August 10, 2013

திறமை இருந்தும் ஏன் வெற்றி பெற முடிவது இல்லை?


நிறைய பேருக்கு திறமை இருக்கின்றது.
ஆனால் திறமை இருந்தும் அவர்களால் வெற்றி பெற முடிவது
இல்லை.காரணம் அவர்கள் திறமை மீது அவர்களுக்கே
நம்பிக்கை இல்லாமல் இருப்பதுதான்.

உங்களுடைய திறமையை வைத்து நிச்சயமாக
வெற்றி அடையலாம் என்று நீங்கள் நினைத்தால்
நிச்சயமாக உங்களால் வெற்றியடைய முடியும்.

நம்பிக்கையை உங்களுக்குள் வளர செய்வதிற்கு
பெரும் பங்கு உங்கள் மனதுதான்.

விரக்திகள் சில நேரத்தில் உங்கள் வெற்றி இலக்கை
அடைய தடை செய்யும். அவற்றை பொருட் படுத்தவே கூடாது.

தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தின் மூலமாக மிக சுலபமாக
விரக்தியை விரட்டி விடலாம். நம்மாலும் நம் திறமையினாலும்
வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும் என தீவிரமாக
நினைக்க வேண்டும்.

எந்த துறையில் திறமை அதிகம் உள்ளது என்றது
நீங்கள் என்று நினைக்கிறீர்களோ அந்த துறையில்
நிச்சயமாக உங்களால் வெற்றி அடைய முடியும்.
எல்லா துறைக்குமே இந்த உலகில் வெற்றியடைய வாய்ப்பு உண்டு.

உங்களையும் உங்கள் மனதையும் தயார் படுத்தி கொண்டால்
நிச்சயமாக உங்கள் திறமையை வைத்து உங்களால்
வெற்றி அடைய முடியும்.

தன்னம்பிக்கை ஒருவரது மனதில் தழைக்க தியானம்
பெரிதும் உதவும். தியானம் பழகும்போது மனதில் உள்ள
எதிர் மறையான சிந்தனைகள்(Negative  thinkings)  களையப்பட்டு
ஆக்க பூர்வமான (Positive thinkings) சிந்தனைகள் விதைக்க படுகின்றன.

நம்மாலும் வெற்றியடைய முடியும் நம்மால் வெற்றி
அடைய முடிய வில்லை என்றால் வேறு யாரால் வெற்றி பெற
முடியும் என்ற ஆக்க பூர்வமான சிந்தனைகளை (Positive thinkings)
தியானம் விதைக்கின்றது.
 
உங்களையும் உங்கள் மனதையும் தயார் படுத்த
தியானம் நிச்சயமாக உதவும்.

No comments:

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...