November 7, 2019

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!




நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.
 
ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே  நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.
 
சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி  உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும். இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து  வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.
 
இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு  வந்தால் எலும்புகள் வலுவடையும்.
 
மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம் என்பதை நாம் பல இதழ்களில் அறிந்துள்ளோம். மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
 
பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண  சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.
 
ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்துதான்.  சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.

தினமும் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிங்க..

மோர் என்பது பாலில் இருந்து பெறப்படும் நீர்மப் பொருட்களில் ஒன்று.இது கோடைக் காலத்திற்கு ஏற்ற, எந்தப் பக்க விளைவுகளும் தராத, அதிக நன்மைகள் உடலிற்கு வழங்குகின்றது
மோரில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்கள் வளமாக இருப்பதோடு, பொட்டாசியம், புரோட்டீன் போன்றவைகளும் உள்ளது.அந்தவகையில் தினமும் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

  • அளவுக்கு அதிகமாக உணவை உட்கொண்டிருந்தால், காலையில் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள். இதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் வெளியேற்றப்படும். மேலும் மோர் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் புளிப்பான ஏப்பத்தைத் தடுக்கும்
  • ஒருவர் மோரை தினமும் குறைந்தது ஒரு முறை குடிப்பதால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும் மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.
  • மோரில் ஆன்டி-வைரல், ஆன்டி-கேன்சர் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது. ஆகவே மோரை தினமும் குடித்தால், இரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்
  • மோரில் உணவை ஆற்றலாக மாற்றும், செரிமானம் மற்றும் ஹார்மோன் உற்பத்திக்கு முக்கியமான ரிபோஃப்ளேவின் மற்றும் பி வைட்டமின்களும் அதிகம் உள்ளது.
  • மோரில் அத்தியாவசிய இதர பொருட்கள் மற்றும் இஞ்சி உள்ளது. இது அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சல் உணர்வைத் தடுக்கும். மேலும், மோர் அதிகப்படியான அமில சுரப்பால் வயிற்றில் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
  • ஒரு டம்ளர் மோரில் சிறிது இஞ்சி சேர்த்து குடித்தால், அஜீரண பிரச்னை நீங்கிவிடும். அதுவும் ஒருவர் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் நிச்சயம் நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
  • உடல் வறட்சியை சரிசெய்ய சிறந்த வழி என்றால், அது மோர் குடிப்பது தான். மோரை ஒருவர் தினமும் குடித்தால், உடல் வறட்சி நீங்குவதோடு, உடலில் ஆற்றலும் அதிகரிக்கும்.
  • வயிற்றுப் போக்கால் கஷ்டப்படுபவர்கள், மோரில் இஞ்சி பொடி அல்லது நற்பதமான இஞ்சியை தட்டிப் போட்டு குடித்தால் குணமாகும். அதுவும் விரைவில் குணமாவதற்கு, ஒரு நாளைக்கு 3 முறை மோரைக் குடிக்க வேண்டும். இதனால் இரண்டே நாட்களில் வயிற்றுப்போக்கு பிரச்னை குணமாகிவிடும்.

November 6, 2019

பெண்கள் சீக்கிரம் கர்ப்பம் தரிக்க நினைத்தால்


கருப்பை என்பது பெண்ணின் உடலில் உள்ள ஒரு முக்கிய உறுப்பாகும்.
சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.ஏனெனில் நிலம் வளமாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். நம் வீட்டில் இருக்கும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும் சீக்கிரம் நீங்கள் தாய்மை அடையலாம்.

சீக்கிரம் கருவுற நினைப்பவர்கள் இந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, அவர்களது கருப்பை நன்றாக பலப்படும். இதனால் கரு தங்குவது எளிதாகிறது 
  1. நாளொன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.
  2. பெண்கள் ஆரஞ்சு, காரட் உள்ளிட்டவைகளை அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும் ஏனெனில் இது செக்ஸ் ஹார் மோனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
  3. ஆண்கள் மீன் உணவுகள், வெள்ளைப்பூண்டு ஆகிய வற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். இது விந்து வளர்ச்சிக்கு உதவும். 
  4. பெண்கள் காபி குடிப்ப தை தவிர்ப்பது கர்ப்பம் தரித்தலை 50 சத விகித வாய்ப்பை அதிகரிக்கிறது. 
  5. காய்கறிகளில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே நீங்கள் அதிகமான காய்கறிகளை எடுத்து வந்தால் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை விரட்டி விடலாம்.
  6. பச்சையிலை காய்கறிகளில் நிறைய போலிக் அமிலம், இரும்புச் சத்து போன்றவைகள் உள்ளன. அதே மாதிரி கருப்பையின் உள்ளடுக்குகள் நன்றாக வலிமையடையவும் உதவுகிறது. இரும்புச் சத்து கர்ப்ப பையின் ஷைச்கோட் இணைப்பிற்கு உதவுகிறது.
  7. பூசணிக்காய் விதைகளில் உள்ள அதிகளவு இரும்புச் சத்து சீக்கிரம் கர்ப்பமடைய உதவி புரிகிறது.
  8. பழங்களில் வைட்டமின் சி, பயோப்ளேவோனாய்டு போன்றவைகள் உள்ளன. இவைகளும் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை தடுக்கிறது. னவே பசிக்கும் போது பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
  9. பால் பொருட்களான யோகார்ட், சீஸ், பால் மற்றும் வெண்ணெய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் கருப்பையை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
  10. பெண்கள் 8 வாரங்கள் தொடர்ந்து க்ரீன் டீ குடித்து வந்தால் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை குறைத்து விடலாம்.
  11. கானாங்கெளுத்தி மற்றும் சால்மன் போன்ற குளிர்ந்த நீரில் வாழும் மீன்களில் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை பெண் உடம்பில் உள்ள புரோஸ்டாக்லாண்டின் உற்பத்தியை குறைக்க உதவுகிறது
  12. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து குடியுங்கள். தினமும் காலையில் குடித்து வாருங்கள். இது உங்கள் கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
  13. ஒரு நாளைக்கு 2-4 கப் கீரை டீ குடித்து வாருங்கள். அதே மாதிரி பச்சை காய்கறிகளையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உங்கள் கருப்பையின் ஆரோக்கியத்திற்கு தேவையான போலிக் அமிலம் போன்றவை உள்ளதால் இவை உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தை வளர உதவி புரிகிறது.
  14. பாதாம் பருப்பு, ஆளி விதைகள் மற்றும் முந்திரி பருப்பு போன்றவற்றை எடுத்து சாப்பிடுங்கள். இதில் அதிகளவு ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது. இந்த ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  15. விளக்கெண்ணெய் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மற்றும் கருப்பை நீர்க் கட்டிகளை போக்க உதவுகிறது. இதிலுள்ள ரிகோனோலிக் அமிலம் உங்கள் நோயெதிப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இது கருப்பை தொற்றுகளை போக்கும்.
  16. கர்ப்பம் தரிக்க உதவுவதில் கொண்டைக்கடலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் கர்ப்ப பை ஊட்டச்சத்திற்கு உதவுகிறது.
  17. தினமு ம் 40 நிமிட உடற்பயிற்சி அவசியம். இது தம்பதியரின் உடலில் உள்ள தேவைய ற்ற கொழுப்பை குறைத்து மன அழுத்த தை நீக்குகிறது. 
  18. மாதுளை கர்ப்ப பைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கருப்பை சுவர்களை வலுப்படுத்துகிறது. மேலும் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. அதே நேரத்தில் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தையும் மேம்படுத்தி எளிதில் கர்ப்பம் தரிக்க உதவுகிறது.
  19. வேக வைத்த உருளைக்கிழங்கை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கில் உள்ள விட்டமின் பி மற்றும் ஈ செல்பிரிதல் மற்றும் ஆரோக்கியமான கர்ப்ப பைக்கு பயன்படுகிறது.
  20. பன்னீரில் உள்ள புரோட்டீன் பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தை வலுப்படுத்துகிறது. 
  21. பிரக்கோலி கர்ப்பம் தரிக்க உதவும் சூப்பர் உணவாகும். இதிலுள்ள போலிக் அமிலம், இரும்புச் சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் போன்றவை பெண்களின் கர்ப்ப பை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதிலுள்ள விட்டமின் சி கருமுட்டை முதிர்ச்சி அடைந்து ஓவுலேசன் செயல் நடக்க பயன்படுகிறது.
  22. நல்ல காரசாரமான உணவுகளும் நீங்கள் தாய்மை அடைய பெரிதும் உதவுகிறது. பச்சை மிளகாய் இரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் அதிகரித்து இனப்பெருக்க மண்டல ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
  23. விட்டமின் பி6 அடங்கிய வாழைப்பழத்தை எடுத்து கொள்ளுங்கள். இது பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சரியாக்குவதோடு தாய்மை அடையவும் உறுதுணை புரிகிறது.
மேற்கண்ட உணவுகள் உங்கள் கருப்பையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எனவே உங்கள் உணவுப் பழக்கத்தில் இது போன்ற உணவுகளை சேர்த்து ஆரோக்கியமாக வாழ முற்படுங்கள்.

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...