புலியினால் கொல்லப்படுவதற்குப் பதிலாக ஒருவன் வெள்ளத்தினால் கொல்லப்படுவானானால் அவனை அந்த வெள்ளத்திலே குதிக்கவைத்த துணிவினால் அவன் உண்மையிலேயே ஒரு பயனையும் அடைந்தவனாய் ஆகமாட்டானே? என்று கேட்கப்படலாம்.
சாதாரண மனநிலையில் இருக்கும்போது அந்த வெள்ளத்திலே குதித்து இருப்பானானால் அந்த வெள்ளத்தைச் சமாளிப்பதற்குத் தேவையான ஆற்றல்கள் அவனுடைய உடம்பிலோ உள்ளத்திலோ இருந்திருக்கமாட்டா. ஆனால், அவன் இப்போது புலிக்குப் பயந்து அல்லவா வெள்ளத்தில் குதித்து இருக்கிறான்? அந்தப் புலியைக் கண்டவுடன் அவன் உடம்பிலும் உள்ளத்திலும் எத்தனையோ விதமான சக்திகள் எழுச்சி பெறுகின்றன.
பலவிதமான சக்திகள் எழுச்சி பெற்ற நிலையில் உள்ள மனிதனுக்கும், சாதாரண நிலையிலுள்ள அதே மனிதனுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. சாதாரண நிலையில் உள்ளபோது குதித்திருந்தால் அவன் வெள்ளத்தால் விழுங்கப்படுவான். தன்னுடைய சக்திகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து எழுந்து செயல்படுகிற நிலையில் குதித்தவன் அந்த வெள்ளத்தை வென்று கரையேறி விடுவான். இங்கு அவனுக்குத் துணிவே துணையாக நிற்கிறது. துணிவே துணை!
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்"
Subscribe to:
Post Comments (Atom)
சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...
-
மெலிந்த உடல் பருமனாக எத்தனையோ மாத்திரைகளையும், பழம், காய்கறிகளையும் சாப்பிடுவோம். ஆனால் உடல் பருமனாக எளிதான வழி ஒன்று உள்ளது. அதுதான் க...
-
பெண்களே உங்கள் கன்னங்கள் ஒட்டியுள்ளதா? இதனால், உங்கள் முகம் வசீகரமாக இல்லை என்ற வருத்தமா? கவலையை விடுங்கள் கன்னம் ஒட்டியிருப்பது, ஒரு பெரி...
-
வாழ்வில் முன்னேற துடிக்கின்ற, வெற்றிபெற, Energy இழந்த என அனைவருக்கும் பயன்படும் என்ற வகையில், இங்கே போதுமான வரை அந்நூலில் உள்ள தகவல்களை இ...
No comments:
Post a Comment