலக்கெடுவுக்குள் முடிப்பதும் அவசியம். அடுத்தவர் நமக்கு கெடு விதிக்குமுன்பே நமக்கு நாமே கெடு விதித்துக் கொள்ள வேண்டும். அந்தக் கெடுவிற்குள் குறித்த செயலை முடிப்பேன் என்று உறுதி கொள்ள வேண்டும். உண்மையில் அடுத்தவர் 10 நாட்களில் ஒரு செயலை முடிக்க கெடு வைத்தால் நமக்கு நாமே வைக்கும் கெடு 7 அல்லது 8 நாட்களாக இருக்கலாம். அப்படி நமது கெடுவிற்குள் காரியத்தை முடித்து விட்டால் மிச்சப்படும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நமக்கு நிம்மதியாக இருக்கும். அல்லது முன்கூட்டியே முடித்ததற்கான பாராட்டு கிடைக்கும். இதற்கு மாறாக பத்து நாளில் முடிக்க வேண்டிய வேலையை 12 நாட்களோ 15 நாட்களோ நீட்டினால் மேலதிகாரி, அல்லது வாடிக்கையாளரிடமிருந்து வரும் மோசமான விமர்சனங்களை தாங்கிக் கொள்ள வேண்டும். அது மேலும் மனதை தளர்ச்சியுறச் செய்யும். அதுவரை உழைத்த உழைப்பும் அதில் கிடைத்த வெற்றியும் தாமதம் என்ற ஒரே காரணத்தினால் அங்கீகரிக்கப் படாமல் போகலாம்.

பள்ளியில் தாமதமாக வரும் மாணவனோ, மாணவியோ பாடங்களை ஒழுங்காக படிக்க முடியாது. பல பாடங்கள் அவர்களின் நோட்டுப் புத்தகங்களில் வெற்றிடமாக இருக்கும். கடைசியில் தேர்வுத் தாளிலும் பல கேள்விகள் விடையற்றதாக இருக்கும்.

பணிக்குத் தாமதமாக வரும் பணியாளரின் பணிக்குறிப்பேட்டில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கும். அவரது பதவி உயர்வுகள் பல ஆண்டுகள் தாமதமாகலாம். அவருக்குக் கீழேயுள்ள பலர் அவரைக் கடந்து மேலே செல்லலாம்.

அடுத்தது வாக்குத் தவறாமை. அடுத்தவருக்கு ஒரு வாக்குறுதி கொடுக்குமுன் நன்றாக யோசித்துத் தான் கொடுக்க வேண்டும். அரசியல் வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் இந்த வகையில் சேராது. அவர்கள் மக்களின் மறதியை நம்பி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கு கின்றனர். மக்களும் அதை நம்பி ஓட்டுப் போட்டு விடுகின்றனர். வாக்குறுதி கொடுத்த அரசியல்வாதியோ அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பதவி சுகத்தை அனுபவித்து விட்டு அடுத்த தேர்தலின் போது மட்டுமே மீண்டும் தலைகாட்டுகிறார். மீண்டும் அதே பழைய வாக்குறுதியை புதிய வாக்குறுதியாக மீண்டும் அளிக்கிறார். இவர்களும் மறுபடி வாக்குகளை வழங்குகின்றனர். இந்த வாக்குறுதிகளில் எந்த உண்மையும் இல்லை.

ஆனால் தனிநபர்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளில் கவனம் தேவை. உதாரணமாக ஒருவர் கடன் கேட்கிறார். இப்போது என்னிடம் இல்லை. நாளை வா தருகிறேன். என்கிறோம். மறுநாள் அவர் அதை நம்பி வந்து நிற்பார். முந்தின நாள் சொன்னது மறந்திருக்கலாம். அல்லது முந்தினநாள் சும்மா தப்பிப்பதற்காக அப்படிச் சொல்லியிருக்கலாம். என்றாலும் இப்போது மீண்டும் ஒருமுறை முந்திய வாக்குறுதிக்காக சமாளிக்க வேண்டியிருக்கிறது. அந்த வாக்குறுதியை ரத்து செய்யும் விதமாக என்னிம் பணமே இல்லை. இதற்காக நீங்கள் மறுபடி என்னிடம் வர வேண்டாம். என்று உறுதியாக சொல்லி விடலாம். அப்போது அவர் நம்மை நம்பியிராமல் வேறொருவரை நாடிச் செல்வார். அதற்குப் பதிலாக தொடர்ந்து நாளைவா, மறுநாள் வா என்று அலைக்கழிப்பது அவரை உங்கள் வாக்குறுதியை நம்பி ஏமாறச் செய்யும்.

ஒருவர் தன்மகளின் திருமணச் செலவுக்கு வைத்திருந்த பணத்தை நண்பரின் மனைவி நோய்வாய்ப்பட்டிருந்த போது அவசர மருத்துவச் செலவுக்காக தந்தார். நண்பரும் அலுவலக பிஎப் சேமிப்பிலிருந்து கடன் பெற்று திருப்பித் தருவதாக வாக்களித்தார். இவருக்கு மகளின் திருமணத் தேதி நெருங்க ஆரம்பித்தது. நண்பரிடம் கேட்டபோது பிஎப் கடனுக்கு விண்ணப்பித்திருக்கிறேன். வந்தவுடன் தந்து விடுவேன் என்றார். ஆனால் நண்பரோ அந்தப் பணம் வந்தவுடன் இவருக்குத் தராமல் வேறு காரியத்துக்கு பயன்படுத்திக் கொண்டார். இதனால் இவருடைய மகளின் திருமணமே நின்று போனது. நண்பரின் வாக்குறுதியை நம்பி அவரது அவசரத்துக்கு உதவியதால் இவர் அவமானப் பட வேண்டியதாயிற்று.

ஒரு கட்டுமான நிறுவனத்தின் பொறியாளர் வீட்டு உரிமையாளரிடம் இன்னும் இருபது நாட்களுக்குள் வீட்டை முடித்து கையில் தருகிறோம். என்று சொல்கிறார் வீட்டு உரிமையாளரும் அதை நம்பி கிரகப் பிரவேசத்துக்கு நாள் குறிக்கிறார். நண்பர்கள் உறவினரையும் அழைக்கிறார். ஆனால் கட்டிட பொறியாளர் குறிப்பிட்ட நாளில் வேலையை முடிக்க வில்லை. அதனால் கிரகப் பிரவேசத்தை மாற்ற வேண்டியதாயிற்று. காரணம் கேட்ட உறவினர்கள், நண்பர்களிடம் எல்லாம் பொறியாளர் வாக்குறுதியை நிறைவேற்றாததை வீட்டு உரிமையாளர் சொல்கிறார். இதனால் அந்த பொறியாளருக்கு தங்கள் வீட்டின் கட்டுமானப் பணிகளை தர எண்ணியிருந்த பலர் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்கின்றனர். எனவே நிறைவேற்ற இயலாத வாக்குறுதி ஒன்றினால் அந்தப் பொறியாளர் பல வாடிக்கையாளர்களை இழக்கிறார்.

இந்த நிலைகளை ஒருவர் கடந்து விட்டாலே மேல் நோக்கிய வாழ்க்கைப் படிகளில் ஏறத் தொடங்கி விட்டார் என்று பொருள்.

வெற்றியும் தோல்வியும் எப்படி வருகின்றன?

அந்தப் புதிய முயற்சியிலே, அவர் வெற்றி அடைவாரா அல்லது தோல்வி அடைவாரா என்பதை எப்படித் தீர்மானிப்பது?

‘நாம் வெற்றியே அடைவோம்’ என்ற நம்பிக்கை அவர் உள்ளத்தில் வலுவாக இருக்க வேண்டும். இருந்தால் அவர் முழு வெற்றியை அடைவார், உறுதி.

நாம் வெற்றி அடைவோமோ, மாட்டோமோ என்ற அரைகுறையான நம்பிக்கையாக அது இருந்தால் அடையக் கூடிய வெற்றியும் அரைகுறையான வெற்றியாகத்தான் இருக்கும்.

முயற்சியில் குதித்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும்போதே, தோல்வி அடைந்துவிட்டால் என்ன செய்வது? தோல்வி அடைந்துவிட்டால் நிலைமை இப்போது இருப்பதைக் காட்டிலும் படுமோசமாகப் போய்விடுமே என்று சந்தேகப்பட்டால் - என்று பயந்தால் தோல்விதான். வெற்றி கிடைக்கவே கிடைக்காது.

சுருக்கமாகச் சொன்னால்…

ஒரு மனிதன் தனக்கு என்ன நடக்கும் - எது கிடைக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறானோ அதுவே அவனுக்கு நடக்கும். அதுவே அவனுக்குக் கிடைக்கும்.

நன்மைகளை நாம் அடைந்தே தீருவோம். வெற்றிகளை நாம் குவித்தே தீருவோம் என்ற நம்பிக்கை நம் உள்ளத்தில் உறுதியாக இருக்க வேண்டும். வேரூன்றி விளங்க வேண்டும்.

‘நமக்கு எங்கே நன்மைகள் வரப்போகின்றன. நமக்கு மேலும் மேலும் சிரமங்கள்தாம் வந்து கொண்டிருக்கும்,’ என்று மனத் தளர்ச்சியோடு நாம் நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தால் நாம் எதிர்பார்க்கிற துன்பங்களும், துயரங்களுமே நம்மைச் சூழும்; மேலும் மேலும் சூழும், சூழ்ந்து சூழ்ந்து நம்மைத் தொல்லைப்படுத்திக் கொண்டே இருக்கும்.

நம்மிடத்திலே நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் நம் வாழ்க்கையில் நாம் நன்மைகளையோ உயர்வுகளையோ ஒருநாளும் பெறமுடியாது.

இதே கருத்தைத்தான், மனம்போல வாழ்வு என்ற பழமொழி பேசுகிறது.

தீயசக்திகள் படுவீழ்ச்சி அடைந்துவிடும். இது உறுதி. தீயசக்தியின் அந்த வீழ்ச்சி நாளை எதிர் நோக்கி அமைதியாகக் காத்திருந்தால் நம்முடைய தன்னம்பிக்கை நம்மைவிட்டுப் போகாது!

வாழ்க்கையில் தன்னம்பிக்கையை இழந்தவர்களின் மனம் தூய வழிகளில் செல்லாது. தீய வழிகளில்தான் அவர்களுடைய புத்தி போய்க் கொண்டிருக்கும். அவர்கள் தீய செயல்களிலேயே ஈடுபடத் தொடங்குவார்கள். தீய செயல்கள் மனிதனை மேலும் மேலும் கோழையாக்கி, அவனை உருத்தெரியாமல் அழித்துவிடுகின்றன.

தன்னம்பிக்கை நன்னம்பிக்கையோடு தெய்வ நம்பிக்கையும் வேண்டும்

தன்னம்பிக்கையையும் நன்னம்பிக்கையையும் இழந்தவர்கள் தங்களையும் அறியாமலேயே தெய்வ நம்பிக்கையையும் இழந்துவிடுகிறார்கள். தெய்வ நம்பிக்கையை இழந்த ஒருவன் எல்லாவற்றையும் இழந்தவனாக ஆகிவிடுகிறான்.

தெய்வம் என்பது என்ன?

முஸ்லீம்கள் வழிபடுகின்ற அல்லாவையோ, இந்துக்கள் வழிபடுகிற பரமசிவன், பார்வதி, முருகன், கணபதி, அனுமார் போன்ற தெய்வங்களையோ, கிறிஸ்துவர்கள் வழிபடுகிற இயேசுநாதர், கன்னிமேரி போன்ற தெய்வங்களையோ, மற்ற மதத்தினர்கள் வழிபடுகின்ற எண்ணற்ற தெய்வங்களையோ சொல்லவில்லை.

பெயர்களையும் வடிவங்களையும் உடைய இந்தத் தெய்ங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையில், எந்த ஒரு பெயரும் வடிவமும் அற்றதாய், எங்கும் நிறைந்ததாய், தோற்றம் - இறுதி இல்லாததாய், அனைத்து உலகங்களுக்கும் ஆதாரமாய், அனைத்து ஆற்றல்களையும் பெற்றுள்ளதாய் உயிர்க்குலங்கள் அனைத்திற்குள்ளேயும உயிருக்கு உயிராய் ஒளிர்வதாய் அன்பும் அறிவும் ஆனந்தமுமே தன் வடிவமாகக் கொண்டதாய் விங்குகின்ற பரம்பொருள் எதுவோ, அதையே தெய்வம் என்று நான் சொல்லுகிறேன்.

நான் சொல்லுகிற இந்தத் தெய்வத்தை எவரும் தங்கள் கண்ணால் கண்டதில்லை.காணவும் முடியாது. ஆனால், பல கோடி மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டே இந்த உலகத்திற்கு ஒளியையும் சக்தியையும் இடைவிடாமல் வழங்கிக் கொண்டிருக்கின்ற கதிரவனைப் போல, நான் குறிப்பிடுகிற இந்த இறைவனும் நம்முடைய மனம், வாக்கு, காயம் ஆகிய எல்லாவற்றிற்கும் அப்பால் இருந்து கொண்டு, தன்னுடைய கருணை நோக்கினால் நம்மை இடைவிடாமல் கண்காணித்தும் காப்பாற்றியும் வருகிறார் என்ற உணர்வு இருக்கிறதே, அந்த உணர்வே உண்மையான தெய்வம். அந்த உண்மைத் தெய்வத்தின் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும்.

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...