எவ்வளவுதான் சம்பாதித்தாலும், அறிவாளியாக இருந்தாலும், புகழோடு இருந்தாலும், விரும்பியது எல்லாவற்றையும் அடைந்தாலும் மனதில் ஏதோ ஒரு வெறுமை குடி கொண்டிருப்பதை எல்லாருமே உணருவார்கள். வெறுமை மனதில் குடியேறும் போது வெறுப்பும், விரக்தியும் வந்து விடுகின்றன.
மனநிலையில் மாறுதல் ஏற்படும்போது அதையொட்டி நடத்தையிலும் மாறுபாடுகள் வந்து விடுகின்றன. . பிறகு கவலை, துக்கம், மன இறுக்கம், டென்ஷன் இப்படி ஒவ்வொரு பிரச்சினைகளாக உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டு நம்மை நாமே நோயாளி களாக்கிக் கொள்கிறோம் . இதைத் தவிர்ப்பதற்காக யோகா, தியானம் என்பன போன்ற மனவளக்கலை முறைகளை நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கிறhர்கள். அவற்றுள் ஒன்றுதான் சக்கர தியானம்.
இவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். .
நமது உடலில் புலன்மறை சக்திகள் உள்ளன. இவற்றை எனர்ஜிஎன்கிறார்கள்.
அக்குபஞ்சரில் இந்த எனர்ஜியை யின்-யாங் என்பார்கள்.
நம் முன்னோர்கள் பிராணமய கோசம் அல்லது சக்திகோசம் என்றார்கள். இந்த சக்தி கடக்கும் பல வழிகள் உள்ளன. அக்கு பஞ்சரில் இது போன்ற சக்தியை மெரிடியன்கள் என்பார்கள். அதேபோல இந்த சக்திகள் எல்லாம் பல வழியாகத் திரண்டு, உள்ள{றும் ஆற்றலைத் தூண்டியெழுப்புகிறது. இந்த உள்ளான ஆற்றலுக்கு குண்டலினி என்று பெயர்.
குண்டலினி விழிப்புடன் இருக்கும் நிலையில் எல்லா கோசங்களுக்கும் சீரான ஆற்றல் பாய்வதால், அவை பாயும் உறுப்புகள் மற்றும் மனம், ஒட்டுமொத்த உடல் ஆகியவை ஆரோக்கியமாக இருக்கிறது.. இந்த ஆற்றலை நாம் ஏன் எளிதில் அடைய முடிவதில்லை? நமக்குள் இருக்கும் ஆற்றலை நாம் வெளியே கொண்டு வரத் தெரிந்து வைத்திருப்பது இல்லை, அல்லது அதற்காக முயற்சிப்பது கிடையாது. மேலும் முறைகேடான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், எதிர்மறையான செயல்கள் ஆகியவற்றினால் இந்த ஆற்றலை நாம்
வெளியே கொண்டு வர இயலுவதில்லை. மனதை ஒருமுகப்படுத்தி இந்த ஆற்றல்களை வெளியே கொண்டு வர வேண்டும். அப்போது ஆழமான மன நலன் கிடைக்கும்.
சக்கர தியானத்தில் மூன்று படிகள் உள்ளன. உள்ளத்தோடு உச்சரிக்கும் வார்த்தைகள் இவை மனதை ஒருமுகப்படுத்தும், அமரும் விதம், இவை உடலைத் திடப் படுத்தி மனதை ஒருமைப்படுத்த உதவும். அடுத்தது ஆட்காட்டி விரலை மடக்கி கட்டைவிரலின் அடிப்பாகத்தில் வைப்பது போன்ற முத்திரை நிலைகள், இவற்றை முறையாகச்செய்யும் போது மூளையின் பல பகுதிகள் ஊக்குவிக்கப்படுவதால் மனதில் உழன்று கொண்டிருக்கும் பிரச்சினைகள் படிப்படியாக மறைந்து, டிப்ரெஷ்ஷன் போன்ற எண்ணங்கள் அகன்று மனம் ஒரு நிலைப்படும்.
சக்கர தியானத்திலுள்ள ஏழு சக்தி நாளங்களைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.;
*மூலாதாரம் *
பிறப்புறுப்புக்கும், ஆசன வாய்க்கும் இடையில் செல்லும் சக்திப்பாதை. இந்தச் சக்தி அதிகரித்தால் உயிர் ஆற்றல் அதிகரிக்கும்.
இச்சக்தி தொடர்பான உறுப்புகள்„ சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை.
அடையாளம் நான்கு இதழ் சிவப்புத் தாமரை, கறு;ப்பு நிற லிங்கம் கயிரால்
கட்டப்பட்ட குண்டலினி சர்ப்பம். .
*சுவாதிஷ்டானம்*
பிறப்புறுப்புக்கு மேல் செல்லும் சக்திப் பாதை. இந்தச் சக்தி அதிகரித்தால்
சுயக் கட்டுப்பாடு, நுண்ணுணர்வு அதிகரிக்கும்.
தொடர்பான உறுப்புகள்„ கருப்பை, பிறப்புறுப்புகள், பெருங்குடல். அடையாளம்„ ஆரஞ்சு நிறத்தில் ஆறு தாமரை, உள்ளே நீல பிறைச்சந்திரன்
*மணி பூரகம்*
தொப்புள் வழியாகச் செல்லும் பாதை. இது உடலின் சக்திiயும், ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்தி விழிப்படையச் செய்கிறது.
இது தொடர்பான உறுப்புகள் கல்லீரல், வயிறு, சிறுகுடல், மண்ணீரல். அடையாளம் பத்து இதழ் கொண்ட மஞ்சள் நிறத் தாமரை, மையத்தில் அக்னி சுவாலை உடையது.
*அனாஹதம்*
மார்பு நடுவில் செல்லும் இச்சக்திப் பாதையால் உணர்வுகள் பலப்படும். அன்பு,
இரக்கம் போன்றவை மேலோங்கும். இது தொடர்பான உறுப்பு இதயம்..
அடையாளம் பச்சை நிறத்தில் 12 தாமரை இதழ்கள் கொண்டது. மையத்தில் அறுகோணச் சக்கரமும், ஜோதியும் கொண்டது.
*விஷுத்தி*
தொண்டைப் பகுதியில் செல்லும் சக்திப்பாதையிது. மறைவான ஆன்ம சக்தியை வெளிப்படுத்தும், புனிதத் துவத்தை வளர்க்கும். இச்சக்தி தொடர்பான உறுப்புகள் தொண்டை மற்றும் நுரையீரல்.
அடையாளம்„ பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட, உள்ளே நீல நிறத்தையுடைய அடர்நீலச் சக்கரம்
*ஆக்ஞேயம் *
புருவ மத்தியில் செல்லும் பாதையிது. நினைவாற்றலை, விழிப்புணர்வை,
ஒருமுகப்படுத்தும் திறனை அதிகமாக்கும். கண்கள், நெற்றியின் கீழ்ப்பகுதியை உள்ளடக்கியது இந்தப் பாதை.
அடையாளம்„ இரண்டு தாமரை கொண்ட கருநீல நிறத்தையும். இடப்பக்கம் சந்திரனையும்., வலப்பக்கம் சூரியனையும், நடுவே லிங்கத்தையும் அடையாளமாகக் கொண்டது.
*சகஸ்ராரம்*
உச்சந்தலையில் செல்லும் சக்தி. இது மலர்ந்தால் பிரபஞ்ச உணர்வுடன் முழுமையாக ஒன்றுபடுத்தும் நிலை வரும்.
இது தொடர்பான உறுப்பு மூளை. அடையாளம்„ ஆயிரம் தாமரை இதழ்கள் ஊதா நிறத்திலும், அடர் பொன்னிறம்
கொண்ட ஜோதிர் லிங்கத்தை மையத்திலும் கொண்டது.
ம்பிக்கை நெஞ்சில் கொண்டால் ஆழ்கடலும் தாண்டலாம்! கணுவெல்லாம் இனித்திருக்கும் கரும்பையும் சுவைக்கலாம்!
நம்பிக்கை நெஞ்சில் கொண்டால் ஆழ்கடலும் தாண்டலாம்! கணுவெல்லாம் இனித்திருக்கும் கரும்பையும் சுவைக்கலாம்!
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்"
Subscribe to:
Post Comments (Atom)
சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...

-
இன்று காலை,டொயோடா கார் தயாரிப்பு நிறுவனம் சந்தித்து வரும் பிரச்சினைகளைக் குறித்து வெளியாகி இருந்த செய்திக் கட்டுரைகளைப் படித்துக் ...
-
1. உளவளத்துணை என்னும்போது தனிப்பட்ட ஒருவர் தன்னுடைய பிரச்சினை, துன்பம் என்பவற்றைத் தானே தீர்த்துக்கொள்ள இன்னுமொருவர் உதவும் நடவடிக்கை. 2. அ...
-
ஆழந்து மூச்சு விடுங்கள் – கே.எஸ்.சுப்ரமணி ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்...
No comments:
Post a Comment