இறையருளின் பெருங்கருணையும் இந்த நோக்கத்திற்கு இசைவாக ஐம்புலன்களையும் அதற்கும் மேலாக இந்த உலகை துய்ப்பதற்காக அறிவையும் தந்து உலகத்தில் அதற்கு தேவையான பொருட்களையும் உருவாக்கி உவந்தளித்திருக்கிறது.
உலக உயிர்கள் எல்லாம் உவகை பெறுவது என்பது உள்ளத்து ஆசைகளை, உடலின் தேவைகளை விருப்பங்களை எண்ணங்களை அடைகிறபோது உண்டாகிறது.
விரும்பியதை அடைவதே வெற்றி. வெற்றியே மகிழ்ச்சியும், ஆனந்தமும் ஆகிறது.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அறிவியல் பாடத்திலும், கணக்குப் பாடத்திலும் விடைகளைக் கண்டுபிடிக்க சூத்திரங்களைப் பயன்படுத்தி விரைவாகவும், எளிதாகவும் விடையை காணுதல் போல் வெற்றிக்கும் அதோடு இணைந்த ஆனந்தத்திற்கும் ஒரு சூத்திரம் (ஊர்ழ்ம்ன்ப்ஹ) இருந்தால் அல்லது கண்டுபிடித்தால் நமக்கெல்லாம் நலம் விளையும் அல்லவா?
அந்த வெற்றிக்கான உபாயம் தான் Formula என்கிற ஆங்கில இணைச்சொல்லின் எழுத்துக்களை முதலெழுத்தாக கொண்ட சொற்களின் பொருளை வாழ்க்கையில் உருவாக்கி, கற்று கடைபிடித்தல் வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்.
S - SELF - CONFIDENCE = தன்னம்பிக்கை
U - UNDERSTANIDNG INTER = மனித உறவுகளை புரிந்து கொண்டு
PERSONAL RELATIONSHIPS மேம்படுத்திக் கொள்ளுதல்
C - COMMUNICATION SKILLS = கருத்துத் தொடர்பு ஆற்றல்
C - CREATIVITY = புதியன படைக்கும் கற்பனைத்திறன்
E - ENERGETIC ATTITUDE = உற்சாகமான, ஊக்கமான
சுறு சுறுப்பான இயக்க நிலை
S - SUPERB MEMORY = சிறந்த நினைவாற்றல்
S - SELF MOTIVATION = தன்னைத் தானே செயலூக்கப் படுத்திக்
கொள்ளும் முனைப்பு
இதுகாரும் வெற்றிச் சூத்திரத்தின் முதல் மூன்று உபாயங்களை முந்தைய இதழ்களில் கட்டுரைகளாக கண்டோம்.
நான்காவது நிலையாக Creativity என்கிற கற்பனை ஆற்றல், புதியன படைக்கும் படைப்பாற்றல் வெற்றிக்கு மிக இன்றியமையாததல்லவா?
நன்றாக ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் இந்த கற்பனைத்திறன்தான் அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படையாக வாழ்வின் எல்லா நிலைகளிலும் பயன்படுகிறது.
சொல்லப்போனால் கற்பனையே உலகை ஆட்சி செய்கிறது.
கற்பனை என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது - கற்பனை என்பது நிஜமல்ல - நிழல் போன்றது. கற்பனை என்பது உண்மையல்ல - பொய் - என எண்ணுவதால் உலகியலார் கற்பனையை ஒரு பொருட்டாக கருத மாட்டாமல் எனையோர்க்கும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறாமல் ஏளன மனோநிலையில் புறக்கணிக்கின்றனர்.
“அவன் பகல் கனவு காண்கிறான், கற்பனை உலகில் சஞ்சரிக்கின்றான். இதெல்லாம் வேலைக்காகாது” என்று எதிர்மறை விமர்சனங்களை நம் வாழ்க்கை நடைமுறையில் காணவும் கேட்கவும் அனுபவித்திருக்கிறோம்.
நிழல் என்பது நிஜமில்லைதான் ஆனாலும் நிஜமில்லாத நிழல் உருவாக நிஜமாக வெளிச்சம் அவசியமாகிறது. நிழல் என்கிற பொய்த் தோற்றத்திற்கு வெளிச்சம் என்கிற நிஜம் அடிப்படையாகிறது. நிழல் என்கிற பொய் இருப்பதனால் வெளிச்சம் என்கிற நிஜம் நிச்சயமாக இருக்கிறது.
கற்பனை என்பது பொய் தோற்றமாக தோன்றினாலும் நிதர்சனத்தின் வெளிப் பாடுகளே அவைகள்.
கற்பனையின் மூலமாக உண்மைகளை உருவாக்குவதும் அடைவதும் எளிது.
இன்றைக்கு நாமிருக்கும் இந்த உலகம் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணமே கற்பனைதான். கற்பனை வளம் பற்றி குறிப்பிடுகின்றபோது அதனை கற்பனை ஆற்றல் என்றும் கற்பனா சக்தி என்றும் அழைக்கின்றோம்.
கற்பனையைத்தான் படைப்பாற்றல் என்கிறோம். கற்பனையில்லாமல் புதியன இல்லை.
இந்த உலகில் வெற்றிபெற்ற எல்லா மனிதர்களின் வெற்றி வழியை பாருங்கள். கற்பனையை பயன்படுத்ததிய மனிதர்களே மாபெரும் வெற்றியை செல்வத்தை, வளமான வாழ்க்கையை அடைந்திருக் கிறார்கள்.
கதை புனைகிற கதாசிரியர்களும், நாவலாசிரியர்களும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றதும், புகழ் சேர்த்ததும் கற்பனையினாலன்றோ!
உலகமகா கவிஞர்களும் மக்கள் உள்ளங்களில் இடம் பிடித்ததும் இந்த கற்பனையினால் தானே.
புதிய புதிய இயந்திரங்களையும் கருவிகளையும் உருவாக்கிய அறிவியல் அறிஞர்களுக்கும் கற்பனைதான் அடித்தளம்.
இன்றைக்கு பாமர மக்களின் வாழ்க்கையில் பாங்காக இடம் பிடித்திருக் கின்ற திரைப்படத் துறையில் இயக்குனர் களாகட்டும், திரைக்கதை வடிவமைப்பவர் களாகட்டும், பாடலாசிரியர்களாகட்டும், காட்சி அரங்குகளை அமைப்பவர்களா கட்டும் கற்பனையில் வல்லவர்களே
திறம் மிக்கவர்களே இடம் பிடிக்கிறார்கள், பாராட்டப்படுகிறார்கள், வளமாக வாழ்கிறார்கள்.
கற்பனையாற்றலை அலட்சியம் செய்யக் கூடாது. அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து செயல்பாடுகளிலும் கற்பனையும் புதிய உத்திகளையும் பயன்படுத்துகிறபோது தானே இன்பமும் மகிழ்ச்சியும் உண்டாகிறது.
உடுத்துகிற ஆடையின் வண்ணங்களிலும் -வடிவமைப்பிலும் புதியன புகுத்துகிறவர்கள் வணிக வெற்றியை பெரிய அளவில் ஈட்டுகிறார்கள்.
இதனால்தான் “You can win”என்கிற வெற்றி விளக்க புத்தகத்தின் ஆசிரியர் “ஷிவ் கெரா” இப்படி சொன்னார் போலும்.
“Winners Don’t Do Different Things
They Do Things Diffrently” என்று.
வெற்றியாளர்கள் வேறு வேறு வகையான தொழில்களைச் செய்து வெற்றி பெறுவதில்லை. அனைவரும் செய்வதிலேயே சற்று வேறுபட்டு வித்தியாசமாக செய்து வெற்றியாளர்களாகிறார்கள்.
வேறுபட்டு வித்தியாசமாக செய்வதற்குத் தான் கற்பனையாற்றல் தேவைப்படுகிறது. இந்தக் கற்பனையாற்றல் இயல்பிலேயே பிறப்போடு அமைந்த ஒன்று. இருந்தாலும் பயிற்சியின் மூலம் இதை வளர்த்துக் கொள்ள இயலுமா? வழியிருக்கிறதா? என்பது குறித்துதான் ஆராய்ச்சி தேவைப் படுகிறது.
கற்பனைக்கு நிலைக்களன் மனிதர்களின் வலது பக்கத்து மூளை. வலது பக்கத்து மூளையை பயன்படுத்தி கற்பனையாற்றலை, கண்டுபிடிக்கும் திறனை உருவாக்குவது பற்றி
No comments:
Post a Comment