துன்பங்கள் என்பது நிரந்திரம் அல்ல. ஒருவர் காலம்
முழுவதும் துன்பகரமான வாழ்க்கையை மட்டுமே
அனுபவித்து கொண்டு இருக்க மாட்டார்.
சற்று சிந்தித்து பார்த்தல் தெரியும்.
இந்த உலகத்தில் உள்ள எல்லா செயல்களுமே
இரட்டை இரட்டையாகத்தான் இருக்கும்.
உலகத்தில் படைக்கப்பட்ட அணைத்து பொருட்களுமே
இந்த விதியின் அடிப்படையில்தான் இருக்கும்.
மின்சாரத்தில் positive negative என்ற இரண்டும் இருந்தால்தான்
ஒளியை நாம் பெற முடியும். அது போன்று வாழ்க்கையில்
இன்பமும் துன்பமும் இருந்தால்தான் வாழ்க்கை என்ற ஒளி
விளக்கு எரிய முடியும்.
ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் நல்ல தொரு சமுதாயத்தை
உருவாக்க முடியும்.
பூஜயமும் ஒன்று என்ற இரண்டும் இல்லை என்றால்
கணிபொறி இயங்க முடியாது.
முடியாது என்ற சொல் இருந்தால்தான் முடியும் என்ற
வைராக்கியமே பிறக்கும்.
இந்த உலகத்தில் உள்ள பெரும்பால பணக்காரர்களின்
ஆரம்ப கால வாழ்க்கையை நினைத்து பார்க்க வேண்டும்.
அவர்கள் பிறக்கும் போதே பணக்காரர்களாக பிறக்க வில்லை.
உண்ணும் உணவுக்கும் உடுக்கும் உடைக்கும் இருக்கும்
இருப்பிடத்திற்கும் கண்டிப்பாக
மிகவும் கஷ்டப்பட்டு இருப்பார்கள் .
மிக பெரிய பிரபலங்களாக வலம் வந்து மறைந்த அம்பானி, MGR,
சிவாஜி கணேசன் போன்றவர்களின் சுய சரிதையை படித்தீர்கள்
என்றால் இந்த உண்மை புரியும்.
அவர்களுடைய கடுமையான உழைப்பின் காரணமாகவும்
நாமும் இந்த உலகத்தில் முன்னேற முடியும் என்ற
நம்பிக்கையின் காரணமாகத்தான் பணக்காரர்களாகவும்
பிரபலமாகவும் வாழ்ந்து மறைந்தனர்.
No comments:
Post a Comment