உன் சூழ்நிலை எப்படியிருந்த போதிலும், உன் மன
உறுதியால் உலகையே வெற்றி கொள்ளும் உத்தம
ஆத்மா நீ. அச்சம், கவலை குழப்பம் என்னும்
மாயைகளை வெல்லும் மகாவீரனும் நீயே. எப்பொழுதும்
நீ இறைவனின் கழுத்து மாலையின் களங்கமற்ற
மணியாய்த் திகழ்கிறாய்.
- பிரம்மா பாபா
“நீ உருப்படவே மாட்டாய், ஐன்ஸ்டீன்!
அறிவாளிகளுக்கெல்லாம் அறிவாளி என்று உலகமே கொண்டாடிய வரும், நவீன விஞ்ஞானத்தின் தந்தை எனக் கருதப்படு பவரும், சார்பியல் தத்துவம், அணுநிறை .ஆற்றல் சமானக்கொள்கை, குவாண்டம் கொள்கை போன்ற வற்றை உலகுக்குத் தந்தவருமாகிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை அவர் சிறுவராய் இருந்தபோது அவரது வகுப்பாசிரியர் இப்படித்தான் திட்டுவாராம்.
பிற்காலத்தில் ஐசக் நியூட்டனையே தன் சட்டைப்பையில் போட்டுக் கொள்ளும் பிரபஞ்ச விஞ்ஞானியாக ஐன்ஸ்டீன் உருவாகப் போகிறார் என்று அந்த அப்பாவி ஆசிரியருக்கு மட்டுமல்ல, அவரது பெற்றோருக்குக் கூடத் தெரியாது. காரணம், சிறு வயதில் ஐன்ஸ்டீன் அப்படியொன்றும் பிரமாதமாகப் படிக்கவில்லை. உருவ அமைப்பிலும் நோஞ்சானாகவே விளங்கினார். அவருடைய பௌதிக் கோட்டுபாடுகள் வெறுமைகளை உள்ளடக்கியனவாகக்கூட இருந்தன. ஆனாலும், விண்வெளி-கால ஒருமையை (Space - time continuum) கண்டறிந்த ஐன்ஸ்டீன் மனிதகுலத்தின் பெருமை தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்கு விண்ணளவு விஸ்வரூம் எடுத்து சரித்திரம் போற்றிய சாதனைச்சிகரமாக உயர்ந்து நின்றார் ஐன்ஸ்டீன். இதற்கு பல்வேறு வகையான தாழ்வு மனப்பான்மை சூழல்களை அவர் வெற்றி கொள்ள வேண்டியிருந்தது.
பொதுவாக, மிகவும் கண்டிப்பான பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவயிருக்குத் தங்களையுமறியாமல் ஒரு வித தாழ்வு மனப்பான்மை உண்டாகிவிடும். ஐன்ஸ்டீன் சந்தித்த முதல் தாழ்வு மனப்பான்மை இது தான். 1889-ல் முதன்முதலாக லூய்ட்போல்ட் ஜிம்னாசியம் என்ற கண்டிப்பு மிகுந்த பள்ளியில் ஐன்ஸ்டீன் நுழைந்தார். படிப்பில் கொஞ்சம் பின்தங்கியவராகவும், எப்பொழுதும் உள்நோக்கு முகமானவராகவும், இந்த உலகைப் பற்றிய சில கொள்கை இழைகளைத் தன்னகத்தே பொதிந்து வைத்தவராகவும் காணப்பட்ட ஐன்ஸ்டீன் சாதாரண குழந்தைகளிலிருந்து வேறுபட்டவராக எப்பொழுதும் இருக்கவில்லை. அப்பள்ளியின் கண்டிப்பு ஐன்ஸ்டீனுக்கு அடியோடு பிடிக்கவில்லை என்பது மட்டும் நிஜம். கண்டிப்பு எந்தக் குழந்தைக்குத் தான் பிடிக்கும்?
ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு நியூயார்க் பல்கலைக்கழகத்தின் 72-ஆம் பட்ட மளிப்பு விழாவில் பேசும்போது ஐன்ஸ்டீன், “பயம், கட்டாயம், செயற்கை அதிகாரம் ஆகிய வழிமுறைகள் வாயிலாக செயல்படுவது என்பது ஒரு பள்ளிக்கு மிகவும் மோசமான விஷயம். இது போன்றதொரு கையாளல் மாணவர்களின் ஆரோக்கியமான உணர்வுகள், நேர்மை மற்றும் தன்னம்பிக்கையை சாகடித்துவிடுகிறது. இந்தப் பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது வெறும் அடிமை பயந்தாங்கொள்ளிகளைத்தான்,” என்றார்.
இதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறுமிக்கு எழுதிய கடிததத்தில் “உன்னுடைய கையெழுத்துப் பிரதியை உன் மகன்கள், மகள்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துக் கொள். ஏனெனில், அவர்களும் அதைப் பார்த்து ஆறுதல் அடைவார்கள். அப்போது அவர் களைப் பற்றி அவர்களது ஆசிரியர்கள் என்ன அபிப்ராயப்பட்டார்கள் என்பதைப் பற்றி யெல்லாம் அவர்கள் கொஞ்சம் கூட கவலைப் படவே மாட்டார்கள்,” என்று ஐன்ஸ்டீன் எழுதினார்.
“லூய்ட்போல்ட் ஜிம்னாசியம்” மாணவர் களுக்கு வேப்பங்காயாகக் கசந்தாலும் ஒரு நல்ல விஷயத்தை ஐன்ஸ்டீனுக்குத் தந்தது. எதையும் எப்பொழுதும் நம்பாமல் கேள்வி கேட்பவராக ஐன்ஸ்டீனை அது மாற்றியது.
அல்ல. அந்தப் பள்ளி அவரை மாற்ற வில்லை, அப்படி பள்ளிக்கூடம் அவரை மாற்றியது என்றால், அவருடன் படித்த, அவருக்கு முன்பும் பின்பும் படித்த அத்தனை மாணவ மாணவிகளையும் அப்பள்ளி மரபு பௌதிகத்தின் அஸ்திவாரத்தை அசைத்துப் போடும் அசகாயசூரர்களாக மாற்றியிருக்க வேண்டுமே! ஐன்ஸ்டீன் தன் பள்ளிப் பருவ தாழ்வுமனப்பான்மையை வென்று, எப்பொழுதும் எதிலும் எதிரும் புதிருமாகச் சிந்தித்தல் என்ற அற்புதத் திறமையை வளர்த்துக் கொண்டார் என்பது தான் சரி. இந்தத் தன்மையால் தான், சில நூற்றாண்டுகளாக பல மனிதர்கள் வேதவாக்காக ஏற்றுக்கொண்ட விஷயங்களைக் கேள்வி கேட்டார் ஐன்ஸ்டீன்.
பதினாறு வயதில் ஐன்ஸ்டீன் தனது மாமாவான சீசர் கோக்குக்கு சிறப்பு சார்பியல் தத்துவமாகத் தான் பிற்காலத்தில் உருவாக்கிய கருத்துக்களைக் கடிதங்களாக வரைந்திட ஆதாரமாக அமைந்தது ஐன்ஸ்டீனின் “ஏன், எதற்கு, எப்படி” என்றெல்லாம் கேட்கவைத்த தன்னம்பிக்கை தான். தலைக்குமேலே வானத்தில் பறந்து சென்ற ஒரு பறவைக் கூட்டத்தைப் பார்த்து சிறுவயதிலேயே ஐன்ஸ்டீன் அடித்த காமெண்ட்: “நமக்குத் தெரியாத சில கதிர்வீச்சுக்களை அவை பின்பற்றுகின்றனவோ என்னவோ.”
ஐன்ஸ்டீனுக்கு பன்னிரண்டு வயது ஆகியபோதே அவரது அசாத்திய தன்னம்பிக்கை அவருக்கு ஒரு ஆழமான ஆன்மீகத்தன்மையை உருவாக்கியதாக அவரே பின்னாளில் கூறியுள்ளார். “மனிதர்களைச் சாராமல் தனித்திருக்கும் இந்தப் பெரிய உலகம் நம் கண்முன்னே, குறைந்த பட்சம் நமது ஆய்வுக்கும் சிந்தனைக்கும் ஓரளவாவது விடைகான முடியும் ஒரு சாசுவதமான புதிர்போல நிற்கிறது. இந்த உலகைப் பற்றிய சிந்தனை ஒரு முதிர்ச்சியைத் தருகிறது. நான் மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்த பல மனிதர்கள் இந்த உலகின் மீதான தங்கள் ஈடுபாடு காரணமாக ஒரு வகை உள் விடுதலையையும், பாதுகாப்பையும் அடைந்திருந்தார்கள்,” என்று பிற்பாடு ஐன்ஸ்டீன் கூறுவதற்கு அடிப்படையாக அமைந்ததும் இந்த ஆன்மீகத் தன்மை தான்.
“விதிகளுக்குள்ளே இருந்த விதியை” ஊடுருவ முடியும் என்ற அவரது நம்பிக்கை தான் பிற்பாடு ஆன்மீகம் விட்டுச் சென்றஇடத்திலிருந்து விஞ்ஞானத்தை எடுத்துச் செல்ல ஐன்ஸ்டீனுக்கு தூண்டுதலாக அமைந்தது. ஒளி எப்படி துகளாகவும், அலையாகவும் இருக்கிறதோ அதே போன்றே முயல்பவர்கள் அந்த இரு நாணப் பக்கங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற முதிர்ச்சியை அவர் பெற்றதற்கும் இதுவே காரணம்.
சாமான்ய மனிதர்கள், ஏன் விஞ்ஞானிகள், நம்பிய வழக்கமான விஷயங்களை ஐன்ஸ்டின் நம்பவில்லை, அவரது நம்பிக்கை தனிரகம், அஹ்ர் “ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இயற்கையின் சீர்மையை” (pre established harmony) நம்பினார், அதனால் தான் அற்ரைப் பொறுத்த வரை “கடவுள் இயற்கையுடன் பகடை விளையாடுவதில்லை.”
தன்னம்பிக்கையில் விளைந்த அவரது மன ஒருமுகப்பாடும் மிக அபாரமானதே. ஐன்ஸ்டீன் உடை, உணவு, கேளிக்கை போன்றவற்றில் ஈடுபாடு செலுத் தாமல் இருந்ததற்கு இது தான் காரணம். மேலும். ஒரு முறை பெர்லின் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பெண் விஞ்ஞானியுடன் நடந்து கொண்டிருந்த போது, “நான் மனிதர்களிடம் அதிகமாக வெற்றி பெறவில்லை. நான் ஒரு குடும்பம் சார்ந்த மனிதனும் அல்ல. என் அமைதியை நான் விரும்புகிறேன். கடவுள் இந்த உலகை எப்படி உருவாக்கினார் என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த அல்லது அந்த நிகழ்ச்சியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் கடவுளின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், மற்றவை யெல்லாம் விவரணங்கள் தானே,” என்று அவர் குறிப்பிட்டார். படைப்பின் ரகசியத்தை அறிவதையே தனது வாழ்வின் தாரக மந்திரமாக அவர் கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து புலப்படுகிறதல்லவா?
இவையெல்லாம் அவரது பள்ளிப் பருவத் துக்குப் பல ஆண்டுகள் பின்னர் நிகழ்ந்தவை. லூய்ட்போல்ட் பள்ளியில் ஐன்ஸ்டீன் கல்வியை முழுமையாக முடிக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. ஆனால், அவருக்கு என்னவோ அந்தப் பள்ளியை விட்டு வெளியேறியது இனிப்பாக இருந்திருக்கலாம். நரம்பியல் பிரச்சனை அவருக்கு இருந்தது என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் தருவதற்கு முன்பே, அவர் மற்ற மாணவர்களையும் கெடுக்கிறார் என்று சொல்லி அவரைப் பள்ளியிலிருந்து விலக்கிவிட்டார்கள்.
ஆல்ப்ஸ் மலையைக் கடந்து இத்தாலியில் வேறு ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டபோது, ஐன்ஸ்டீன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. ஏறக்குறைய இந்தக் கால கட்டத்தில், அதாவது தனது பதினாறாவது வயதில், ஒருவர் ஒளியின் வேகத்தில் மற்றொரு ஒளிக்கதிரைப் பின்பற்றினால் என்ன ஆகும் என்று சிந்தித்து ஒரு வெளியில் அலைவுறும் அதே நேரத்தில் ஓய்வு நிலையில் இருக்கும் மின்காந்தப் புலமாக (”a spatially oscillating electromagnetic field at rest”) அது இருக்கும் என்று தான் கண்டுணர்ந்ததாக பின்னாளில் ஐன்ஸ்டீனே சொல்லியிருக்கிறார்.
பள்ளிக்கூட பாடத்திட்டங்களையும் தாண்டி கிர்ச்சாஃப், ஹெல்மோல்ட்ஸ், ஹெர்ட்ஸ், மேக்ஸ்வெல், பாய்ன்கேர் போன்றோரின் பௌதிகப்புத்தகங்களையும், கணித முறை களையும் ஒரு புரட்சியாளனின் தன்னம்பிக்கை யோடு கற்றார் ஐன்ஸ்டீன், இவ்வளவு முயன்றும் புதிய பள்ளிக்கூடத்திலும் ஐன்ஸ்டீனுக்கு ஆசிரியர்களைப் பொறுத்த மட்டில் ஏமாற்றமே மிஞ்சியது. யாரும் அவரை கெட்டிக்கார மாணவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு சட்டென்று வாழ்க்கையின் நுழைவாசலில் அனாதையாக நின்று கொண்டிருந்ததைப் போல் தான் உணர்ந்ததாக ஐன்ஸ்டீன் நண்பர் மார்சல் கிராஸ்மேனின் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார். படித்துப்பட்டம் வாங்கிய பிறகு கூட ஐன்ஸ்டீனுக்கு அவர் விரும்பிய ஆசிரியப் பணி கிடைக்கவில்லை
!
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்"
Subscribe to:
Post Comments (Atom)
சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...

-
இன்று காலை,டொயோடா கார் தயாரிப்பு நிறுவனம் சந்தித்து வரும் பிரச்சினைகளைக் குறித்து வெளியாகி இருந்த செய்திக் கட்டுரைகளைப் படித்துக் ...
-
1. உளவளத்துணை என்னும்போது தனிப்பட்ட ஒருவர் தன்னுடைய பிரச்சினை, துன்பம் என்பவற்றைத் தானே தீர்த்துக்கொள்ள இன்னுமொருவர் உதவும் நடவடிக்கை. 2. அ...
-
ஆழந்து மூச்சு விடுங்கள் – கே.எஸ்.சுப்ரமணி ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்...
No comments:
Post a Comment